Thursday 28 December 2017

இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கார்டு அவசியம்?


போலி அக்கவுண்ட்களை முடக்க, ஆதார் எண்ணை பேஸ்புக் அக்கவுண்டில் இணைக்கும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
சர்வதேச அளவில் நாள் ஒன்றுக்கு சுமார் 200 கோடி பயன்பாட்டாளர்களை கொண்டது பேஸ்புக். இதில் பிற நாடுகளை விட இந்தியாவில் தினமும் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம்.
இந்நிலையில் பேஸ்புக்கில் பல போலியான பெயர்களில் பல போலியான அக்கவுண்டகள் பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்துக்கு பலபுகார்கள் சென்றுள்ளது.
அதனால் அந்நிறுவனம் இந்த போலி அக்கவுண்ட்களை தவிர்க்க, புதிதாக அக்கவுண்ட் உருவாக்கும் போது ஆதார் எண்களை இணைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. மொபைல் மூலம் புதிதாக பேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்க முயற்சிக்கும் போது தற்போது ஆதார் அட்டையில் உள்ள பெயரை பதிவு செய்யும்படி கேட்கிறது.
ஆனால் ஏற்கனவே பேஸ்புக் பயன்படுத்துவர்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என இதுவரை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. தவிர, மொபைல் அப்ளிகேஷன் மூலமாக பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கும் இதுவரை ஆதார் எண்ணை பேஸ்புக் நிறுவனம் கேட்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதே அந்நிறுவனத்தின் திட்டமாக தெரிகிறது.

மீடியாடெக் பிராசசர்


மீடியாடெக் பிராசசர் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பிராசசர் சென்சியோ அறிமுகமாகியுள்ளது.

தற்போது பெரும்பாலான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் பிராசசர் மீடியாடெக் நிறுவனத்துடையது. குவால்காமுக்குப் போட்டியாக இருப்பினும் இரண்டாவது இடத்திலேயே மீடியாடெக் மதிப்பிடப்படுகிறது.


அண்மையில் குவால்காம் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 845 (Snapdragon 845) பிராசசருக்கு போட்டியாக மீடியாடெக் புதிதாக சென்சியோ என்ற புதிய பிராசசரை களமிறக்கியுள்ளது. இதில் பிரத்யேகமாக பயோ சென்சார் ஒன்று இடம்பெறுகிறது. இதன் மூலம் மொபைலை பயன்படுத்துவரின் உடல்நிலையில் சில மாற்றங்களைக் கண்காணிக்க முடியும்.

ஏர்செல் சேவை 6 மாநிலங்களில் நிறுத்தப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது.



தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம். இதன் சேவை, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் சில மாநிலங்களில் ஏர்செல், பிற நெட்வொர்க் உடன் போட்டி போட இயலவில்லை.

அதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் தனது சேவை உரிமையை புதுப்பிக்காமல் திருப்பி அளிக்க உள்ளது.

இதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மேற்கு ஆகிய இடங்களில் ஏர்செல் சேவை நிறுத்தப்படுகிறது.
இங்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் டெலிகாம் சேவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கிற்கு மாறிக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாநிலங்களில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும், போர்டபிள் கோரிக்கையை வரும் 2018 மார்ச் 10ஆம் தேதி வரை நிராகரிக்கக் கூடாது என்று ட்ராய் குறிப்பிட்டுள்ளது.

கூகுளின் புதிய இணைய விளம்பரக் கட்டுப்பாடு!


கூகுள் நிறுவனம் இணையதளங்களில் செய்யப்படும் விளம்பரங்கள் மீது புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் அதன் குரோம் புரோசர்களின் வழியே இணையதளங்களைப் பார்க்கும் போது ஊடுருவும் விளம்பரங்களைத் தடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விளம்பரக் கட்டுப்பாடு வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், கூகுளின் இந்த முடிவு குறித்து பல்வேறு இணையதள நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்தியாவில் 90 சதவீதம் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தையே கொண்டிருக்கின்றன. அவை அனைத்திலும் குரோம் புரோசர் உள்ளது.

இப்படி இருக்கு கூகுளின் விளம்பரக் கட்டுப்பாடு சிறு இணையதள நிறுவனங்களைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இது கூகுளின் 'சர்வாதிகாரப்போக்கு' என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விளம்பரத் கட்டுப்பாட்டை குறிப்பிட்ட பயனாளர் தனது மொபைலில் ஆஃப் செய்து வைக்கும் அம்சமும் இருக்கும் என்றும் கூகுள் அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Tuesday 21 November 2017

HARDDISK SENTINEL


அன்பார்ந்த வாசகர்களே!
உங்கள் கணினியின் வன் தட்டின் நிலை மற்றும் செயல்திறனை கண்கானிக்க HARDDISK SENTINEL என்னும் மென்பொருளினை நிறுவி பார்த்து கொள்ளவும்.வன் தட்டின் செயல்திறன் 25%க்கும் கீழாக சென்றால் hardisk பாதிப்புக்கு வழிவகையாக‌ அமையும்.அவ்வாறு அமையுமானால் வன் தட்டினை மாற்றி தரவுகளை பாதுகாத்து கொள்ளவும்.

Link --> https://www.hdsentinel.com/download.php



Sunday 4 June 2017

INTEL_X9 பிராசசரை வெளியிட்ட நிலையில் #AMD பிராசசார் கம்பெனி புதியதாக ஒரு ப்ராசசரை உருவாக்கியுள்ளது.அதன் பெயர் #ரைசன் (Ryzen). Zen-core architecture யினை அடித்தலமாக உருவாக்கப்பட்டது.இந்த பிராசசார் High-end PC users பொருந்தும்.4 cores/8 threads GPU-வை மையமாக கொண்டு game விளையாடும் பிரியர்களுக்காக 4K resolution மாற்றம் செய்து திரையிடும்.4 cores/8 threads இதில் 16 cores,32 threads மற்றும் quad channel DDR4 RAM memory யினை கொண்டிருக்கும்.அனைத்து மாடல்களும் அதாவது
peripherals 64 PCIe 3.0 high-speed வேகத்திலும் நான்கு கிராஃபிக்ஸ் கார்டுகளும் இணைத்து கொள்ளலாம்.AMD Ryzen பிராசசார் மற்ற பிராசசார்களை பின் தள்ளி முன் வரிசையினை பிடிக்கும் என் எதிர்பார்கப்படுகிறது.ஆனால் இதுவரை இதன் வேகம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை ஆகினும் வதந்திகளாக இதன் விலை சுமார் 849 டாலராக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Saturday 3 June 2017

Just Tips :

மொபைல் போன் சிக்னல்: மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத்
தடுக்கவும்
உலகின் மாபெரும் கணினி புரட்சி செய்த நிறுவனம் மைக்ரோசாஃப்ட். அப்படி உலகின் முக்கிய நிறுவனமாக இருந்தாலும் , மைக்ரோசாஃப்ட் செய்த தவறால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

மைக்ரோட்சாஃப்ட் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை, தவறுதலாக ஒரு #update வெளியிட்டது. அதுபற்றி அறியும் முன்னரே பல கணினிகள் செயலிழந்து போனது.
பலரும் புதிய அப்டேட்டை, அப்டேட் செய்ததும் அவர்களது கணினி முடங்கத்தொடங்கியுள்ளது. கணினிக்கு மட்டுமல்லாமல், விண்டோஸ் மொபைல்களுக்கும் இந்த அப்டேட் அனுபப்பட்டது.

மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு:
தவறுதலாக எங்கள் நிறுவனம் அனுப்பிய அப்டேட்டால், கணினி முடங்கும் அபாயம் உள்ளது. அதனால் அதை யாரும் ஏற்று அப்டேட் செய்ய வேண்டாம்.
ஆட்டோமேடிக் அப்டேட்டை நிறுத்தி வைக்கவும் அல்லது உங்களுக்கே தெரியாமல் அப்டேட் ஆக தொடங்கி விட்டால் உடனடியாக உங்கள் கணினி அல்லது மொபைலின் வைஃபை நிறுத்திவிடுங்கள் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த பிரச்னையிலிருந்து தப்பிக்க ஆலோசனை கூறியுள்ளது.

Friday 26 May 2017

இனி வாட்ஸ் ஆப்பில் தப்பான மெசேஜ் அனுப்பிட்டா பயப்பட தேவையில்லை..!
வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் மெசேஜை, படிப்பதற்கு முன்னரே அழிக்கும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
No automatic alt text available.
உலகின் முக்கிய சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப், தன்னுடைய பயனாளர்களுக்காக பல்வேறு புதிய வசதிகளை அடிக்கடி அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பயனாளர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிய மெசெஜை, எதிர் முனையில் உள்ள ஒருவர் பார்க்கும் முன்னரே அந்த மெசேஜை அழிக்கவோ அல்லது எடிட் செய்யவோ கூடிய புதிய வசதியை விரைவில் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய வசதியின்படி, ஒரு மெசெஜ் அனுப்பப்பட்ட 5 நிமிடங்களுக்குள் மட்டுமே அதனை அழிக்க முடியும்,எடிட் செய்ய முடியும். தற்போது இந்த புதிய வசதிகள் குறித்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. எனவே கூடிய விரைவில் வாட்ஸ் ஆப்பின் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுமட்டுமல்லாமல் பயனாளர்கள் தாங்கள் இருக்கும் இடம் குறித்து வாட்ஸ் ஆப்பில் குறிப்பிடும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 9

நோக்கியாவின் வரவிருக்கும் முக்கியமான ஆண்ட்ராய்டு கருவிகளில் ஒன்றான நோக்கியா 9 பற்றி சமீபத்தில் நிறைய கசிவுகள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் சமீபத்தில் நோக்கியா 9 கருவியில் 4ஜிபி ரேம் இடம்பெறும் என்ற தகவல் வெளியானது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பென்ஞ்ச்மார்க் தவகவளின் கீழ்
புதிய தகவலின்கீழ் இக்கருவி 8ஜிபி ரேம் கொண்டு வரும் என்று அறியப்படுகிறது. இது நிறுவனத்தின் மிகவும் எதிர்பாராத ஒரு நடவடிக்கையாகும். இந்த முடிவு உண்மையாக இருப்பின் நோக்கியா 9 மாறுபட்ட மாறுபாடுகளில் வரும் என்றும் எதிர்பார்க்கலாம். மறுபக்கம் வெளியான தகவல் இக்கருவியை அன்நோன் ஹார்ட் என்று குறிப்பிட்டுள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டும். 1.90GHZ கொண்ட ஒரு Octa-core-செயலி மூலம் இயக்கப்படும் என்றும் வெளியான தகவல் காட்டுகிறது. நோக்கியா 9 கருவியில் சமீபத்திய #Snapdragon 835 செயலி இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த சாதனம் Android 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் என்றும் தெரிகிறது.
நோக்கியா 9 சார்ந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரூ.4,999/-ல் எந்தவொரு லேப்டாப்பையும் டச் ஸ்க்ரீனாக மாற்றலாம், எப்படி.?


உங்கள் மேக்புக்ஸ் உள்பட எந்தவொரு மடிக்கணினையும் இந்த எளிய தந்திரத்தின்வழியாக ஒரு தொடுதிரை சாதனமாக மாற்ற முடியும் என்று நாங்கள் உங்களுக்கு சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.??
இந்த தந்திரம் மிகவும் எளிது. நியோநோட் ஏர்பார் (Neonode in AirBar) என்பது ஒரு மேக்னட்டிக் லேப்டாப் அக்க்சரியாகும். இது உங்கள் மடிக்கணினியின் டிஸ்ப்ளேவின் கீழ் மற்றும் தொடுதிரை மற்றும் விரல் இயக்கங்கள் மற்றும் சைகைகள் தொடுதிரை திறன்களைப் பிரதிபலிக்கும். ஆப்பிள் மடிக்கணினிகளுக்கான ஏர்பேர் மேக்புக் ஏர் மாடலுக்கு மட்டுமே முன் வரிசையில் கிடைக்கும் இந்த சாதனத்தை விண்டோஸ் 10 லேப்டாப் பயனர்களும் அவர்களின் பிளக் மற்றும் டச் தீர்வை இதனைக்கொண்டு உடனடியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த நியோநோட் ஏர்பேக் ஆனது மூன்று திரை அளவுகள் - 13.3 அங்குல, 14 அங்குல மற்றும் 15.6 அங்குல கொண்ட மடிக்கணினிகளுக்கு கிடைக்கிறது. இந்த சாதனம் விரல்கள் கொண்டு மட்டுமின்றி க்ளவுஸ், பெயிண்ட் ப்ரஷ், ஸ்டைலஸ் மற்றும் பலவற்றை கொண்டு தொடர்புகொள்வதற்கும் இசைவாக இயங்குகிறது.

டச் அல்லாத லேப்டாப்
அதுமட்டுமின்றி டாப், ஸ்வைப், சிஞ்ச், ஜூம் மற்றும் ரொட்டேட் போன்ற பல சைகைகளை இந்த ஏர்பார் சாதனத்தை இயல்பில் ஒரு டச் அல்லாத லேப்டாப்பில் இணைபதின் மூலம் சாத்தியமாக்கலாம்
தடை இல்லை
இதை பயன்படுத்த எந்த லேப்டாப் பிராண்ட்டிற்கும் தடை இல்லை. ஆனால் அது மேலே குறிப்பிட்டுள்ள மூன்று திரை அளவுகளில் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் விண்டோஸ் 10 மூலம் இயங்க வேண்டும்.
விலை நிர்ணயம்
இந்த சாதனம் அமேசான் இந்தியாவில் பிளக் மற்றும் டச் அசெஸரியின் கீழ் மூன்று வகைகளாக பட்டியலிட்டபட்டுள்ளது. நியோநோட் ஏர்பார் 13.3 அங்குல மற்றும் 15.6 அங்குல சாதகமானது ரூ.4,999/- என்ற விலை நிர்ணயத்தையும், 14 அங்குல நோட்புக் வைத்திருந்தால் இதே சாதனம் ரூ.5,988/-க்கும் விலை நிர்ணயம் பெற்றுள்ளது.
திரையின் அடிப்பகுதியில்
இந்த ஏர்பார் சாதனத்தை மடிக்கணினிகளின் பிளக் மற்றும் டச் தீர்வு என்றே வெளிப்படையாக அழைக்கலாம். இந்த சாதனம் உங்கள் மடிக்கணினி திரையின் அடிப்பகுதியில் காந்தப் பட்டி மூலம் இணைக்கப்படும் மற்றும் ஒரு யூஎஸ்பி கேபிள் கொண்டு உங்கள் மடிக்கணினி போர்ட் உடன் இணைக்கப்படும்.
கண்ணுக்கு தெரியாத ஒளி வெளியீடு
ஒருமுறை செட் அப் செய்தபின்னர், சாதனத்தின் வழியே இயக்கப்படும் பட்டை இயக்கங்கள் மற்றும் சைகைகளை கண்காணிக்க கண்ணுக்கு தெரியாத ஒளி வெளியீடு மூலம் அவைகளை தொடர்புடைய அலகுகளாக மொழிபெயர்க்கும். தொடுதிரை லேப்டாப்பைப் பயன்படுத்துவது போல செய்யும்.
சேதமாகும்
இதர பிற எல்லாவற்றையும் போலவே, நியோநோட் ஏர்பார் சாதனமும் அதற்கே உரிய சொந்த சவால்களையும் கொண்டுள்ளது. டிஸ்பிளேவிற்கு கீழே சிறிய அறை இல்லாத மடிக்கணினிகளில் இது மிகவும் உபயோகமாக இல்லை. மடிக்கணினியை மூடுவதற்கு முன்பாக இந்த சாதனத்தை அகற்றுவதை நினைவில் வைத்திருக்க வேண்டும் அல்லது ஏர்பார் மற்றும் லேப்டாப் ஆகிய இரு சாதனங்களுமே சேதமாகும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்.

Monday 22 May 2017

சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்கள்

போதை விட சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்
போதைக்கு அடிமையாவதை விட சமூக வலைதளங்களுக்கு இளைஞர்கள் எளிதாக அடிமையாகின்றனர் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
பேஸ்புக், டுவிட்டர், ஸ்நேப்சாட், இன்ஸ்டாகிராம் , யூடியூப்,ஆகிய சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களிடம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 14 -24 வயதுக்குள் உள்ள 1500 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில்," மது உள்ளிட்ட போதை பழக்களுக்கு அடிமையாவதை விட சமூக வ்லைதளங்களுக்கு இவர்கள் எளிதில் அடிமையாகி விடுகிறார்கள். தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்கள், ஒருவித மன உளைச்சல், கவலை, தனிமை உள்ளிட்ட மனநோய் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சமூகவலைளதங்களில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதில், இன்ஸ்டாகிராம் முதல் இடத்தில் உள்ளது. அதிகமான அளவில் 'இன்ஸ்டாகிராம்' பயன்படுத்துபவர்கள், அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்' என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்குஅடுத்த இடத்தில், ஸ்நாப்சேட் உள்ளது என்று அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது

தமிழகத்தை நோக்கி நகரும் Wanna cry வைரஸ்


கணிணி உலகையே அதிர வைத்த ரான்சம்வேர் வைரஸ் மிக விரைவில் தமிழக கணிணிகளில் ஊடுருவும் என்று அஞ்சப்படுகிறது.
ரான்சம்வேர் வைரஸ் இணைய உலகை அதிரவைத்த கணிணி வைரஸ். கடந்த மூன்று தினங்களாக உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய இந்த வைரஸ் மிகவும் வேகமாக இந்தியா முழுமைக்கும் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ரான்சம்வேர் வைரஸ் இருவரது கணிணியை முதலில் தாக்கும் . பின்னர் கணிணியில் உள்ள கோப்புகளை முடக்கும் இந்த வைரஸ் , 300 டாலர்களை மூன்று நாட்களுக்கு செலுத்த வேண்டும் இல்லையேன்றால் ஒரு வாரத்திற்குள் இரண்டு மடங்கு தொகையை செலுத்த வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும். இந்த மிரட்டலுக்கு நாம் அடிபணியாவிட்டால் ஒரு வாரத்திற்குக்கு பிறகு நம்முடைய கோப்புகளை இந்த வைரஸ் அழித்து விடும்.

இந்த வைரஸ் இதுவரை 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கணிணிகளை முடக்கியுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் அரசின் சேவைகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக ஆந்திரா, கேரளா, மேற்கு வங்காளம் , குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள அரசு அலுவலக கணிணிகளை இந்த வைரஸ் பதம் பார்த்துள்ளது.
இந்தநிலையில் இந்த் வைரஸ் தமிழக அரசு அலுவலக கணிணியை தாக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே கணிணியை பயன்படுத்துவோர் மிகவும் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கணிணி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Sunday 21 May 2017

ரான்சம்வேர் (WANNA CRY)

கணிணி உலகையே அதிர வைத்த ரான்சம்வேர் வைரஸ் மிக விரைவில் தமிழக கணிணிகளில் ஊடுருவும் என்று அஞ்சப்படுகிறது.
ரான்சம்வேர் வைரஸ் இணைய உலகை அதிரவைத்த கணிணி வைரஸ். கடந்த மூன்று தினங்களாக உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய இந்த வைரஸ் மிகவும் வேகமாக இந்தியா முழுமைக்கும் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ரான்சம்வேர் வைரஸ் இருவரது கணிணியை முதலில் தாக்கும் . பின்னர் கணிணியில் உள்ள கோப்புகளை முடக்கும் இந்த வைரஸ் , 300 டாலர்களை மூன்று நாட்களுக்கு செலுத்த வேண்டும் இல்லையேன்றால் ஒரு வாரத்திற்குள் இரண்டு மடங்கு தொகையை செலுத்த வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும். இந்த மிரட்டலுக்கு நாம் அடிபணியாவிட்டால் ஒரு வாரத்திற்குக்கு பிறகு நம்முடைய கோப்புகளை இந்த வைரஸ் அழித்து விடும்.
இந்த வைரஸ் இதுவரை 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கணிணிகளை முடக்கியுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் அரசின் சேவைகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக ஆந்திரா, கேரளா, மேற்கு வங்காளம் , குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள அரசு அலுவலக கணிணிகளை இந்த வைரஸ் பதம் பார்த்துள்ளது.
இந்தநிலையில் இந்த் வைரஸ் தமிழக அரசு அலுவலக கணிணியை தாக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே கணிணியை பயன்படுத்துவோர் மிகவும் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கணிணி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.


|நன்றி : விகடன் டிவி|
VIDEO :
https://www.facebook.com/alexpcs.blogspot.in/videos/630096707197787/

கூகுள் லென்ஸ்


கூகுள் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பாக கூகுள் லென்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மேம்ப்பாட்டாளர்கள் கூட்டம் ஆண்டுக்காண்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான மேம்பாட்டாளர்கள் கூட்டம் அமெரிக்காவில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கூகுள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கூகுள் லென்சுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி வெளியிட்டார். இந்த கூகுள் லென்ஸ் மூலம் ஒரு பொருளை நாம் கேமராவில் காட்டும் போது அந்த பொருள் பற்றிய விவரங்களை பெறலாம்.

அதாவது ஒரு பூவை கூகுள் லென்ஸ் காமிராவில் காட்டினால், அந்த பூவின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வரும். மேலும் ஒரு ஹோட்டலின் தோற்றைத்தை கூகுள் லென்ஸ் காமிராவில் காண்பித்தால் அந்த ஹோட்டலின் ரேட்டிங் என்ன ? அதில் என்ன பொருட்கள் கிடைக்கும் என்ற விபரங்களை கூகுள் லென்ஸ் தரும்.

ஜீமெயில்



கூகுள் நிறுவனம் தனது ஜீமெயில் மொபைல் அப்ளிகேஷனில் பயனர்களின வேலையைச் சுலபமாக்கும் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் ஜீமெயில் மின்னஞ்சல் சேவை உலகம் முழுவதும் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவைகளில ஒன்றாக உள்ளது. இதன் மொபைல் அப்ளிகேஷனில் கூகுள் நிறுவனம் பல புதிய வசதிகளைப் புகுத்தி வருகிறது.
அதன் அங்கமாக, ஜீமெயில் மொபைல் அப்ளிகேஷனில் ஸ்மார்ட் ரிப்ளை என்ற புதிய அம்சத்தை இணைத்துள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களுக்கான அப்ளிகேஷனில் சமீபத்திய அப்டேட் மூலம் இந்த வசதி கிடைக்கும்.
இதன் மூலம், மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது எளிதாகிறது. பொதுவாக அதிகம் பேர் பரவலாக பயன்படுத்தும் பதில்களை ஜீமெயில் பரிந்துரைக்கும். இதனால், டைப் செய்ய அவசியமில்லாமல், தயாராக பரிந்துரைக்கும் பதில்களில் ஒற்றை அனுப்பிவிடலாம். மெசேஜ் அனுப்புவதில் உள்ள டெம்பிளேட் மெசேஜ் போலவே இது இருக்கும்.
பல புதிய அப்பேட்களை அறிமுகம் செய்துவரும் கூகுள் அண்மையில் ஜீமெயில் மூலமாகவே பணம் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும் மால்வேர் லிங்க் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது.


வாட்ஸ் ஆப்பில் 'I love the new colours for WhatsApp' என்ற குறிப்புடன் லிங்க் ஒன்று வந்தால் உஷாராக இருக்க வேண்டும். இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்தால் வாட்ஸ் ஆப்பை விரும்பிய நிறத்தில் பயன்படுத்த ஒரு அப்ளிகேஷனை நிறுவச் சொல்லும்.
அதற்கு முன்பாக, உங்கள் அடையாளத்தை உறுதிசெய்ய (வெரிஃபிகேஷன்) நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று கூறும். இதற்கு ஒப்புதல் அளித்தால், உங்களுக்கு வந்ததைப் போலவே உங்கள் நண்பருக்கும் மெசேஜ் அனுப்பப்படும்.
அதற்குப் பிறகும், கம்ப்யூட்டருக்கான கூகுள் குரோமில் மட்டுமே வாட்ஸ் ஆப்பை விரும்பிய நிறத்தில் பயன்படுத்தலாம் என்று கூறி, BlackWhats என்ற குரோம் எக்ஸ்டென்ஷனை பதிவிறக்குமாறு கேட்கும். அதைப் பதிவிறக்கி கலர் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தலாம்.
ஆனால், இது வாட்ஸ் ஆப்பின் அதிகாரப்பூர்வமான வெளியீடு இல்லை. இதன் மூலம் பயன்படுத்துபவரிடம் உள்ள தகவல்கள் திருடப்படலாம். இதைத் தவிர்ப்பதும் எளிது. உங்களுக்கு வரும் லிங்க் சிரில்லிக் எனப்படும் ஆங்கிலத்தைப் போலவே இருக்கும் எழுத்துக்களில் இருக்கும். அதை சற்று கவனமாகப் பார்த்து தவிர்த்துவிடவும். இதுபோன்ற, லிங்க் மூலமாகவே ரான்சம்வேர் வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதால் எச்சரிக்காக இருப்பது நல்லது.

எதிர்காலத்தில் மறக்கவே மாட்டீங்க!

வருகிறது ஈமோஜி பாஸ்வேர்டு
அடிக்கடி உங்களது பாஸ்வேடை மறந்துவிடுகிறீர்களா? இனிமேல் உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஈமோஜியை பாஸ்வேடாக பயன்படுத்த புதிய வசதி வரவுள்ளது.
எமோஜியை பாஸ்வேடாக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், உல்ம் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வசதியை ஆண்ட்ராய்டு மொபைல் போனில் கொண்டு வரும் முயற்சியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பயனாளர்கள் தங்களுடைய பாஸ்வேடை மறக்காத வண்ணம் இந்த லாகின் முறையை எப்படி, எந்த முறையில் பயன்படுத்தலாம் என்ற தீவிர முயற்சியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பயனாளர்கள் ஒவ்வொரு முறை மொபைலை திறக்கும்போதும், ஜாலியான உணர்வு ஏற்படும்.
பின் நம்பர்களை எளிதாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால், ஈமோஜியை எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ளலாம். பாஸ்வேர்டுக்காக 6 வேறு வேறு வகையான ஈமோஜியை பயன்படுத்தலாம். இதனை யாராலும் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும், அவர்கள் நினைவில் கொள்ள முடியாது.
ஆனால் ஈமோஜியைப் பொருத்தவரை 6 வேறுவேறு வகையான ஈமோஜிகளைப் பயன்படுத்தும்போது மற்றவர்கள் பார்த்தாலும் அவர்கள் நினைவில் கொள்வது கடினம்.

ஆண்ட்ராய்டை விரட்டியடிக்க வருது புது ஓ.எஸ்

 கூகுள் புது தொழில்நுட்பம்
உலகளவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் போன் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு உள்ளது. இது பயன்படுத்துவோருக்கு எளிதாக இருப்பதாலும், இலவசமாகவும், குறைந்த விலை போன்களில் பயன்படுத்தும் வகையில் இருப்பதால் அதிக நபர்கள் விரும்பும் ஒன்றாக உள்ளது.
அதோடு பல்வேறு புதிய வசதிகளை கொடுப்பதோடு, புதுப்புது அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பதால் அனைவராலும் விரும்பப் படுகிறது.
தற்போது கூகுள் நிறுவனம் மொபைல் போனில் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கு (Operating System-OS)பதிலாக புதிய ஓ.எஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுள் நிறுவனம் மிக ரகசியமாக புதிய OS உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கூகுளின் இந்த புதிய OS, புஜ்சியாவை அடிப்படையாக கொண்ட Ars Technica என்ற நிறுவனத்தின் யோசனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றது இதன் யூசர் இண்டர்பேஸ்க்கு ஆர்மடில்லோ என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் OS க்கு பெயரிடப்படவில்லை.
இந்த OS புதிய மொபைல் போன்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமையும் என கூறப்பட்டுள்ளது. சிறிய கம்ப்யூட்டர் போல செயல்படும் என்பதோடு, அதன் வேகம் அசாதரணமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த OSன் முதல் பக்கத்தில் நாம் எப்போதும் பயன்படுத்திவரும் ஆண்ட்ராய்டு போன் போல நம் புகைப்படம் வைத்தல், தேதி, நேரம், ஆகியவற்றோடு, நாம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளும் வசதி, பேட்டரி நிலை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் புதுவித டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இதில் கணிணியைப் போல இரு வேறு அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

Thursday 6 April 2017

ஜியோ சர்ப்ரைஸ் Offer CANCELLED.

ஜியோ மார்ச் 31 வரை மட்டுமே இருந்த Happy new Year Offer ஏப்ரல் 15 ம் தேதி வரை Summer Surprize  என கூறி கால நீட்டிப்பு செய்தனர்.
ஆனால் APRIL 6 வரை மட்டுமே SURPRISE ஆஃபர் செல்லும்.

Monday 30 January 2017

இருப்பதிலேயே ஜியோ நெட்தான் ரொம்ப ஸ்லோ.. அம்பலப்படுத்திய டிராய்



ஜியோ சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு இந்த தகவலை படிக்கவும். தகவல் தொழில்நுட்ப புரட்சி செய்யப்போவதாக கூறிக்கொண்டு சந்தையில் காலடி எடுத்து வந்த உங்கள் அபிமான ஜியோ சிம்தான், இருப்பதிலேயே குறைந்த இணைய வேகம் கொண்டதாம். இதை தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெப்சைட் அதிகாரப்பூர்வமாகவே கூறியுள்ளது.

இணையதள வேகத்தை கண்டறிய டிராய் அறிமுகப்படுத்திய ஸ்பீட் வெப்சைட்டில்தான் இத்தகவல் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சராசரி டவுன்லோடு வேகம் 6.2Mbps ன்ற அளவில் உள்ளது. இதனால் தேசிய அளவு நெட் ஸ்பீடில் 5வது இடம்தான் ஜியோவுக்கு.
ஏரியாவுக்கு தக்கபடி ஸ்பீட் மாறுபடுகிறது. டெல்லி சர்க்கிளில் ஜியோ வேகம் 5.9Mbpsஎன்ற அளவிலுள்ளது. மும்பையில் 10.7 எனும் வகையில் வேகம் அதிகமாக உள்ளது. இருந்தாலுமே, மும்பை சர்க்கிளில் வேக அடிப்படையில், ஜியோவுக்கு 2வது இடம்தான்.

பெங்களூர் எனும் பெரிய மார்க்கெட்டை வைத்திருந்தாலும், கர்நாடக சர்க்கிளில் ஜியோ வேகம் 7.5Mbps என்ற அளவில்தான் உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஜியோவுக்கு போதிய அளவு டேட்டா தர முடியவில்லை என்பது இதில் மற்றொரு சோகம்.

அதேபோல அப்லோடு வேகத்திலும், ஜியோ பின்தங்கியே உள்ளது. அப்லோடு வேகம் 2.6 Mbps என்ற அளவில்தான் உள்ளது. இந்திய அளவில் இந்த பிரிவில் 6 வது இடத்துக்குத்தான் வர முடிந்துள்ளது ஜியோவால். ஜியோவைவிட குறைந்த அப்லோடு வேகம் கொண்ட நெட்வொர்க் நிறுவனம் எது தெரியுமா? அது முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்தான். அதன் அப்லோடு வேகம் 2.1Mbps

ஜியோவின் அப்லோடு வேகம் டெல்லி மற்றும் மும்பையில் 2.3Mbps மற்றும் 3 Mbps என்ற அளவிலும், கர்நாடகாவில் 2.6Mbps என்ற அளவிலும் உள்ளது.

மற்ற நிறுவனங்கள் லிமிட்டட் அளவு நெட் தருவதால் அவர்களுடைய வேகத்தோடு தங்களுடையதை ஒப்பிடுவது சரியானதாக இருக்காது என்கிறது ஜியோ தரப்பு.