Wednesday 22 April 2015

ரௌட்டர் (Router) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

ரௌட்டர் சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நமக்கு வழங்கப்படும் இணைய தொடர்பினைப் பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இணையத்துடன் இணைந்து கொள்ள நமக்கு ஒரு இணைய முகவரி (IP address) தேவை.
நம் வீடுகளைப் போல, ஒவ்வொரு இணைய முகவரியும் ஒன்றுக்கொன்று வேறுபாடாக இருக்கும், இருக்க வேண்டும். ஒரு ரௌட்டர், உங்கள் இணைய சேவை நிறுவனத்தால் வழங்கப்படும் பொதுவான தனி முகவரி கொண்டு உங்கள் மோடத்துடன் இணைப்பை ஏற்படுத்துகிறது. அதன் பின்னர், இந்த ரௌட்டர் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் தனியான முகவரி ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு சாதனமும் இணைய இணைப்பினைப் பெறுகிறது.

பொதுவாக, ரௌட்டர் ஒன்றில் அதனை வயர் மூலம் மற்ற சாதனங்களுடன் இணைப்பதற்கு நான்கு போர்ட்கள் (4 Ethernet ports) தரப்பட்டிருக்கும். இந்த ரௌட்டர் வயர்லெஸ் ரௌட்டராக இருக்கும் பட்சத்தில், கூடுதலாக பல வயர்லெஸ் சாதனங்களை இணைக்கலாம். இதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களையும் இணையத்துடன் தனித்தனியே இணைக்கலாம்.

ஆனால், இணைய சேவை நிறுவனம் தரும் ஒரே ஒரு இணைய சேவை முகவரி மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் ரௌட்டர் மூலம் பல சாதனங்களுக்கிடையே இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு சாதனத்தையும் ரௌட்டர் வழியே இணைத்த பின்னர், http://www.whatismyip.com/ என்ற முகவரிக்குச் சென்றால், உங்களுடைய ஐ.பி. முகவரி கிடைக்கும். இவற்றிலிருந்து எப்படி உங்களுடைய இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம். லோக்கல் ஐ.பி. முகவரி வெவ்வேறாக இருக்கும். ஒவ்வொரு சாதனமும் ஒவ்வொன்றைக் காட்டும்.

ரௌட்டர் சாதனம் கூடுதல் பாதுகாப்பினையும் அளிக்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும் உங்கள் ரௌட்டர் தனி ஐ.பி. முகவரியினை அமைத்துத் தருகிறது. ஆனால், வெளியே இருந்து உங்கள் கம்ப்யூட்டர் இணைப்பினைப் பார்ப்பவர்கள், இணைய சேவை நிறுவனம் வழங்கும் பொதுவான ஐ.பி. முகவரியை மட்டுமே அறியமுடியும். இதனால், இணைய இணைப்பு பெற்ற மற்ற சாதனங்களின் முகவரிகளை யாரும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது.

ஒரு ரௌட்டர் ஹார்ட்வேர் பயர்வால் போலவும் செயல்படுகிறது. இதன் மூலம் வெளியிலிருந்து நம் கம்ப்யூட்டருக்கு வரும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களான மால்வேர் மற்றும் வைரஸ் ஆகியவற்றிற்கு எதிரான முதல் பாதுகாப்பு அரண் வழங்கப்படுகிறது. சில ரௌட்டர்களில், இது போன்ற பயர்வால் பாதுகாப்பு வழங்கும் சாப்ட்வேர் புரோகிராம்கள் பதிந்தே வழங்கப்படுகின்றன. சிலவற்றில் மேலும் பல பாதுகாப்பு வசதிகளும் தரப்படுகின்றன. குறிப்பாக, சிறுவர்களை இணையத்தில் பாதுகாக்க, பெற்றோர்கள் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு புரோகிராம்களும் கிடைக்கின்றன.

மோடம் செயல்பாட்டினை அனைத்து ரௌட்டர்களும் கொண்டிருக்காது. ஒரு ரௌட்டர் தானாக இணைய இணைப்பினைத் தராது. ஒரு ரௌட்டர் அது ரௌட்டராகவும் மோடமாகவும் செயல்படும் என அதனைத் தயாரித்த நிறுவனம் அறிவிக்காதவரை, ரௌட்டரை மோடம் ஒன்றுடன் இணைத்தே நாம் இணைய இணைப்பினைப் பெற முடியும். இணைய இணைப்பினை வழங்கும் நிறுவனங்கள் நமக்கு மோடம் சாதனம் ஒன்றினை வழங்குகின்றன. எனவே, அதனுடன் இணைக்கலாம். ஆனால், மோடமாகவும் ரௌட்டராகவும் இயங்கும் ரௌட்டர் இருப்பின், அதில் நேரடியாக, இணைய சேவை நிறுவனத்தின் தொடர்பை இணைத்து இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.

ஒரு சிலர், இணைய சேவை நிறுவனங்களிடம் மோடத்தினை வாடகைக்குப் பெறலாமா அல்லது விலைக்கு வாங்கிப் பயன்படுத்தலாமா என்று கேட்கின்றனர். நல்ல மோடம் அல்லது ரௌட்டர்கள் பழுதடைந்து இயங்காமல் இருப்பதில்லை. எனவே ஒன்றினை, குறிப்பாக ரௌட்டர் மற்றும் மோடம் இணைந்த சாதனம் ஒன்றை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது. இணைய இணைப்பு என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், ஏன் வீணாக வாடகைக்கு மோடத்தினைப் பெற வேண்டும். அப்படி ஒன்றை வாங்கும் முன், அந்த மோடம், நீங்கள் இணைப்பு பெறும் இணைய சேவை நிறுவனத்தின் சேவையுடன் இணைந்து செயல்படுமா என்பதனை அறிந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்க வீட்டுக்கு எதிரில் செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்த தப்பிக்க...!!

Plz share too more times........
உங்க வீட்டுக்கு எதிரில் செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்த தப்பிக்க...!!  1. உங்கள் பால்கனியில் செடிகளை வளர்க்கவும்..! 2.நிறைய தண்ணீர் குடியுங்கள்..!  3.அடிக்கடி செல்போன் பயன்படுத்தாதீர்கள்..!  4.ஒரு அடி தள்ளியே உங்கள் செல்போனை வைத்திருங்கள்..!  5. ஸ்பீக்கர் போனை /ஹேண்ட ப்ரீ/ப்ளு டூத் பயன் படுத்துங்கள்..!  7 .தலையணை அடியிலோ /கையிலோ/சட்டை பாக்கெட்டில ரொம்ப நேரம் வைத்திருக்காதீர்கள்..!  8.பயன்படுத்தாத நேரத்தில் டேட்டா பேக்கேஜ்களை நிறுத்தி வையுங்கள்..!

1. உங்கள் பால்கனியில் செடிகளை வளர்க்கவும்..!

2.நிறைய தண்ணீர் குடியுங்கள்..!

3.அடிக்கடி செல்போன் பயன்படுத்தாதீர்கள்..!

4.ஒரு அடி தள்ளியே உங்கள் செல்போனை வைத்திருங்கள்..!

5. ஸ்பீக்கர் போனை /ஹேண்ட ப்ரீ/ப்ளு டூத் பயன் படுத்துங்கள்..!

7 .தலையணை அடியிலோ /கையிலோ/சட்டை பாக்கெட்டில ரொம்ப நேரம் வைத்திருக்காதீர்கள்..!

8.பயன்படுத்தாத நேரத்தில் டேட்டா பேக்கேஜ்களை நிறுத்தி வையுங்கள்..!

பென்டிரைவில் write protected பிழையை நீக்குவது எப்படி?

இன்று நாம் பயன்படுத்தும் கணினிச் சார்ந்த டிவைஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பென்டிரைவ் என்றால் அது மிகையாது. காரணம் இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதே.

மேலும் தற்போதுள்ள நவீன பென்டிரைவ்களில் (New Type of Pendrive) கோப்புகளின் அளவை மேலும் நீடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.. அதாவது பென்டிரைவில் 1GB, 2GB, 4GB, 6GB, 8 GB, என ஆரம்பித்து, தற்பொழுது 64 GB கொள்ளவு கொண்ட பென்டிரைவ்களும் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.இத்தகையப் பயன்மிக்க பென்டிரைவ்(pendrive) அல்லது மெமரிகார்ட்(memory card) போன்ற ரீமூவபிள் டிவைஸ்களை நாம் பயன்படுத்தும்பொழுது சில சமயம் cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk என்பன போன்ற பிழைச் செய்திகளைக் காட்டும்.

இவ்வாறான பிழைச் செய்திகளை(Error) வருவதற்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களே(Virus Program) காரணமாக இருக்கும்.

இதுபோன்ற பிழைச்செய்திகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry கோப்பில் வைரஸ்கள் 'கை' வைப்பதுதான். அதனாலேயே பெரும்பாலான பிழைச்செய்திகள் இவ்வாறு தோன்றும்.

write protected பிழைச் செய்தி காட்டினால் என்ன செய்வது?

1.உங்களுடைய கணினியில் Start பட்டன் அழுத்துங்கள்

2.Run விண்டோவை திறவுங்கள்.

3.அதில்

reg add "HKLM\System\CurrentcontrolSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /vWriteProtect /f/d 0

என கொடுத்து ok பட்டனை அழுத்துங்கள்.

இப்பொழுது உங்களுடைய கணினியில் உள்ள பென்டிரைவை எடுத்துவிட்டு மீண்டும் கணினியில் இணைத்து புணிபுரியத் தொடங்கலாம். இப்பொழுது Write Protected பிழைச்செய்தி தோன்றாது.


 

ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?

ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம்.
 மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domain name) அடையாளம்.  “username”மற்றும் “domain name” ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும். உதாரணமாக, ஒருவரின் ஈமெயில் முகவரி “domain name” என்று அமைந்திருக்குமானால் Gomathi என்பது ஈமெயிலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது ஈமெயில் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.  

மேற்கண்ட ஈமெயில் முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Gomathi என்பவரின் ஈமெயில் முகவரி அமைந்துள்ளது என்பதை @(at the rate of) என்பதன் மூலம் அறிந்துகொள்கிறோம். ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா? ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா? ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domain name) அடையாளம். 

“username”மற்றும் “domain name” ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும். உதாரணமாக, ஒருவரின் ஈமெயில் முகவரி “domain name” என்று அமைந்திருக்குமானால் Gomathi என்பது ஈமெயிலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது ஈமெயில் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும். மேற்கண்ட ஈமெயில் முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Gomathi என்பவரின் ஈமெயில் முகவரி அமைந்துள்ளது என்பதை @(at the rate of) என்பதன் மூலம் அறிந்துகொள்கிறோம்

SAMSUNG பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!

சாம்சங் நிறுவனத்தைப் பற்றிய சில தகவல்களை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அதாவது சாம்சங் ஒரு தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம். இதில் மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன, டேப்லெட் கணினிகளும் கிடைக்கின்றன. இவ்வளவு தான் தெரியுமா? போங்க பாஸ் இதெல்லாம் ரொம்ப பழசு...!
 
சாம்சங் நிறுவனத்தைப் பற்றிய அன்மைத்தகவல்களை உங்களுக்காகவே இங்கே வழங்கியுள்ளோம். பெரும்பாலானோருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதோ சாம்சங் பற்றிய விரிவான மற்றும் அறிய 11 தகவல்கள்...

http://img.talkandroid.com/uploads/2012/03/Samsung-Logo-800.jpg
 
  1. சாம்சங் ஆரம்பிக்கப்பட்டது 1938ல். தற்பொழுது சாம்சங் குரூப் செய்யும் வியாபாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 80ற்க்கும்  மேல்
  2. சாம்சங் நிறுவனத்தின் கட்டுமான பிரிவு தான் உலகின் உயரமானகட்டிடமான துபாயில் இருக்கும் பூர்ஜ் கலீஃபாவை கட்டியது.
  3. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் மட்டும் உலகம் முழுவதும் 370,000பணியாளர்கள் உள்ளனர்.
  4. 2011ல் சாம்சங் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் கொடுத்த சம்பளத்தின் அளவு 14.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாம்!!
  5. சாம்சங் நிறுவனம், கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவிகிதம் பங்களித்திருக்கிறது.
  6. கடந்தவருடம் சாம்சங் சாதனங்களை விளம்பரப்படுத்துவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.2000 கோடிகளை செலவழித்துள்ளது. மேலும் மார்க்கெட்டிங் செய்வதற்காக ரூ.2,500 கோடிகள்!! [கோடிகள் தோராயமாகவே இருக்கும்.
  7. 2011 ஆம் ஆண்டின் வருமானம் மட்டுமே சுமார் ரூ.1247000 கோடிகள். இதில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் வருமானம் மட்டுமே 9 லட்சம் கோடிகள் என்கிறது சாம்சங்கின் அறிக்கை.
  8. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் சென்ற காலாண்டின் நிகர லாபம் மட்டுமே 827 கோடி அமெரிக்க டாலர்கள். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,600 கோடிகள். இதே சமயம் கூகுளின் மொத்தவருமானமே 340 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே!
  9. கடந்தவருடம் மட்டும் சாம்சங் விற்பனை செய்த செல்போன்களின் எண்ணிக்கை 215.8 மில்லியன்.
  10. சாம்சங் இணையதளத்தில் செல்போன்களுக்கான பிரிவில் மொத்தம் 145 போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் 3 போன்களை 2 வேறு வண்ணங்களில் மட்டுமே வெளியிட்டுள்ளது.[தளத்தில்]
  11. டிவி விற்பனையில் கடந்த 6 ஆண்டுகளாக சாம்சங் டிவிக்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு முதலிடத்திலேயே உள்ளது.

மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

நான்கு நாட்களுக்கு முன் வாசகர் ஒருவர் மறந்துபோன கடவுச்சொல்லை மாற்றியமைப்பு எவ்வாறு என பின்னூட்டம் மூலமாக கேட்டிருந்தார், இதோ அதற்கான பதில்.
பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது.
அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.


முதலில் நம்முடைய கணினியில் என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது பெண்ட்ரைவிலோ
பூட் செய்து கொள்ளவும். பின் பூட் செய்த சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும். கணினி பூட் ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும் அதில் Repair your computer என்பதை கிளிக் செய்யவும். 

உங்கள் கணினி உள்ள இயங்குதளங்கள் பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும். இதில் நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.



அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.
வரும் கட்டளை பலகையில் கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.
copy d:\windows\system32\sethc.exe d:\
மேலே குறிப்பிட்ட கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும். அடுத்து மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.
copy d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe
கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி கேட்கும். நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1 file(s) copied. என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும். 

பின் கட்டளை பலகையினை மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும். அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது ஒரு கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.


net user TCINFO passwd
  

இதில் net user என்பது இருப்பியல்பு கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர் கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும் கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் இனி நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.
மீண்டும் வேறொரு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமெனில், முதலிலிருந்து மீண்டும் அப்படியே செய்யவும். இது விண்டோஸ் 8 ற்கும் பொருந்தும்.

Sunday 19 April 2015

தெரிந்து கொள்வோம்

நம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன்
2G, E , 3G , H ,H+
Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம்.
➖➖➖➖➖
1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol.

இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம்.
இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும்.
➖➖➖➖➖
2). "E" இதுவும் 2G(2.5G)
EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 44மணி நேரமும்,
1GB dataவை அனுப்ப 89மணி நேரமும் ஆகும்.
இந்த "E" பயன்பாடு தான் இந்தியாவில் பொரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
➖➖➖➖➖
3). "3G" இது 3G மொபைல் இன்டர்நெட்
UMTS (Universal Mobile Telecom System) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 6மணி நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 18மணி நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
4. Symbol "H" இது 3G மொபைல் இன்டர்நெட்
HSPA (High Speed Packet Aceess) கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்
இதன் மூலம் நாம் 1GB dataவை 25நிமிட நேரத்தில் டவுன்லோடும்,
அதே 1GB dataவை 45நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
5). "H+" இதுவும் 3G மொபைல் இன்டர்நெட்
(Evolved High Speed Packet Access) கனெக்ட் செய்வதன் மூலம் வரும் குறியீடு
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 5-20நிமிடங்களில் டவுன்லோடும்,
1GB dataவை 15-39 நிமிட நேரத்தில் அனுப்ப இயலும்.
➖➖➖➖➖
6). "4G" இச்சேவை 3G network internet - LTE (Long Term Evolution) இந்தியாவில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது.
இதன் வேகம் மிகவும் அதிகம்.
இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல்(SmartPhone) தேவை.
இதன் மூலம் நாம் 1GB dataவை 3நிமிடத்தில் டவுன்லோடிங் செய்திடலாம்.
அதே 1GB dataவை அனுப்ப 5நிமிடம் மட்டுமே போதும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு முழுவமும் இச்சேவை வரும் என எதிர்பார்க்க படுகிறது.