Monday 31 August 2015

7.5 கோடி சாதனங்களில் விண்டோஸ் 10

விண்டோஸ் 10 சிஸ்டம் வெளியாகி ஒரு மாத காலத்திற்குள், 7.5 கோடி சாதனங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 90 ஆயிரம் தனிப்பட்ட மாடல் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் அடங்கும். 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சில கம்ப்யூட்டர் மாடல்களும், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறியுள்ளன.
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் உள்ள பெர்சனல் அசிஸ்டண்ட் 'கார்டனா', இதுவரை “tell me a joke” என்ற கட்டளைக்கு 5 லட்சம் ஜோக்குகளைச் சொல்லியுள்ளது. விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பல லட்சம் அப்ளிகேஷன்கள் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன.
சென்ற ஜூலை 29 அன்று வெளியானது விண்டோஸ் 10. முதல் நாளிலேயே, இந்த சிஸ்டத்தினை 1.4 கோடி சாதனங்கள் ஏற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கின. இரண்டு வாரங்களில், 13 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், விண் 10ல் இயங்குவது தெரிய வந்தது. ஆகஸ்ட் 26, ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பின்னால், 7.5 கோடி சாதனங்களில் இயங்குவது தெரிய வந்துள்ளது.
விண்டோஸ் 10, Home, Pro, Enterprise and Education என நான்கு வகைகளில் கிடைக்கிறது. இலவசமாக இதனைத் தரவிற்க்கம் செய்திடும் உரிமை இல்லாதவர்கள், விலை கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில், விண்டோஸ் 10 ஹோம் ரூ.7,999 மற்றும் விண்டோஸ் 10 ப்ரோ ரூ. 14,999க்கும் கிடைக்கிறது. நீங்கள் வாங்க விரும்பினால் http://www.microsoftstore.com/store/msin/en_GB/cat/categoryID.70039000 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2018 ஆம் ஆண்டுக்குள் 100 கோடி சாதனங்களில், விண்டோஸ் 10 இயங்க வேண்டும் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலக்காகும். இதனை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மைக்ரோசாப்ட் எடுக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், புதிய பிரைவசி கொள்கையினைப் பயனாளர்கள் பலர் எதிர்த்து வந்தனர். இவர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், http://windows.microsoft.com/en-us/windows-10/windows-privacy-faq என்ற இணைய தளத்தில், விரிவாகத் தன் கொள்கை பற்றி மைக்ரோசாப்ட் விளக்கியுள்ளது.

ஆண்ட்ராய்ட் எம் - என்னும் 'மெதுமிட்டாய்' ஆப்பரேட்டிங் சிஸ்டம்

கூகுள் தன்னுடைய ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மீண்டும் ஒரு இனிப்பு மிட்டாய் பெயரை வைத்துள்ளது. ஆங்கில அகர வரிசையில் C யில் தொடங்கி L வரை பெயரிட்ட கூகுள், அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பெயர் வைக்காமல் Android M எனப் பொதுவாகக் குறிப்பிட்டு வந்தது. மக்களும், இது அது எனப் பல பெயர்களை ஊகமாகச் சொல்லி வந்தனர். கூகுள் நிறுவனமே, எந்த எந்தப் பெயர் எல்லாம் உங்கள் நினைவிற்கு வரும் என நம்மை கேலி செய்திடும் தொனியில் பல பெயர்களை http://www.androidcentral.com/we-may-soon-find-out-what-android-m-stands என்ற முகவரியில் உள்ள தளத்தில் வெளியிட்டது. மக்களும் Milkshake, Mars, Macadamia, Milky Way, Meringue, Milk Dud எனப் பல பெயர்களில் ஒன்றை எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தின் புதிய பதிப்பிற்கான பெயர் Android 6.0 Marshmallow எனக் கூகுள் அறிவித்துள்ளது. (காண்க: http://www.androidcentral.com/marshmallow). Marshmallow மேற்கத்திய மற்றும் அமெரிக்க நாடுகளில் மிகவும் பெயர் பெற்ற ஒரு தித்திப்பு மிட்டாய் எனலாம். அது நம் ஊரில் கிடைப்பது போல, சிறிய மிட்டாய் ஆகக் கெட்டியாக இல்லாமல், பஞ்சு போல மென்மையாக இருக்கும். ஆனால், நம் ஊர் பஞ்சு மிட்டாய் போல இருக்காது. எனவே இதனை நாம் 'மெதுமிட்டாய்' என அழைக்கலாம். எனவே, Android M என்பது நமக்கு 'ஆண்ட்ராய்ட் மெதுமிட்டாய்'.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் முந்தைய பெயர்களாக Cupcake (1.5), Donut (1.6), Eclair (2.0-2.1), Froyo (2.2-2.2.3), Gingerbread (2.3-2.3.7), Honeycomb (3.0-3.2.6), Ice Cream Sandwich (4.0-4.0.4), Jelly Bean (4.1-4.3.1), KitKat (4.4-4.4.4, 4.4W-4.4W.2), மற்றும் Lollipop (5.0-5.1.1). புதியதாக இப்போது வந்திருப்பது Android Marshmallow (Version 6.0). இதனைத் தமிழில் சிலர் 'சீமை துட்டி' என அழைப்பார்கள். இருப்பினும் 'மெதுமிட்டாய்' என்ற சொல்லும் அழகாகப் பொருந்துகிறது.
கூகுள் நிறுவனத்தின் வழக்கமான பழக்கப்படி, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் Nexus சாதனங்களில் பதிந்து வெளியிடப்படும். எனவே, வர இருக்கும் Nexus 5 மற்றும் Nexus 6 ஆகியவற்றில், இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிற்கு வரும். இந்த
இரு சாதனங்களையும், முறையே, எல்.ஜி. மற்றும் ஹுவே வெளியிட்டு உள்ளன. இன்னும் இந்த சிஸ்டத்திற்கான source code தரப்படவில்லை. சோதனைத் தொகுப்பாகவே கிடைக்கிறது. வழக்கம் போலவே, கூகுள் தன் அலுவலகத்தின் முன்புறத்தில், (Building 44 on the Google Campus, home of the Android team). புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான உருவப் பொம்மையை வைத்துள்ளது. இங்கு பழைய பதிப்புகளுக்கான பொம்மைகளும் காணக் கிடைக்கின்றன. இந்த உருவப் படத்தினை இப்போதே நீங்கள் உங்கள் போனில் பதிந்து வைக்கலாம். இது தொடர்பான, வால் பேப்பர்களைப் பெற விரும்புவர்கள் https://www.androidpit.com/android-marshmallow-wallpapers-download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தப் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சோதனை முறையில், சோதித்துப் பார்க்கும் புரோகிராம் எழுதுபவர்களுக்கென வழங்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இந்த சோதனைத் தொகுப்பினைத் (Android 6.0 SDK) தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பொதுமக்களின் பயன்பாட்டிற்கான முறையான, முழுமையான பதிப்பு, வரும் அக்டோபரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய 'மெதுமிட்டாய்' ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், வர இருக்கும் புதிய வசதிகள் குறித்து கூகுள் பல வலைப்பதிவுகளில் அறிவித்துள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. ஸ்மார்ட் போனில், மின்சக்தி பயன்பாட்டினைக் குறைக்கும் வகையில் Doze என்னும் வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை இயக்கிவிட்டால், நம் செயல் நகர்த்தலை இது தொடர்ந்து கண்காணித்து, பேட்டரி சக்தி செலவிடப்படுவதைக் குறைக்கிறது. லாலிபாப் மற்றும் ஆண்ட்ராய்ட் எம் இயங்கும் இரண்டு வெவ்வேறு மொபைல் போன்களில், இந்த வசதியைப் பயன்படுத்தியபோது, ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம் இயங்கும் போனில், மின் சக்தி இரு மடங்கு சேமிக்கப்படும் வகையில் செயல்பாடு இருந்தது.
2. அடுத்ததாக, விரல் ரேகை செயலாக்கம். 'மெதுமிட்டாய்' பதிப்பில் விரல்ரேகை அறிதலை, ஆண்ட்ராய்ட் சாதனங்களைத் திறப்பதற்கு மட்டுமின்றி, பயனாளர் போனில் தரப்படும் Android Pay வசதியைச் செயல்படுத்தும் போதும் பயன்படுத்த உதவுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் புரோகிராம், கேம் மற்றும் பிறவற்றை வாங்குகையில், பணம் செலுத்த, பயனாளர் அடையாளத்தினை அறிவிக்க, இந்த விரல் ரேகை வசதியைச் செயல்படுத்தலாம்.
3. இந்த சிஸ்டத்தில், Google Now வசதியை இயக்கி, மொபைல் போனின் திரையில் வைக்கப்படும் எந்த ஒரு ஆப்ஜெக்ட்டையும் ஸ்கேன் செய்திடப் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட், பாடல், விடியோ படம் மற்றும் ஒரு கட்டுரை குறித்த, முக்கிய தகவல்களை இதன் மூலம் அறியலாம். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் ஒரு முக்கிய செயலாக்கமான, "Now on Tap" என்பதை, போனின் ஹோம் பட்டனை அழுத்தி, அல்லது "OK Google," என மைக்கில் சொல்லி, செயல்படுத்தலாம். இந்த செயல்பாடு, Now on Tap செயல்பாட்டினை ஸ்கேன் செய்து உதவும்படி சிக்னல் அனுப்பும். ஒரு பாடல் ஒலிக்கையில், "Who sings this?" எனக் கேள்வி கேட்டு அதற்கான பதிலைப் பெறலாம்.
4. Samsung Pay மற்றும் Apple Pay ஆகியவற்றிற்கு இணையாக, கூகுள் நிறுவனத்தின் Android Pay செம்மைப்படுத்தப்பட்டு, புதிய சிஸ்டத்துடன் தரப்படுகிறது. இது கூகுள் வாலட் (Google Wallet) எனப்படும் கூகுள் மணி பர்ஸ் செயல்பாட்டுக்குப் பதில் இணையாகத் தரப்படுகிறது. 2011ல் அறிமுகப்படுத்தப்பட்ட Google Wallet தொடர்ந்து இருவருக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படும். ஆப்பிள் சிஸ்டத்தில் உள்ளது போல, Android Pay வசதியைப் பயன்படுத்தி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் குறித்த தகவல்களை, ஸ்மார்ட் போனில் பதிவு செய்து வைக்கலாம். அதன் மூலம், நாம் பொருள் வாங்கும் கடைகளில் உள்ள பணம் பெறும் சாதனங்கள் வழியாக பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். 'ஆண்ட்ராய்ட் பே' வசதி மூலம், கூகுள் மொபைல் வழி பணம் செலுத்துவதில், எளிமை, பாதுகாப்பு மற்றும் விருப்பம் போல் செயல்படும் வழிகள் ("simplicity, security, and choice") ஆகியவற்றைத் தருவதில் முழுமையாகச் செயல்படுகிறது என கூகுள் நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார். தற்போது, இந்த வகை மொபைல் சாதனங்கள் வழி நிதி பரிமாற்றம், அமெரிக்காவில் ஏறத்தாழ 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள்ளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. American Express, Visa, Mastercard, and Discover ஆகிய வர்த்தக நிதி நிறுவனங்கள், இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளன. என்.எப்.சி. எனப்படும், அண்மைக் கள தகவல் தொடர்பு தொழில் நுட்பம் (NFC -~Near Field Communication) வசதி உள்ள (ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் மற்றும் அதற்கும் பிந்தைய சிஸ்டம் உள்ள போன்களில்) சாதனங்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
5. இந்த புதிய 'மெதுமிட்டாய்' சிஸ்டத்தில், பயனாளர்கள், போனில் அப்ளிகேஷன்களை பதிவு செய்வதற்கான அனுமதி தருவதைச் சீரமைக்கிறது. அத்துடன், பயனாளர்களின் தனிநபர் தகவல்களை, போனில் பதிந்து இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் திருடுவதைத் தடுக்கும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது, ஆண்ட்ராய்ட் பயனாளர்களிடம் பொதுவாக, எந்த ஒரு அப்ளிகேஷனை இயக்கத்தொடங்கும் போதும், பயனாளர்களின் காண்டாக்ட் பட்டியலில் உள்ள தகவல்கள் மற்றும் சார்ந்தவற்றைப் பகிர்ந்து கொள்ள நம் அனுமதி கேட்கப்படும். இது புதிய சிஸ்டத்தில் நடைபெறாது.
6. Android Marshmallow இயக்கத்தில், கூகுள் USB Type- C வகை யு.எஸ்.பி. செயல்பாடு தரப்படுகிறது. இதனால், உங்கள் மொபைல் சாதனம், வழக்கத்திற்கு மாறாக, வேகமாக யு.எஸ்.பி. செயல்பாட்டினை மேற்கொள்ளும். இந்த சிஸ்டம் இயங்கும் மொபைல் போனில், Type -C port யு.எஸ்.பி.க்கென தரப்பட்டிருந்தால், யு.எஸ்.பி. கேபிளை எந்தப் பக்கமாகவும் இணைக்கலாம். இப்படித்தான் செருக வேண்டும் என்றில்லாமல், எந்தப் பக்கமாகவும் செருகும் வகையை யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டிருக்கும். அது மட்டுமின்றி, இந்த வகை போர்ட் கொண்ட சாதனைத்தைப் பயன்படுத்தி, 'மெதுமிட்டாய்' சிஸ்டம், போனில் உள்ள மின் சக்தியை, மற்ற
சாதனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும்.
7. Direct Share என்று ஒரு வசதி, ஆண்ட்ராய்ட் மார்ஸ் மெல்லோ சிஸ்டத்தில் தரப்படுகிறது. இதனைக் கொண்டு, நம் காண்டாக்ட் போன்ற தகவல்களை, போனில் உள்ள மற்ற அப்ளிகேஷன்கள் பயன்படுத்தலாம். மொபைல் போன் பயனாளர், வேறு ஒரு சமூக வலைத்தளத்தில் உள்ள அப்ளிகேஷனப் பயன்படுத்தி, அதில் உள்ள ஒரு நபருக்குத் தன்னிடம் உள்ள தகவலைத் தர முடியும்.
8. https://code.google.com/p/android-developer-preview/issues/detail?id=2403#makechanges என்னும் தளத்தில் தரப்பட்டுள்ள குறிப்புகளின்படி, Visual Voicemail என்னும் வசதியை, டயலரிலிருந்து பெற்றுப் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. முதன் முதலில், அமெரிக்காவில் இயங்கும் T Mobile மற்றும் பிரான்ஸில் இயங்கும் Orange France ஆகியவை தரும் போன்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என அறியப்படுகிறது. பின் நாளில், மற்ற நாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களுக்கும் இது கிடைக்கும். அது என்ன “விசுவல் வாய்ஸ்மெயில்” என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உங்களுடைய வாய்ஸ் மெயில் கட்டளையை, காணக்கூடிய இடைமுகத் தோற்றமாக இந்த விசுவல் வாய்ஸ்மெயில் தரும். தற்போது இயங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில், இது ஆடியோ அடிப்படையிலான பதிவாக மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. இனி இது தோற்றமாகவே இருக்கும். இதற்கு, நமக்கு மொபைல் சேவையினை வழங்கும் நிறுவனத்தின் உதவியும் தேவைப்படும்.
9. அடுத்ததாக, ஹோம் ஸ்கிரீன் தோற்றத்தில், திரை சுழற்சி (Screen Rotation) வழங்கப்பட்டுள்ளது. இனி ஹோம் ஸ்கிரீன் தோற்றத்தினை, லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ரெயிட் வகையில் பயன்படுத்தலாம்.
10.பொதுவாக, ஸ்மார்ட் போன்களில், போன்களிலேயே கொடுக்கப்பட்டுள்ள தேக்க நிலை நினைவகம் (Storage Memory) சிக்கல்களைத் தருவதாக அமைக்கப் பட்டிருக்கும். மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், இதன் திறனை அதிகப்படுத்தும் வசதி இருந்தாலும், நாம் இணையத்திலிருந்து நமக்குத் தேவையான, விருப்பப்பட்டவற்றைத் தரவிறக்கம் செய்திடுகையில், தேக்கக நினைவகத்திலும் ஒரு கண் வைத்திருப்போம். இடம் உள்ளதா, இல்லையா? என்ற கவலை பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த புதிய 'மெதுமிட்டாய்' சிஸ்டத்தில், ஒரு சிறிய பார் கோடு தரப்படுகிறது. இதன் மூலம், போனில் உள்ள நினைவகத்தில் இன்னும் எவ்வளவு இடம் தேக்கிவைக்கக் கிடைக்கிறது என அறிந்து கொள்ளலாம்.
11.இணைய அனுபவத்தில் புதிய ஒரு வசதி, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படுகிறது. பொதுவாகவே, கூகுள் இணையத்திலிருந்து நாம் விரும்பி இறக்கிக் கொள்ளும் விஷயங்களை, நமக்கு மனதிற்கு இதமாக வழங்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும். புதிய சிஸ்டத்தில் உள்ள Chrome Custom Tabs இதனைச் சற்றுப் புதிய வகையில் தருகிறது. இதன் மூலம் குரோம் பிரவுசரின் திறன் அனைத்தையும், ஒருங்கிணைக்கும் வசதியை டெவலப்பர்கள் பெற்று தங்கள் அப்ளிகேஷன்களில் பயன்படுத்தலாம். இந்த வசதி, அப்ளிகேஷன்கள் இயங்கும்போது, அந்த இயங்கும் அப்ளிகேஷன் மேலாகவே, ஒரு சிறிய குரோம் விண்டோவினைக் காட்டும். இணையத்தில் இயங்குகையில், இந்த வசதி, பயனாளர்களுக்கு ஓர் எளிய வழியைத் தரும். அத்துடன், தானாகவே தளம் ஒன்றில் லாக் இன் செய்வது, பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்திருத்தல், தானாகவே படிவங்களில் தகவல்களை நிரப்புதல் மற்றும் பல முனை பாதுகாப்பினை இந்த வசதி கொண்டுள்ளது.
12.அப்ளிகேஷன் சார்ந்த தொடர்பு: ஏதேனும் ஓர் அப்ளிகேஷனில் இயங்கக் கூடிய ஒரு லிங்க், இணைய தளப் பக்கத்தில் தரப்பட்டிருந்தால், நாம் அதனைக் கிளிக் செய்திடும்போது, முன்பு ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், ஒரு மெனு பட்டியல் கொடுக்கப்பட்டு, எந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள என்று கேட்கப்படும். (Open With என்பதைப் போல). புதியதாக வரும் ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம், தானாகவே, அந்த செயலியை உணர்ந்துகொண்டு, அந்த லிங்க்கில் தரப்படும் பயன்பாட்டினை, அந்தச் செயலியின் வழியாகத் தருகிறது. எடுத்துக் காட்டாக, ட்விட்டர் தளம் சார்ந்த ஒரு லிங்க் இருப்பின், ஆண்ட்ராய்ட் எம், தானாக, ட்விட்டர் அப்ளிகேஷனைத் திறந்து செயல்படுத்திகிறது.
13.முற்றிலும் புதிய, பயனுள்ள வசதி என எடுத்துக் கொண்டால், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள Android Auto Backup மற்றும் Restore for Apps என்ற இரண்டு வசதிகளைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். கூகுளின் ஆண்ட்ராய்ட் மேடைக்கான டெவலப்பர் கருத்தரங்கில் வெளியான உரைகளில், இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சோதனைப் பதிப்பில் இவை அட்டகாசமாகச் செயல்படுகின்றன. கூகுள் ட்ரைவ் எப்படி, அப்ளிகேஷன் டேட்டா மற்றும் செட்டிங்ஸ் அமைப்பு நிலைகளைத் தானாக, 25 எம்.பி. அளவிலான பைல் ஒன்றில் பதிந்து வைக்கிறதோ, அதே போல வசதி இது. நாள் ஒன்றில், பேக் அப் செயல்பாடு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது. வை பி யுடன் இணைய இணைப்பில் இருக்கையில், போன் வேறு ஒரு செயல்பாட்டினையும் மேற்கொள்ளாத நிலையில், இந்த பேக் அப் வசதி செயல்படுத்தப்படுகிறது. இதன் வழியாக அனுப்பப்படும் டேட்டா, நம் கூகுள் ட்ரைவ் சேவ் செய்திடும் இட வசதியுடன் இணைக்கப்பட்டு கணக்கிடப்படுவதில்லை. நாம் நம் சாதனத்தை தொலைத்துப் பின்னர் புதிய சாதனம் ஒன்றை இயக்கும்போதும், அல்லது ஏதேனும் அப்ளிகேஷன் ஒன்றை அழித்துவிட்டு, புதியதாக அப்ளிகேஷனை நிறுவுகையில், நீங்கள் அந்த அப்ளிகேஷனில் செயல்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த டேட்டா உடனே மீடேற்றம் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும்.
14.அப்ளிகேஷன் ட்ராயர்: புதிய சிஸ்டத்தில் தரப்படும் புதிய வசதிகளில், நம்மைக் கவரும் வகையில் தரப்பட்டிருப்பது, புதிய அப்ளிகேஷன் ட்ராயர் எனப்படும் வசதி ஆகும். இது படுக்கை வசத்தில் இயங்காமல், நெட்டு வாக்கில் செயல்படுகிறது. ஹோம் பேஜ் வால் பேப்பர் பின்னணியில், தெரியாத வகையில் தரப்படாமல், தனியே வெள்ளை நிறப் பின்னணியில் தரப்படுகிறது. இதற்கான மெனுவில் மேலாக, நீங்கள் அண்மையில் பயன்படுத்திய நான்கு அப்ளிகேஷன்கள் எவை என்று காட்டப்படுகின்றன.
15.புதிய எம் ராம் மேனேஜர் (Android M RAM manager): ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில், முற்றிலும் புதிய வகையில் இயங்கும் ராம் நினைவக நிர்வாகம் தரப்பட்டுள்ளது. அப்ளிகேஷன்கள், ராம் நினைவகத்தில் பயன்படுத்தும் நினைவு அளவு துல்லியமாகக் காட்டப்படுகிறது. இதற்கான மெனுவினை Settings > Apps > Options (three dots button) > Advanced > Memory எனச் சென்று காணலாம். இதனைப் பார்த்து, எந்த அப்ளிகேஷன்கள் தேவையில்லாமல், இயங்கா நிலையிலும், அதிக இடத்தை எடுத்துக் கொண்டுள்ளன என்பதைப் பயனாளர்கள் காணலாம். தேவையற்றவற்றின் இயக்கத்தினை நிறுத்தலாம்.
16.கூகுள் எப்போதும், மைக்ரோ எஸ்.டி. கார்ட்கள் மூலம், நினைவகத்திறன் அதிகப்படுத்தப்படுவதனை விரும்புவதில்லை. அதனால் தான், தன்னுடைய நெக்சஸ் சாதனங்களில், மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் தருவதில்லை. ஆனால், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில், இந்த வகையில் சற்று இறங்கி வந்துள்ளது. கூடுதல் தேக்கக நினைவகத்திற்குப் (Addirional Storage Space) பதிலாக, மாற்றிக் கொள்ளக் கூடிய, வளைந்து கொடுக்கக் கூடிய நினைவகத்தினை (Adoptable Storage Space) ஏற்படுத்திக் கொள்கிறது. எஸ்.டி.கார்ட் மற்றும் யு.எஸ்.பி. ட்ரைவ்களை அந்த வகையில் நடத்துகிறது. அவற்றை, சிஸ்டத்தில் உள்ள, உள்ளார்ந்த ஸ்டோரேஜ் இடமாக பார்மட் செய்கிறது. இதன் மூலம், போனில் உள்ள ஸ்டோரேஜ் இடத்திற்கும், இந்த கூடுதல் வளைந்து கொடுக்கும் நினைவகத்திற்கும் இடையே, தகவல்களை மிக எளிதாகப் பரிமாற்றிக் கொள்ள இயலும். நீங்கள், உங்கள் நெக்சஸ் ஸ்மர்ட் போனில், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்கிப் பார்க்க விரும்பினால், உடனே https://www.androidpit.com/how-to-get-android-m-preview என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அங்கு தேவையான அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முதன் முதலில், 2008ல் வெளியானது. ஒவ்வொரு முறை, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகும்போது, பல வசதிகள் புதியனவாகவும், பழைய வசதிகள் மேம்படுத்தப்பட்டும் கிடைத்து வந்தன. இருப்பினும், ஒவ்வொரு புதிய சிஸ்டமும், சிலவற்றை அப்படியே, அடுத்த முறை மேம்படுத்தலாம் என விடப்படும். புதியதாக வந்திருக்கும் ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும், பேட்டரியை நீண்ட நாள் உழைக்க வைத்திடும் வசதி, மிகச் சிறந்த செயல்பாடு மற்றும் பல முன்னேற்றமடைந்துள்ள வசதிகள் ஆகியவற்றைப் பார்க்கையில், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம் நாம் மாற்றிக் கொள்ள உகந்ததாகவே உள்ளது.
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமானது, உலக அளவில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், 80% போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பழைய பதிப்புகளை, அவற்றிற்கான அப்கிரேட் வசதி இல்லாத போதும் பயன்படுத்தி வருகின்றன. அண்மையில் டேப்ளட் பி.சி. பயன்பாடு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வுமுடிவில், பெரும்பாலான சாதனங்களில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே இயங்குகிறது எனக் கண்டறியப் பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் சில புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப்  புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு சில புதிய அம்சங்களை வழங்கி இருக்கின்றது. அதில் உள்ள சில முக்கிய அம்சங்களாவன, புதிய அப்டேட் மூலம் நீங்கள் படித்த மெசேஜ்களை படிக்கவில்லை என மாற்ற முடியும். இந்த அம்சம் மூலம் குறுந்தகவல் அனுப்பியவருக்கு நீங்கள் செய்த மாற்றம் தெரியாது.

அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளிகளுக்கும் புதிய அப்டேட் மூலம் கஸ்டம் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் குறிப்பிட்ட சில காண்டாக்ட்களுக்கு மட்டும் தனித்தனி ரிங்டோன்களை செட் செய்து கொள்ள முடியும். தற்சமயம் வரை க்ரூப் கான்வர்சேஷன்களை மட்டுமே ம்யூட் செய்ய முடிந்தது, இனி காண்டாக்ட்களுக்கும் இந்த ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எத்தனை நேரம் ம்யூட் செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட முடியும்.

அதிக வாட்ஸ்ஆப் கால் செய்ய வேண்டும் ஆனால் டேட்டா குறைய கூடாதா, அதற்கும் வாட்ஸ்ஆப் புதிய வழி செய்திருக்கின்றது. வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் மெனுவில் சாட் அன்டு கால் பகுதியின் கீழ் இருக்கும் புதிய அம்சமான லோ டேட்டா யூசேஜ் (Low Data Usage) ஆப்ஷனை க்ளிக் செய்து மாற்றி கொள்ளலாம். மேலும் புதிய எமோஜிக்கள் வெவ்வேறு நிறம் கொண்டிருக்கின்றது. முகங்களில் பல ரியாக்ஷன் மற்றும் பல புதிய செய்கைகளையும் புதிய வாட்ஸ்ஆப் அப்டேட் வழங்கி உள்ளது

Friday 28 August 2015

விண்டோஸ் பேட்ச் பைல்

4qLs8Vu.jpg


சென்ற வாரம், மைக்ரோசாப்ட் திடீரென பேட்ச் பைல் ஒன்றை வெளியிட்டது. வழக்கத்திற்கு மாறான வெளியீடு இது. அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அப்டேட் செய்திடும் வகையில் இது வெளியானது. இதற்குக் காரணம் வழக்கம் போல, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான். அதில் உள்ள தவறான குறியீட்டு வரி ஒன்றின் மூலம் ஹேக்கர்கள் நுழையலாம் என அறியப்பட்டது. இதனைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள், கம்ப்யூட்டர்கள் எவற்றையேனும் கைப்பற்றி உள்ளனரா என்று தெரியாத நிலையில், அதற்கான தீர்வு தரும் பேட்ச் பைல் ஒன்றை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. 

இது குறித்த https://technet.micr...curity/MS15-093 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் மைக்ரோசாப்ட் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பயனாளர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக, அவர்களைக் கவிழ்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இணைய தளம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டால், உடன் ஹேக்கர்கள் அவர்கள் கம்ப்யூட்டர்களைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்வது எளிதாகிவிடும். 

இதற்குக் காரணம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் உள்ள ஒரு குறைபாடு தான். இந்த குறைபாட்டினை, மைக்ரோசாப்ட் CVE-2015-2502 எனக் குறிப்பிடுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மெமரியில் உள்ள ஆப்ஜெக்ட்களைக் கையாளுகையில், இந்த குறை வெளியே அறியப்படுகிறது.  அந்த குறையை, ஹேக்கர்கள் பயன்படுத்தி கம்ப்யூட்டர் உள்ளே நுழைந்திட முடியும். அப்போது கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பயனாளருக்குரிய உரிமையினை ஹேக்கர் பெற முடியும். எனவே, அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையுடன் யாரேனும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், இந்த குறைபாடு இயங்கினால், கம்ப்யூட்டர் பின் அவருக்குக் கட்டுப்படாமல் போய்விடும். 

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படும் எட்ஜ் பிரவுசரில் இந்த குறைபாடு இல்லை எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் வழங்கும் இந்த பேட்ச் பைல் https://support.micr...n-us/kb/3087985 என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் தரப்படுகிறது. தானாக, இது அப்டேட் செய்யப்படவில்லை எனில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் இதனைத் தரவிறக்கம் செய்து இயக்கி வைத்துக் கொள்வது நல்லது.  இந்தக் குறையைக் கண்டறிந்தவர் கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் Clement Lecigne என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான வெளியீட்டு நாள் இல்லாமல், அதிரடியாக இது போல பேட்ச் பைல் வெளியிடுவது, இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான், தொடர்ந்து பயனாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து உடனுடக்குடன் தீர்த்து வைக்கும் வாடிக்கையாளர் சேவையைனை மேற்கொள்கிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும், இது போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டு, எட்ஜ் பிரவுசர் தொகுப்பைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்

Tuesday 25 August 2015

Va6esrN.jpg


விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தத் திட்டமிடுவோரும், தற்போது அதிகம் கவலைப்படுவது வை பி செயல்பாடு குறித்துத்தான். விண்டோஸ் 10 சிஸ்டம் நம் வை பி இணைப்பை, நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைவருக்கும், நாம் அறியாமலேயே வழங்குகிறது. இதனால், நம் ரகசிய நெட்வொர்க் செயல்பாடு அனைவருக்கும் தெரிய வருகிறது என்ற பயம் தான் அனைவரையும் கவலை அடையச் செய்துள்ளது. 




விண் 10 சிஸ்டத்தில், வை பி இணைப்பில், இதுவரை இருந்த விண்டோஸ் சிஸ்டங்களில் இல்லாத வகையில் ஒரு சிறிய மாற்றத்தினையே மேற்கொண்டுள்ளது. இதனைச் சரியாகத் தெரிந்து கொள்ளாத சிலரே, இது போல தவறான தகவல்களை நம்பி கலக்கம் அடைந்துள்ளனர். மாறாக, விண் 10 நம் வை பி இணைப்பினை என்ன செய்கிறது என்று இங்கு பார்க்கலாம். விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், புதியதாக Wi-Fi Sense என்ற ஒரு வசதி புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் நம் குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், நம் வை பி இணைப்பினை, பாஸ்வேர்ட் இல்லாமலேயே வழங்குகிறது. விண் 10, தானாக, இவர்களை வை பி இணைப்பில் இணைக்கிறது. இந்த சின்ன வசதி குறித்துத்தான், பலரும் அச்சமடைந்துள்ளனர். 


eWMrgMx.jpg

முதலில், விண்டோஸ் 10, உங்கள் வை பி பாஸ்வேர்டை யாருக்கும் வழங்குவதில்லை. மேலும், இந்த விஷயத்தில், விண்டோஸ் 1-0 சிஸ்டத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை உங்களுக்கு உள்ளது. வை பி யாருக்கெல்லாம் தரப்பட வேண்டும். அல்லது மொத்தமாக அனைவருக்கும் தடை செய்யப்பட வேண்டுமா என்றெல்லாம் நீங்கள் முடிவு எடுத்து, செட்டிங்ஸ் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, உங்கள் நண்பர் ஒருவர் Outlook, Outlook.com/Hotmail, Skype, or Facebookல் உங்களுடன் தொடர்பு கொண்டவராக இருந்தால், அவர் தானாகவே லாக் இன் செய்யப்படுகிறார். குறிப்பிட்ட ஒருவரை உங்கள் காண்டாக்ட் பட்டியலிலிருந்து தூக்கிவிட்டால், அவருக்கு இணைப்பு கிடைக்காது. மேலும், மேலே தரப்பட்டுள்ள சேவைகளில், எந்த சேவைத்தளத்திலிருந்து காண்டாக்ட் தகவல்களைப் பெற்று இயங்க வேண்டும் என்பதனையும் நீங்கள் அமைத்து கட்டுப்படுத்தலாம். "For networks I select, share them with my contacts” என்று இருக்கும் இடத்தில், டிக் அடையாளத்தை எடுத்துவிட்டால் போதும். உங்கள் கம்ப்யூட்டரில் வை பி இயக்கம் இயங்கக் கூடியதாக இருந்தால் Network & Internet>>Wi-Fi>>Manage Wi-Fi Settings என்று சென்று "For networks I select, share them with my contacts" என்று இருப்பதில் டிக் குறியீட்டினை எடுத்துவிட்டால் போதும். 


zgAUMPF.png

முதன் முதலில், வை பி நெட்வொர்க் ஒன்றுடன் நீங்கள் இணைகையில், மைக்ரோசாப்ட் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேட்கும். இந்த கேள்விக்கு No என்று கொடுத்துவிட்டால், விண் 10ல் உள்ள Wi-Fi Sense வசதி, அந்த நெட்வொர்க்கில் வேறு யாரையும் அனுமதிக்காது. நீங்கள் இவ்வாறு ஏற்படுத்தும் அமைப்பினை, பின்னர், எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அல்லது வ Wi-Fi Sense செயல்பாட்டினையே நிறுத்திவிடலாம். தற்போது பலவாறாகப் பேசப்படும் இந்த சேவை குறித்து மேலும் அறிய, http://www.komando.com/tips/318802/stop-windows-10-from-automatically-sharing-your-wi-fi-with-others/ என்ற இணையதளப் பக்கத்தினைக் காணவும்.

Monday 24 August 2015

ஹார்ட் டிஸ்க்குகள் நீண்ட நாள் உழைக்க

நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கினையே இழக்க வேண்டி வரும். ஒரு ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் குறைந்திடப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் நாம் எதனை நம் அளவில் தவிர்க்கலாம் அல்லது சரி செய்திடலாம் என இங்கு பார்க்கலாம்.



நாமாக ஏற்படுத்தும் சேதம்:


ஹார்ட் டிஸ்க் ஒன்றை முற்றிலுமாகப் பயனற்றுப் போகச் செய்வது அதில் நாமாக ஏற்படுத்தும் சேதம் தான். நாமாக எப்படி சேதம் ஏற்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க் தான், மிகப் பத்திரமாக ஒரு மூடப்பட்ட, உறுதியான அலுமினியம் டப்பாவில் அடைக்கப்பட்டு உள்ளதே. காற்று கூடப் போகமுடியாதபடி அல்லவா இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் வரலாம். நாம் எண்ணுவதெல்லாம் சரிதான். ஆனால், ஹார்ட் டிஸ்க், அதன் செயல்பாட்டின் போது, நகரும் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த நகரும் பகுதிகள் எல்லாம், மிகவும் சிறிய தவறான அசைவில் கூட கெட்டுப் போகும் வாய்ப்பு கொண்டவை. ஹார்ட் ட்ரைவ் செயலாற்றுகையில், வேகமாகச் சுழலும். அப்போது ஏற்படும் சிறிய அதிர்ச்சி கூட அதற்குப் பிரச்னையைத் தரும். சுழலாத போதும் அதிர்ச்சி தரும் வகையில் அதன் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடாது. அப்படியானல், அதனை எப்படி பாதுகாக்கலாம்?

கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் ஒன்றை இன்ஸ்டால் செய்த பின்னர், அதனை கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கக் கூடாது. அப்படி எடுப்பதாக இருந்தால், அதனை இன்னொரு கம்ப்யூட்டர் கேபினில் மாற்றி இணைப்பதற்காகத்தான் இருக்க வேண்டும். இதனை மிக மெதுவாகவும், விரைவாகவும், அதற்கேற்ற உபகரணங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இருக்கையில், அதனை அசைத்துப் பார்ப்பது கூடாது. வெளியே எடுப்பதாக இருந்து, எடுத்துவிட்டால், அதனைப் பத்திரமான ஓர் இடத்தில் வைத்துப் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

ஹார்ட் ட்ரைவ்களைப் பொறுத்தவரை, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ளவை தான், ஆபத்தினை விளைவிக்கும் சூழ்நிலைகளை அதிகம் எதிர் கொள்பவை ஆகும். இதற்காக, லேப்டாப் இயங்குகையில், அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளின் மீது நடப்பது போல நடக்க வேண்டாம். ஆனாலும், சற்று கூடுதலான எச்சரிக்கையுடன் அதனைக் கையாள வேண்டும். டேபிளின் மீதோ, அல்லது சுவர் மீதோ, இது மோதினால், பிரச்னை ஏற்பட்டு, அதில் பதியப்பட்டுள்ள டேட்டாவுக்குச் சேதம் ஏற்படலாம். அவை கரப்ட் ஆகலாம்.

ஹார்ட் டிஸ்க்குகளின் பெரிய எதிரி, அவை சந்திக்கும் அளவிற்கு அதிகமான வெப்பம் தான். ஹார்ட் ட்ரைவ்கள் அனைத்துமே, ஒரு குறிப்பிட்ட அளவு வரையே உஷ்ணத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பவை ஆகும். இது அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் வகையைப் பொறுத்ததாகும். ஒவ்வொரு ஹார்ட் டிஸ்க்கும் எந்த அளவில் உஷ்ணத்தைத் தாங்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்குள்ளாகவே, அது சந்திக்கும் உஷ்ணநிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை அதற்குத் தர வேண்டும். இந்த பாதுகாப்பான சூழ்நிலை என்பது, கம்ப்யூட்டர் ஷெல் வழியாக, காற்றானது நன்றாகச் சென்று வர வேண்டும். உள்ளே செல்வதும், வெளியேறுவதும் சரியாக இருக்க வேண்டும். இதற்கென அமைக்கப்பட்ட விசிறிகள் சரியான வேகத்தில் எப்போதும் சுழல வேண்டும். நாம் அமர்ந்திருக்கும் அறை, நாம் பணியாற்றத் தேவையான சரியான வெப்ப சூழ்நிலையைத் தந்து கொண்டிருக்கலாம். ஆனால், அதே சூழ்நிலை கம்ப்யூட்டர் மற்றும், அதன் உள்ளே இருக்கும் சாதனங்களுக்கும் கிடைக்கிறது என்று எண்ணக் கூடாது.

இதனை உறுதி செய்திட, அவ்வப்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைக் கழற்றி, அதன் உள்ளே சென்று தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளின் சுழலும் தகடுகளில் தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். அவற்றின் சுழலும் வேகம் சரியாக இருப்பதனை உறுதி செய்திட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், குறைவான தூசி செல்வதையும், அதிகமான காற்று சென்று வருவதையும் உறுதி செய்திட வேண்டும்.



சிதறியபடி பதியப்படும் பைல்கள் (File fragmentation):



பைல்களைச் சிதறியபடி ஹார்ட் டிஸ்க்கில் பதிவது நேரடியாக ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்காது. இருப்பினும், பைல் ஒன்று, பல துண்டுகளாக, பல இடங்களில் சேவ் செய்யப்பட்டிருந்தால், அதனைத் தேடும்போதும், படிக்கும் போதும், மேலும் எழுதும்போதும், ஹார்ட் டிஸ்க் தேவைக்கு அதிகமாகச் சுழன்று அதில் உள்ள டேட்டாவினைப் படிக்கவும் எழுதவும் முயற்சிக்கும். இதனால், ஹார்ட் டிஸ்க்கின் செயல்திறன் கூடுதலாகி, அதன் வாழ்நாள் குறையும் அபாயம் ஏற்படுகிறது. பைல் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தால், இந்த பிரச்னை ஏற்படாது. இந்த பாதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால், பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.

இதனை எப்படித் தீர்க்கலாம்? இதற்கான வழி defragmentation தான். இது NTFS வகை ட்ரைவ்களில் பெரிய பிரச்னையே அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்டு வந்த FAT32 ட்ரைவ்களில் தீர்வு காண வேண்டிய பிரச்னையாகும். இத்தகைய ட்ரைவ்களை இன்னும் பயன்படுத்துவோர், கட்டாயம் அவர்களின் ஹார்ட் டிஸ்க்குகளை defragment செய்திட வேண்டும். இதற்கு இணையத்தில் நிறைய டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்காக, அடிக்கடி defragment செய்திடுவதும் தவறு. டிபிராக் செய்வதனால், கம்ப்யூட்டரின் செயல்பாடு கூடுதல் வேகத்தில் இருக்கும். பைல்களைக் கண்டறிவதும், அவற்றைக் கையாள்வதும் வேகமாக நடக்கும். மேலும், பெற இயலாத பைல்களைத் தேடிக் கண்டறிவதும் எளிதான செயலாக மாறும்.



அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும்:


ஹார்ட் ட்ரைவினைப் பொறுத்தவரை அதனை பூட் செய்வதும், ஷட் டவுண் செய்வதுமே அதற்கு அதிக சிரமம் தரும் செயலாகும். அடிக்கடி அதனைச் சுழலவிடுவதும், சுழல்வதைத் திடீரென நிறுத்துவதும், ஹார்ட் டிஸ்க்கினை விரைவில் கெட்டுப் போக வைத்திடும். இதில் நமக்குச் சிக்கலான ஒரு சூழல் ஏற்படுகிறது. எந்நேரமும் ஹார்ட் டிஸ்க்கினை இயக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதற்காக, அதனை அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும் அதற்குக் கேடு விளைவிக்கும். இரண்டிற்கும் இடையேயான பாதுகாப்பான கோடு எதுவாக இருக்கும்? இப்போது கம்ப்யூட்டரை standby அல்லது hibernation என இரு நிலைகளில் வைக்கும் வசதி உள்ளது. குறைந்த நேரம் நீங்கள் கம்ப்யூட்டரை விட்டுச் செல்வதாக இருந்தால், இந்த இரு நிலைகளில் ஒன்றில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதிக நேரம் எனில், கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிட்டுச் செல்வதே நல்லது. அதாவது ஹார்ட் டிஸ்க்கினை முழுமையாக நிறுத்துவது இங்கு விரும்பத்தக்கது.



மின்சக்தியில் ஏற்றத் தாழ்வு:


மின்சாரம் நமக்கு எப்போதும் ஒரே சீராகக் கிடைப்பதில்லை. அதன் பயன்பாட்டு சக்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். இது மிகக் குறைவான நானோ செகண்ட் அளவில் ஏற்பட்டாலும், டிஜிட்டல் சாதனங்களில் பிரச்னையை ஏற்படுத்தும். கம்ப்யூட்டருக்குச் செல்லும், மின்சார ஓட்டத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தால், அது நிச்சயம் ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்கும். இதனை ஆங்கிலத்தில் surges என்று சொல்வார்கள். இதிலிருந்து ஹார்ட் டிஸ்க்கினை எப்படிப் பாதுகாக்கலாம்?


சர்ஜ் ப்ரடக்டர் (surge protector)என்னும் பாதுகாப்பு சாதனம் இதற்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இவை, மின்சக்தி ஓட்டத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை உடனுடக்குடன் கண்டறிந்து, அவற்றை இந்த சாதனங்களுக்குக் கடத்தாமல் திருப்பி விடும் வேலையை மேற்கொள்கின்றனர். நம் கம்ப்யூட்டரையும், ஹார்ட் டிஸ்க்கினையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், இது போன்ற ஒரு சர்ஜ் புரடக்டரை வாங்கி இணைப்பது நல்லது.
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும் வாய்ப்புகள் ஏற்படும். இருப்பினும் இந்த தகவல்களைத் தெரிந்து கொண்டு, அவற்றிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது

Saturday 22 August 2015

Google Loon

இலங்கை உடன் கடந்த செவ்வாய்க்கிழமை, கூகிள் Loon திட்டம் அரிமுகம் ஆகி உள்ளது.  உலகத்தில் Google Loon மூலம் முழுவதுமாக  இணையும்  நாடு என்ற பெருமையை இலங்கை பெறுகிறது.


தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மங்கள சமர வீர இதை பற்றி குறிப்பிடும் போது, ஹீலியம் நிறைக்கப்பட்ட பலூன்கள் மூலம் உயர் வேக இணைய சேவைக்கு இன்று கூகிள் உடன் ஒப்பத்தம் உத்தியோக பூர்வமாக கைச்சாத்து ஆகியுள்ளது என கூறினார்.

Google  Project Loon in 2013 ல் அறிமுகம் ஆகியது. பின்தங்கிய கிராமங்களில் அதி வேக இணைய இணைப்பை பெற்று கொடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இலங்கையின் தலையில் உள்ள பருத்தித்துறை முதல் தேவேந்திர முனை வரை இந்த சேவை இன்னும் சில மாதங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்படுள்ளது. இலங்கையில் உள்ள 6, ISP களும் இதில இணைந்து சேவையை வழங்கலாம். அனைத்து பலூன்களும் அடுத்த வருட பங்குனி மாதத்துக்கு இடையில் வானில் ஏவப்படும் என கூகுள் அறிவித்துள்ளது!!

ஆனால் தற்போது நாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் 4G உடன் இணைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகி விட்டது. எவ்வாறாயினும் Data கட்டணங்கள் குறையலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

வணிக விமானங்களின் பாதையை போல இரு மடங்கு உயரத்தில் பலூன்கள் நிறுத்தப்பட உள்ளதுடன், அவை சாதாரண கண்ணுக்கும் தெரியும்.  முதன்  முதலில் கூகிள் இதை பரீட்சார்த்தமாக 2013 ல் நியூ சிலாந்து  நாட்டில் அறிமுகம் செய்தது.
இலங்கையில் 2.8 மில்லியன் மக்கள் இணையத்துடன் இணைந்து உள்ளதுடன், 606000 நிரந்தர இணைப்புகளும் உள்ளது. இலங்கைன் மொத்த சனத்தொகை 20 மில்லியன். 1989ல் முதலாவது கையடக்க தொலைபேசி சேவை  இலங்கையில் அறிமுகம் ஆனதுடன், 2004 ல் 3G ம் அறிமுகம் ஆகியது. அத்துடன் 4G ம் 2013 ல் அறிமுகம் ஆகியது.