Wednesday 30 December 2015

வாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!

torrborder.gif

ன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்படுகிறது. இந்த 'வாட்ஸ் அப்'பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன.

இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வலைத்தளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளித்துள்ளனர்.

 
1.) வாட்ஸ்அப் லாக்


வாட்ஸ் அப்-ஐ லாக் செய்வதில் முக்கியமான விஷயம் முதலில் ஒரு பாஸ்வேர்டு அல்லது 'பின்' பயன்படுத்துதலே சிறந்தது. வாட்ஸ் அப்பிற்கென பிரத்யேகமாக எந்த ஒரு லாக்கும் இல்லை. இதற்கென ஆப் லாக்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், மூன்றாவது மனிதர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். ஆனாலும், செல்போன் தொலைந்துபோகும் பட்சத்தில் அதை தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 'சாட் லாக்', 'வாட்ஸ் அப் லாக்', 'செக்யூர்சாட்' இவை மூன்றையும் ஆண்ட்ராய்டு போன்களில் எளிதாக பயன்படுத்தலாம். எனவே இவற்றை பயன்படுத்தி யாரும் உங்களது தகவல்களை திருடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
 


2.) வாட்ஸ் அப் புகைப்படங்கள், போட்டோ ரோலில் சேர்வதை தடுக்க...



புகைப்படங்களை பரிமாறும்பொழுது, அவை பொதுவாக உங்கள் போட்டோ ரோலில் சேகரிக்கப்படுகிறது. அதனால் அவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இவற்றை ஐபோனில் எளிதில் தடுக்கலாம். போன் செட்டிங்கில் உள்ள மெனுவில் சென்று, பிரைவசியில் உள்ள புகைப்படத்தை 'டீசெலக்ட்' செய்ய வேண்டும். இதனால் அவை போட்டோ ரோலில் சேர்வது எளிதில் தடுக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பயனாளர்கள், இதனை 'பைல் எக்ஸ்ப்லோரர் ஆப்' மூலம் தடுக்கலாம். இதில், நோ மீடியா எனும் பைலை உருவாக்குவதின் மூலம் தடுக்கப்படுகிறது. வாட்ஸ் அப் இமேஜை லாக் செய்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கலாம். ஆனால், போன்கள் திருடப்படும்போது 100% பாதுகாப்பைத் தரும் என கூற முடியாது.

 


3.) லாஸ்ட் சீனை மறைப்பது



நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தீர்கள் என மற்றவர்களுக்கு தெரியும். இது மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வழிவகை செய்யலாம். இந்த லாஸ்ட் சீன்  மற்றவர்கள் அறியாதவாறு தடுக்க 'ஹைடு லாஸ்ட் சீனை' பயன்படுத்தலாம். ஆனால் இதை செய்தால் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களின் லாஸ்ட் சீனையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது.
 


4.) ப்ரொஃபைல் பிக்சரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க...



உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை நீங்கள் பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். அதோடு இந்த ப்ரொஃபைல் புகைப்படத்தை பயன்படுத்தி கூகுள் சர்ச்சில் உங்களது விவரங்களை பெற முடியும். அதனால், பிரைவசியில் உங்கள் புகைப்படத்தை தொடர்புகளில் மட்டும் பொருத்த வேண்டும்.
 

5.) போலி தகவல்களிடம் விழிப்போடு இருங்கள் 
 

வாட்ஸ் அப் எப்பொழுதும் நேரடியாக உங்களோடு தொடர்பு கொள்வதில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் நேரடியாக உரையாடல்கள், ஆடியோ தகவல்கள், புகைப்படங்கள், மாற்றங்கள், வீடியோக்களை எப்பொழுதும் மின்னஞ்சல் உதவியில்லாமல் உங்களுக்கு அனுப்பாது. குறிப்பிட்ட இலவச நன்கொடைகள் பற்றிய தகவல்கள் வந்தால் நிச்சயம் அது போலியாகத்தான் இருக்கும். இவை நம்பத்தகுந்தது அல்ல.
 


6.) தொலைபேசி தொலைந்தால் வாட்ஸ் அப்பை செயலிழக்கச் செய்யுங்கள்



செல்போன் தொலைந்தால், வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு எளிய மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. சிம் கார்டை லாக் செய்வது பற்றிய வசதிகளை அளிக்கறது. தொலைபேசி தொலைந்து போனால் உடனே அதே எண்ணில் மற்றொரு தொலைபேசியில் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை திறந்தால் தானாகவே தொலைந்த வாட்ஸ் அப் அக்கவுண்ட் செயலிழக்கப்படும். இதன் மூலம் வாட்ஸ் அப் அக்கவுண்ட் தானாகவே செயலிழக்கப்படும்.
 

7.) எதைப்பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள் 

இது கடைசி, இதுவே முடிவல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தகவல்களை எப்பொழுதும் பகிர்வதை தவிர்த்திடுங்கள். முகவரி, தொலைபேசி எண், வங்கி விவரம், கிரெடிட் கார்டு விவரம், பாஸ்வேர்டுகளை வாட்ஸ் அப்பில் பகிராதீர்கள்.
 

8.) வாட்ஸ் அப்பை 'லாக் அவுட்' செய்ய மறக்காதீர்கள்:
 

வாட்ஸ் அப் தற்போது நிறைய சேவையை வழங்கி வருகிறது. பல பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் லாக் அவுட் செய்வது பற்றிய விவரம் தெரிவதில்லை. இதை தொலைபேசி மூலமோ பிரவுசர் மூலமோ செய்யலாம்.

Sunday 20 December 2015

ஸ்மார்ட் போன் முடக்கிய சாதனங்கள்!

security_guard_smartphone_app.jpg


இன்றைய தொழில் நுட்பம் வழங்கிய சாதனங்களில், ஸ்மார்ட் போன் மட்டுமே நாம் ஏற்கனவே மேற்கொண்ட வாழ்க்கையின் சில பரிமாணங்களை மாற்றிப் போட்டுள்ளது. நாம் மிக ஆர்வத்துடனும், பெருமையுடனும் பயன்படுத்திய சாதனங்களை மூலைக்கு அனுப்பிவிட்டது. இதுவரை வேறு எந்த சாதனமும் இந்த அளவிற்கு மாற்றங்களைத் தந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு, ஸ்மார்ட் போன் நம் வாழ்வில் இடம் பிடித்துவிட்டது. பெரும்பாலானவர்களுக்கு, அவர்களின் அன்றாட வாழ்வின் இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது.

சமூக ஊடகங்களுடன் இதனை இணைத்துப் பார்த்தால், இதுவரை சென்ற சந்ததியினர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கையாண்ட வழிகளை அடியோடு புரட்டிப் போட்டது இந்த ஸ்மார்ட் போன் எனலாம். இதனை 'போன்' என அழைத்தாலும், நாம் போனாக இதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவுதான் எனலாம். ஸ்மார்ட் போன் பயன்பாட்டுப் பட்டியலில், அழைப்புகள் ஏற்படுத்த இதனைப் பயன்படுத்துவது இறுதியாகத்தான் உள்ளது. மற்ற செயல்பாடுகளே அதிகம் உள்ளன. எனவே, ஒரு சிலர், இதனை 'போன்' என்று சொல்வதைக் காட்டிலும், 'டேப்ளட்' அல்லது 'பேப்ளட்' என அழைக்கலாமே என்று கருத்து தெரிவிக்கின்றனர். 


இன்றைய பயனாளர்கள், குறிப்பாக இளைஞர்கள், இதனைப் போனாகப் பயன்படுத்தாமல், அப்ளிகேஷன்களைப் பதிந்து, அவற்றின் மூலம், குறுஞ்செய்திகளைத் தொடர்ந்து பரிமாறிக் கொண்டு, தங்கள் தகவல்கள் பரிமாற்றத்தை முடித்துக் கொள்கின்றனர். மேலும், இளவயதினர் ஆசைப்படுவது போல, ஒரே நேரத்தில், பலருடன் எளிதாக தகவல் தொடர்பு கொள்ள முடிகிறது. போனில் பேசும் போது, நம் முழு கவனத்தையும் அதில் செலுத்த வேண்டும். ஆனால், டெக்ஸ்ட் டைப் செய்து தகவல்களைப் பரிமாறும் போது, அந்த அளவிற்குக் கவனம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் தான், பல வீடுகள், தங்கள் தரைவழி தொடர்பில் உள்ள தொலைபேசி தொடர்புகளை ரத்து செய்து வருகின்றனர்.  ஸ்மார்ட் போன்கள் எந்த சாதனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்று இங்கு பார்க்கலாம்.



பொருள் பார்த்து போட்டோ எடுக்கும் கேமரா:


image.jpg


ஸ்மார்ட் போன்கள் முதலில் ஒழித்துவிட்ட சாதனம், நாம் ஏதேனும் ஒரு பொருளை அல்லது நபரை இலக்காகக் கொண்டு, பார்த்து போட்டோ எடுக்கும் Point and Shoot Camera தான். கடந்த பத்து ஆண்டுகளாகவே, இந்த கேமரா சிறிது சிறிதாக மறைந்து வந்தது. தற்போது ஸ்மார்ட் போன் வைத்துள்ள யாரும், இந்த வகை கேமராவில் எடுக்கும் போட்டோக்களைக் காட்டிலும் மிகவும் துல்லியமாக போட்டோ எடுக்க முடிகிறது. எனவே, தனியாக கேமரா ஒன்றை யாரும் வாங்கிப் பயன்படுத்துவதில்லை. இதனை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவதாலேயே, இதனைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் புதிய சில வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த வகை கேமராக்களில், இணையத் தொடர்பு கொள்ளும் வை பி இணைப்பினை இயக்க முடியும். நம் ஸ்மார்ட் போனையும், இந்த வகை Point and Shoot கேமராவினையும், வை பி வழியாக இணைத்து, கேமராவில் எடுத்துள்ள போட்டோக்களைப் பார்க்க முடியும். கேமராவினை தொலைவில் வைத்துவிட்டு, ஸ்மார்ட் போனில் உள்ள திரையை அழுத்துவதன் மூலம், போட்டோ எடுக்க முடியும். எடுத்த போட்டோவை, கேமராவிலிருந்து நேரடியாக, வை பி மூலம் சமூக இணைய தளங்களுக்கு அனுப்ப முடியும். இந்த வசதிகள் இருந்தால் தான், இந்த வகை கேமராக்கள் தற்போது விற்பனையாகும். இருப்பினும், இந்த வசதிகள் இருந்தாலும், சில ஆண்டுகளில் இவையும் மறைந்துதான் போகும் என கேமரா தயாரிப்பவர்கள் எண்ணுகிறார்கள்.

ஸ்மார்ட் போன்களில் போட்டோ எடுப்பது மட்டுமின்றி, அவற்றை எடிட் செய்திடும் வசதிகளும் இப்போது கிடைக்கின்றன. உடனடியாக, எடுத்த மற்றும் எடிட் செய்த போட்டோக்களை உடனே, நண்பர்களுக்கு அனுப்ப முடியும். அல்லது, க்ளவ்ட் சர்வர்களுக்கு அனுப்பி, அதன் வழியாக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம். போட்டோ மட்டுமின்றி, வீடியோ பதிவினையும் ஸ்மார்ட் போன்கள் திறனுடன் மேற்கொள்வதால், ஸ்மார்ட் போன்கள் கேமராவினை ஓரங்கட்டியதில் வியப்பில்லை.



மியூசிக் பிளேயர்கள்:

walkman_girl4.jpg



 வாக்மேன், ஐ பாட், எம்பி3 பிளேயர்கள் என ஒரு காலத்தில் நம் இளைஞர்கள் தங்கள் இடுப்பில் கட்டிக் கொண்டு, பாடல்களைக் கேட்டுக் கொண்ட காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இசை கேட்க விரும்புபவர்கள், அதற்கான பைல்களை, ஸ்மார்ட் போனில் பதிந்து, அல்லது மைக்ரோ எஸ்.டி. கார்ட்களில் பதிந்து, கேட்டு ரசிக்கின்றனர். விரும்பும் பாடல்களைக் கட்டணம் செலுத்தி, ஸ்மார்ட் போனில் டவுண்லோட் செய்து, ரசிப்பதும் இப்போது பழக்கமாகிவிட்டது. எனவே, மியூசிக் பிளேயர்கள் என தனியே ஒரு சாதனத்தைக் கொண்டு செல்வது என்பது இனி நடைமுறையில் இருக்காது.



பெர்சனல் கம்ப்யூட்டர்:


தங்கள் ஸ்மார்ட் போனையே, பெர்சனல் கம்ப்யூட்டராகப் பயன்படுத்தும் பழக்கம் தற்போது மெல்ல மெல்ல பரவி வருகின்றது. இமெயில், இணைய தேடல் மற்றும் கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன்கள் பயன் படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரில் பணம் முதலீடு செய்திட முடியாதவர்கள், கூடுமானவரை, தங்கள் ஸ்மார்ட் போனையே, கம்ப்யூட்டருக்குப் பதிலாகப் பயன்படுத்துகின்றனர். வீடுகளில் வைத்து பயன்படுத்தும், ஹோம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இயக்கும் செயலிகள் அனைத்தையும் ஈடு செய்திடும் வகையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த அப்ளிகேஷன்கள் தற்போது கிடைக்கின்றன. அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் அதிக திறன் கொண்டு பார்க்கும் வேலைகள் அனைத்தையும், ஸ்மார்ட் போனில் பார்க்க முடியாது என்றாலும், அன்றாட கம்ப்யூட்டிங் பணிகளை, நம்மால், ஸ்மார்ட் போனில் மேற்கொள்ள முடியும். எனவே, ஸ்மார்ட் போன்கள், ஓரளவிற்கு, பெர்சனல் ஹோம் கம்ப்யூட்டரை ஓரங்கட்டி விட்டன என்ற கூற்றும் உண்மையே.



டேப்ளட் பி.சி:


பல ஆண்டுகளாக உயர்ந்து வந்த டேப்ளட் பி.சி.க்கள் விற்பனை, தற்போது, அதிகத் திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களால் குறைந்து வருகிறது. அதாவது, மக்கள் டேப்ளட் பி.சி.க்களை வாங்கிப் பயன்படுத்தாமல் இல்லை. அவர்கள், சிறிய அளவிலான டேப்ளட் சாதனங்களை வாங்கி, ஸ்மார்ட் போன் போலப் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போனின் பரிமாணம், மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்து, தற்போது 5 அல்லது 6 அங்குல அளவிலான திரை, ஸ்மார்ட் போன்களின் ஒரு நிச்சயிக்கப்பட்ட அம்சமாக அமைந்துவிட்டது. இந்த அளவிலான திரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் போலவே செயல்படுகின்றன. இவற்றைச் சட்டைப் பைகளில் வைத்து எடுத்துச் செல்லவும் முடியவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், கம்ப்யூட்டரில் வைத்து முன்பு விளையாடப்பட்ட விளையாட்டுகள் எல்லாம், ஸ்மார்ட் போன்களுக்கென வடிவமைக்கப்பட்டு, அதற்கான ஸ்டோர்களில் கிடைக்கின்றன

அறிவியல் & தொழில்நுட்ப தகவல்கள்

ஆண்ட்ராய்டு பெயர் : அம்மாவை கேட்டு சொல்றேன், சுந்தர் பிச்சை.!!
torrborder.gif

sundarpichai-18-1450432697.jpg

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொருப்பேற்று முதல் முறையாக இந்தியா வந்திருக்கும் சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சையை இந்த கேள்வி சிரிப்பை தூண்டியது என்றே கூற வேண்டும். அதாவது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தற்கு இந்திய இனிப்பு வகையின் பெயர் சூட்டப்படுமா என்பதே அந்த கேள்வியாகும்.

androidversioner.jpg

 ஸ்ரீராம் கல்லூரியின் கலந்துரையாடும் போது இந்த கேள்வி எழுப்பப்பட்டதோடு சுந்தர் பிச்சைக்கு பரிந்துரை செய்யும் விதமாக பேடா, நெய்யப்பம் உள்ளிட்ட சில இனிப்பு வகைகள் கூறப்பட்டன. இதுவரை ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் டோநட், எக்ளேர், ஜின்ஜர் ப்ரெட், ஐஸ் க்ரீம் சான்ட்விட்ச், ஜெல்லி பீன், கிட்காட், லாலிபாப் மற்றும் மார்ஷ்மல்லோ வரை முற்றிலும் வெளிநாட்டு இனிப்பு வகைகளின் பெயர்களே சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



 ஏன் இந்திய இனிப்பு வகை பெயர் சூட்டக்கூடாது என கேட்க்கப்பட்டதற்கு, எனது அம்மாவை நான் சந்திக்கும் போது அவரிடம் பரிந்துரைகளை கேட்கிறேன், மேலும் ஆன்லைன் மூலம் கருத்து கேட்டு பின் ஆண்ட்ராய்டு என் இயங்குதளத்திற்கு பெயர் சூட்டுவதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்
 

சீனாவை விட்டு இந்தியா வரும் இந்திய நிறுவனம்.!!
torrborder.gif

micromax-logo.jpg

இந்தியவை சேர்ந்த நுகர்வோர் மின்னணு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அனைத்து மொபைல் போன் கருவிகளையும் இந்தியாவிலேயே தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்சமயம் சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் மைக்ரோமேக்ஸ் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் போது மைக்ரோமேக்ஸ் கருவிகளின் விலை இன்னும் குறையும் என்றே கூற வேண்டும்.

 18-1450428209-01.jpg

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மூன்றில் இரண்டு கருவிகள் மட்டுமே தற்சமயம் இந்தியாவில் பொருத்தப்படுவதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஹுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.

மைக்ரோமேக்ஸ் கருவிகளின் 100 சதவீத தயாரிப்பு பணிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவை விட இந்தியாவில் தயாரிப்பு பணிகள் குறைந்த செலவில் முடிந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 2008 ஆம் ஆண்டு முதல் குறைந்த விலை கருவிகளை விற்பனை செய்து வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் 300 கோடி முதலீடு செய்து சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை துவங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மின்னணு தயாரிப்பு சந்தையை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வரும் நிலையில் ஃபாஸ்கான் நிறுவனமும் 500 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்த படியாக இந்தியாவில் தற்சமயம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தில் இருப்பதோடு உலக ஸ்மார்ட்போன் சந்தையில் மூன்றாவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

18-1450428219-06.jpg

  உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனான யு யுடோப்பியா எனும் புதிய கருவியை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

​உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் !!
torrborder.gif

 உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் மற்றும் வன் பொருள்களின் உதவியுடன் விவசாயம் செய்யும் ரோபோக்களை தயாரித்துள்ளனர் ஃபார்ம் போட் நிருவனத்தினர் . இதன் மூலம் விவசாயத்தை நவீன முறையில் கையாள தயாராக்கி வருகின்றனர். ஃபார்ம் போட்டை உபயோகிப்பதன் மூலம் உங்கள் வீட்டின் முன்னோ அல்லது தோட்டத்திலோ விருப்பமான பயிர்களை வளர்க்கலாம்.



 ஃபார்ம் போட் ரோபோட்டுகள் :

திடமான மற்றும் மெல்லிய உருவம் கொண்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ள சாதனத்தில் 5மிமீ தடித்த தகடுகளுடன் இணைத்து கட்டப்பட்டுள்ளது. மற்றும் சக்தி வாய்ந்த NEMA -17 ஸ்டெப்பர் மோட்டார்களுடன் இணைந்து, மில்லி மீட்டர் துல்லியம் கொண்ட XYZ திசையில் கட்டப்பட்டு உள்ளது. கூடவே இதர பாகங்களான சென்சார்கள் , விதை செலுத்திகள், துளைக்கும் கருவிகள் மற்றும் சில பாகங்களும் அடங்கும். இந்த கருவிகள் அனைத்தும் மின் இணைப்பினை நாடாமல் காந்தத் தன்மையுடன் ஒன்றையொன்று இணைத்துள்ளது.அதனால் செய்யபோகும் வேலைக்கேற்ற தேவையான கருவிகளை தானாகவே தேர்ந்தேடுத்து பயனபடுத்தக் கூடியது. சரியான அளவு மற்று காலநிலை போன்றவற்றில் பயிர்களை வளர்க்ககூடியது.

 இந்த மாதிரியான நவீன நுட்பங்களை விவசாயத்தில் செலுத்தியது உண்மையில் பாராட்டிற்குறியதே! இதனால் விவசாயத் துறையில் ஒரு மேம்பட்ட வளர்ச்சியினைக் காணும் வாய்ப்புகள் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற கருவிகள் அதிக அளவிலாளான பயிர்களை வளர்க்கும் நுட்பங்களையோ அல்லது விவசாயப் பண்ணைகள் போன்ற அமைப்பில் பயிர்களை வளர்க்கவோ வழிவகுக்கும். மேலும் தேனீ, மண்புழு போன்ற வளர்ப்புகளையும் அழிந்து வரும் உயிரனங்களையும் வளர்க்கவோ வழி வகுக்கும்.

ஃபார்ம் போட்டின் இந்த முயற்சி விவசாயத்தினை பொருத்தவரையில் முதலாவது தயாரிப்பே, என்றாலும் இவை ஒரு டிராக்டர்கள் செய்யும் வேலையினை செய்து விடும் அளவிற்கு திறன் வாய்ந்தது. மேலும் இந்த ரோபோக்கள் கூடிய விரைவில் கிக்சஸ்டாட்டருக்குள் நுழைந்தவுடன் அதன் முன்பதிவுகளை பெறலாம்.


தானாகவே காற்று நிரப்பிக் கொள்ளும் பம்ப் டையர் !!
torrborder.gif

32113.jpg

 மிதிவண்டிகளை பயன்படுத்துபவர்களிடம் உங்களது வாகனத்திற்கு எந்த தேவைக்காக அதிகம் செலவிடுகுறீர்கள் என்று கேட்டால் அவர்களை பொறுத்தவரையில் காற்று நிரப்புவதைதான் கூறுவார்கள் . அந்த காற்றினையும் தானாகவே ஏற்றிக் கொள்ளும் நுட்பத்தை ஒரு வருடத்திற்கு முன்னரே பம்ப் டையர்நிருவனத்தினர் தொடங்கியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே! தற்போது அதே யுக்தியை பைக்குகளிலும் அறிமுகபடுத்த உள்ளனர் . இதனால் அடிக்கடி காற்றினை நிரப்பிக் கொள்ளும் அவசியமில்லை.

எப்படி தானாகவே நிரப்பிக் கொள்ளும்?

டயர்களின் வால்வுகளில் காற்றினை நிரப்ப வெளிப்புறம் உள்ள வால்வுகளில் காற்றானது நிரப்பப்படும் போதுமான அளவு காற்று நிரம்பியவுடன் காற்று நிரப்படுவதை நிறுத்திக் கொள்ளும். இதனால் வாகனங்களில் காற்றை நிரப்ப உங்கள் கைகளை அழுக்காக்கி கொள்ளும் அவசியம் இருக்காது. மேலும் தேவையான அளவிற்கு காற்றினை உயர்த்தியும் குறைத்தும் கொள்ளலாம்.அப்படியானால் அடிக்கடி காற்றினை நிரப்பிக் கொள்வது என்பது அவசியமில்லை. பெஞ்சமின் பிராங்கிளின் இதனை அடுத்த வருடத்தில் கிக்ஸ்டாட்டரில் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஒரு சாதனத்தின் விலையினை $30 முதல் $55 வரை இருக்கலாம் என நிர்ணயித்துள்ளனர். தானாகவே காற்றினை நிரப்பிக் கொள்ளும் யுக்தி என்பது இதற்கு முன்னரே மிதிவண்டிகளில் பயன்படுத்தப்பட்டது. தற்போது அதே நுட்பத்தை பைக்குகளில் 700cமற்றும் 26-அங்குலம் கொண்ட டயர்களுக்கு பொருந்தும்படி அமைக்க உள்ளனர்.


பிரேசிலில் மீண்டும் வாட்ஸ் அப்!!
torrborder.gif

logo-whatsapp.png

பிரேசிலில் மீண்டும் வாட்ஸ் அப் சேவை தொடங்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மார்ட் கைபேசிகளில் குறுஞ்செய்தி சேவையின் ஜாம்பவனான வாட்ஸ் அப், 48 மணி நேரம் பிரேசிலில் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

பிரேசிலில் நடைபெற்று வந்த வழக்கு ஒன்றில், நீதிமன்ற உத்தரவுக்கு வாட்ஸ் அப் ஒத்துழைக்க மறுத்தது.

எனவே அதன் சேவையை 48 மணிநேரம் நிறுத்தி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து முடங்கிய சேவை, மீண்டும் தொடங்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதன் போட்டி நிறுவனம் ஒன்று, 10 லட்சத்துக்கும் அதிகமான புதிய பயனாளர்களை கையாள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது


அகதிகள் நிலையும், ஸ்டீவ் ஜாப்ஸும்
torrborder.gif

jobs_2662175f.jpg

ஸ்டீவ் ஜாப்ஸ் தவிர சிரிய அகதிகளின் நிலையை உணர்த்தும் வேறு இரண்டு சுவரோவியங்களையும் அவர் வரைந்திருக்கிறார். இந்த ஓவியங்கள் அகதிகள் சார்பாக மனிதநேய வாதத்தை வலுவாக முன்வைக்கின்றன.

இதைத்தான் பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் நினைவுபடுத்தி, அகதிகள் பிரச்சனையில் அவர்கள் சார்பாகக் குரல் கொடுத்திருக்கிறார். சிரியாவில் இருந்து குடிபெயர்ந்த அகதியின் மகன் எனும் குறிப்பை மட்டும் இந்த ஓவியத்துடன் பேங்க்ஸி எழுதி வைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் லட்சக்கணக்கில் குவிந்துள்ள சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பாக மிகப்பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் அகதிகளை ஒரு பிரச்சனையாக அல்லாமல், ஒரு வளமாகக் கருத வேண்டும் எனும் கருத்தை பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.

பொதுவாக பேங்க்ஸி ஓவியங்கள் மூலம் மட்டுமே பேசுவார். விதிவிலக்காக இந்த முறை தான் வரைந்த ஓவியம் தொடர்பாக ஒரு விளக்கத்தையும் அவர் பிரிட்டன் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதில், "புலம்பெயர்தலை (அகதிகள்) நாட்டின் வளத்திற்கான இழப்பாகப் பார்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது, ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சிரிய அகதியின் மகன்தான். அவர் உலகின் மதிப்பு மிக்க ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கினார். சிரியாவின் ஹாம்ஸில் இருந்து வந்த ஒரு இளைஞரை நாம் அனுமதித்ததால்தான் இது சாத்தியமாயிற்று” என்று குறிப்பிட்டுள்ளார்.அகதிகளாக வருபவர்களில் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கலாம் எனும் கருத்தை முன்வைத்து அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

இந்த ஓவியங்களை அவரது இணையதளத்திலும் (http://www.banksy.co.uk/index1.asp) காணலாம்.


2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள்
torrborder.gif

 சாதரணமாக கேமராக்களில் எடுக்கும்  அனைத்து  புகைப்படங்களும்  தத்ரூபமாக இருப்பதில்லை. அவையனைத்தும்  எடுக்கப்படும் இடம் நேரம் மற்றும் சில கால அளவுகளைப் பொறுத்தே சிறப்பாக அமையும். அதுவும் அதிக இடங்களையும் மக்களையும் ஒட்டு மொத்தமாக ஒரே புகைப்படத்தில் கொண்டு வரும் ட்ரோன் புகைப்படங்களை எடுப்பது என்பது கடினமே.ட்ரோன் புகைப்படங்கள் என்பது பறக்கும் விமானங்களின் உதவியுடன்  பல தொலைவிற்கு அப்பால் இருந்து ஒரு பகுதியையோ  அல்லது  நகரத்தையோ முழுவதுமாக ஒரு புகைபடத்திற்குள் கொண்டு வருவதாகும். மேலும் இவற்றிற்கென  வரையறுக்கப்பட்ட எல்லைகள் என எதுவும் இல்லை என்பதால் ஒரு புகைப்படமே பல அர்த்தங்களை உணர்த்தி விடும்.அத்தகைய அனைத்து அளவீடுகளும் சரியாக அமைந்த சிறந்த  ட்ரோன்   புகைப்படங்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்காக  கீழே 

click in the image to view full size

 NlY6PfF.jpg quggXiV.jpg Df5EODT.jpg
iiwB71c.jpg ydTTdv7.jpg I4W42jm.jpg
axP8P9n.jpg iqW16Ia.jpg Wjcpo7U.jpg
VuNRrbY.jpg3BEbJ0D.jpg

 

வந்துவிட்டது தொலையியக்கியுடன் கூடிய குளிர்சாதனப்பெட்டிகள்
torrborder.gif

 இதுவரை தொலைக்காட்சி  கணிணி  விளையாட்டு சாதனங்கள்  போன்ற இன்னும் சில மின்னணு சாதனங்களை  மட்டும் தான்  தொலையியக்கியுடன்  உட்கார்ந்த இடத்திலேயே இயக்கிக் கொண்டிருந்தோம் . தற்போது அந்தப் பட்டியலில் குளிர்சாதனப் பெட்டியும் வந்துள்ளது .

 நீண்ட காலமாகவே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி தற்போது அறிமுகமாகியுள்ளது.தற்போது இதை பற்றிய முன்னோட்டக் காட்சியினை ஜப்பானியர்கள் அறிமுகபடுத்தியிருந்தனர். இந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி ஒரு வேலைக்காரனைப் போல உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் குளிர்பானங்களை வழங்கும் ஒரு இயந்திர மனிதனாக செயல்படுகிறது. இதனால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் குளிர்சாதனப் பெட்டி இருக்கும் இடத்தை தேடி நாம் போக வேண்டிய அவசியமில்லை.இந்த சிறிய குளிர்சாதனப் பெட்டியே நம்மைத் தேடி வந்து நமக்குத் தேவையானவற்றை அளிக்க வல்லது .


நகரும் தலையும் அதிநவீன பிளாஸ் லைட்டுகளையும் கொண்ட இந்த சிறு குளிர் சாதனப் பெட்டியில் நீங்கள் உங்களுக்கு பிடித்த தின்பண்டங்களையும் குளிர்பதனங்களையும் நிரப்பிக் கொள்ளலாம்.இதனால் உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது வயதானவர்களுக்கு ஒரு உதவியாக இருக்க கூடும்.இதில் சிறிய அளவுடன் கூடிய பொருள்கள் மட்டுமே வைக்க முடியும் என்பது ஒரு குறையாக இருந்தாலும் சாதாரண குளிர்சாதனப் பெட்டியி இல்லாத ஒரு உதவியாளனை இதில் காணலாம் என்ற நம்பிக்கையில் இதனை வாங்கலாம். இது உங்கள் வீட்டை அழகுபடுத்தும் ஒன்றாக அமையும்.

குளிர்சாதனப் பெட்டியின் ஒவ்வொறு பகுதியிலும் ஆறு கேன்களையும் தொலையியக்கியுடன் கூடிய வசதிகளையும் செய்து தருகிறது. மேலும் 2 மணி நேர மின்கலன் சேமிப்பில் ஒரு முழு அறையையும் தொடர்ந்து வலம் வரும் திறன் கொண்டது.இதனை ஹேர் ஏசியா நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர்.இந்த R2-D2 வின் நகரும் குளிர்சாதனப் பெட்டியை வாங்குவதற்கு ஜப்பானுக்கு சென்றால் மட்டுமே முடியும் . இதன் முன் உத்தரவுகளை¥ 998000 செலுத்தி அதாவது $8274 டாலர்களை செலுத்தி பெறலாம் .


சார்ஜராக மாறிய பணப்பை
torrborder.gif

Wallet-perspective-open_2048x2048-185x30

 நாம் அவசரமாக எங்காவது செல்லும்போது போனில் சார்ஜர் இல்லாவிடில் உடனே ஒரு சார்ஜரை எடுத்து பையில்- போட்டுக் கொண்டு போகும் இடத்தில் சார்ஜ் நிரப்பி கொள்ளலாம் என நினைத்து கொள்வோம்.அனால் திருதிஷ்டவசமாக நமக்கு தென்பட்ட  இடங்களில் எல்லாம்  சார்ஜ் ஏற்றும் வசதிகள் இருப்பதில்லை.இதற்காகவே நோமட் நிறுவனத்தினர் பணப்பையை சார்ஜராக உபயோகிக்கும் நுட்பத்தினை அறிமுகபடுத்தியுள்ளனர்.

இதில் பணப்பையிலேயே சார்ஜ் செய்யும் திறனும் இருக்கிறது . இந்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பணப்பைகள் உங்களுக்கு உங்களுக்கு ஒரு இலாபகரமான சார்ஜராகவும் மாறுகின்றன .இந்த பணப்பையை உங்கள் போனிற்கு தேவையான சார்ஜினை கொண்ட ஒரு தொகுப்பினைக் கொண்டுள்ளது . இது சாதாரண சார்ஜர்களைப் போல் இடத்தை அடைத்து கொண்டிருக்காமல் உங்கள் பணப்பையே சார்ஜராக மாற்றுவதால் கையாளச் சிறந்ததே.!
95mm உயரமும் 125mm அகலமும் 25mm தடிமனும் மட்டுமே கொண்டிருப்பதால் மிகவும் எளிதான எடையைஉடைய ஒரு மெல்லிய சிறிதான பணப்பையில் சார்ஜினை சேமிக்கும் திறனை பெற்றுள்ளது . இதுவே ஒரு முழு ஐபோன் 6s ஐ முழுவதுமாக சார்ஜ் ஏற்றும் திறன் கொண்டதாக உள்ளது.

wallet-582x615-284x300-284x300.jpg

பணப்பையில் உள்ள சார்ஜ் தீர்ந்து விட்டால் அதனை எந்த usb சார்ஜரினைக் கொண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதிலுள்ள பிளாஷிங் இண்டிகேட்டர் லைட்டுகள் பணப்பையில் எவ்வளவு சார்ஜுகள் இருக்கிறது என்பதை தெரியபடுத்திக் கொண்டே இருக்கும் . இந்த பணப்பை ஒரு பணத்தை சேமிக்கும் பையாக மட்டுமே செயல்படாமல் சார்ஜினை சேமிக்கும் நிலையமாகவும் செயல்படுவது சிறப்பே ! ஒரே நேரத்தில் அனைத்து சாதனங்களுக்கும்  சார்ஜ் ஏற்றும் வசதிகள் கொண்ட  நவீன சாதனங்கள்  இருப்பினும் இந்த  பணப்பை போன்ற சார்ஜர்   பயனர்களின் அவசர காலங்களில் கண்டிப்பாக கை கொடுக்கக் கூடியதாக அமையும் . ஐபோன்களுக்கு சார்ஜ் ஏற்றும் இந்த பணப்பையின் முன் உத்தரவுகளை $80க்கு பெறலாம். இது நவம்பர் 15ல் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

சிறுவர்களுக்கான ஸ்மார்ட் போன்

ஸ்வைப் (Swipe) நிறுவனம், சிறுவர்கள் பயன்படுத்துவதற்கான ஸ்மார்ட் போன் ஒன்றை, 'ஸ்வைப் ஜூனியர்' (Swipe Junior) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் இதனைப் பயன்படுத்தலாம். சிறுவர்களின் சிந்திக்கும் திறனைச் செயல்படுத்திப் பார்க்கும் வகையிலான செயல்பாட்டினைத் தருவதோடு, வேடிக்கை விளையாட்டுகள் மூலம் கற்றுக் கொள்வதனையும் இந்த ஸ்மார்ட் போனில் மேற்கொள்ளலாம். அதே நேரத்தில், சிறுவர்களின் செயல்பாட்டிற்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் வகையில், சிறுவர்களுக்கான கட்டுப்பாடுகளை செட் செய்து, அவர்களின் பயன்பாட்டினைக் கண்காணிக்கலாம். போனில் ஏற்படுத்தப்படும் தொடர்பு எண்கள், செட்டிங்ஸ் ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். சிறுவர்கள், இந்த ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் இணையத் தேடல், கேம்ஸ் மற்றும் பிற அப்ளிகேஷன்களில் செலவழிக்கும் நேரத்தையும் வரையறை செய்திடலாம். ஜி.பி.எஸ். மூலம், போன் எந்த இடத்தில் வைத்துப் பயன்படுத்தப்படுகிறது என்பதனையும் பெற்றோர்கள் அறிந்து கொள்ளலாம். 

சிறுவர்களுக்கான பல அப்ளிகேஷன்கள் இதில் பதியப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது இந்த ஸ்மார்ட் போன். இதன் யூசர் இன்டர்பேஸ் அமைப்பினைச் சிறுவர்கள் விரும்பும்
வால் பேப்பர் மற்றும் ரிங் டோன்களுடன் மாற்றி அமைக்கலாம். சிறுவர்களுக்கானது என்பதால், கீழே போடுவதால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் உடைதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இதன் மற்ற தொழில் நுட்ப சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

திரை 4.5 அங்குல அளவில், ஐ.பி.எஸ். டிஸ்பிளே தருகிறது. ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசராகும். இதன் ராம் மெமரி 512 எம்.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4. இதில் 3ஜி இயக்கத்தில் செயல்படும் சிம் ஒன்றினை மட்டும் பயன்படுத்தலாம். பின்புறக் கேமரா 2 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 0.2 எம்.பி. திறனுடனுன் அமைக்கப்பட்டுள்ளது. வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதன் பேட்டரி 1,900 mAh திறனுடன் உள்ளது. இதன் மூலம் 8 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 120 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,999. ஊதா மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது

புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும் Android 6.1 இயங்குதளம்


கூகுள் நிறுவனம் அண்மையில் Android Masmelos எனும் தனது இயங்குதளத்தின் ஆறாவது பிரதான பதிப்பினை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இதன் மற்றுமொரு பதிப்பாக Android 6.1 இனை அடுத்த வருடம் ஜுன் மாதமளவில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.
 
இப்பதிப்பில் ஸ்கிரீன் மல்டி டாஸ்க்கிங் (Screen Multitasking) எனும் புதிய அம்சத்தினை உள்ளடக்கவுள்ளனர்.
 
இதன் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட திரையில் வெவ்வேறு அப்பிளிக்கேஷன்களில் பணியாற்றக்கூடியதாக இருக்கும்.
 
இது தவிர மேலும் சில அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை தொடர்பான தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குரோம் இயங்குதளத்திற்கான VLC Media Player அறிமுகம்


அனைத்து வகையான வீடியோ கோப்புக்களையும் இயக்குவதற்கு சிறந்த மென்பொருளாக VLC Media Player காணப்படுகின்றது.
இந்த மென்பொருள் ஆனது Windows, OS X, Linux, BSD, Solaris, OS/2, Haiku/BeOS, மற்றும் ReactOS ஆகிய இயங்குதளங்களில் செயல்படக்கூடியதாக ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
 
எனினும் முதன்முறையாக கூகுளின் Chrome OS இயங்குதளத்தில் செயல்படக்கூடிய பதிப்பு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
வீடியோ கோப்புக்கள் தவிர்ந்த ஆடியோ கோப்புக்களையும் இயக்குவதற்கு பயனுள்ளதாக காணப்படும் இந்த மென்பொருள் C மற்றும் C++ ஆகிய கணினி மொழிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

Sunday 18 October 2015

Facebook, Twitter, gmail இணைய தள கணக்கை முடித்திட

நினைத்த நேரத்தில் எல்லாம், எதிர்ப்படும் மின் அஞ்சல் சர்வர்களிலும், சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn), பலர் தங்களுக்கு என பல அக்கவுண்ட்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஏற்கனவே, தொடங்கப்பட்டவை சரியாகச் செயல்படுத்த முடியாத நிலை ஒரு காரணமாக இருக்கும். அல்லது, ஒவ்வொரு வகை செயல்பாட்டிற்கும் என ஒவ்வொரு அஞ்சல் மற்றும் சமூக வலைத்தள அக்கவுண்ட்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒரு சிலர், பாஸ்வேர்ட்களை மறந்துவிட்டு, புதிய பெயர்களில், அக்கவுண்ட்களைத் தொடங்கி, தங்கள் நண்பர்களுக்குத் தெரியப் படுத்துகின்றனர்.

இவர்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்னை, ஏற்கனவே, தொடங்கப்பட்ட இத்தகைய அக்கவுண்ட்களை மூடுவது எப்படி? என்று தெரியாத நிலை தான். அக்கவுண்ட்களை எளிதாகத் தொடங்கலாம். ஆனால், அவற்றை மூடுவது சற்று சிக்கலான விஷயம் தான். இதனால், மூடப்படாத, அஞ்சல் முகவரிகளுக்குப் பழைய நண்பர்கள் முக்கிய தகவல்களைத் தரலாம். அவற்றை இயக்க முடியாத நிலையில், அவற்றிற்கு உரியவர்கள், அவற்றைப் பெற முடியாத நிலை ஏற்படலாம். அனுப்பியவரோ, மிக நம்பிக்கையுடன் தான் அனுப்பிய அஞ்சலுக்கு பதிலை எதிர்பார்ப்பார்.



இது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் பலர், எப்படி இந்த மின் அஞ்சல் மற்றும் சமூக வலைத்தள அக்கவுண்ட்களை நிரந்தரமாக மூடுவது என்று கேட்டு கடிதங்களை அனுப்புகின்றனர்.  இன்றைய தேவைகளின் அடிப்படையில், அது குறித்த வழிகள் கீழே தரப்பட்டுள்ளன.


உங்களுடைய மின் அஞ்சல் முகவரியினை ஏதோ ஒரு காரணத்திற்காக மூடிட விரும்புகிறீர்கள். என்ன செய்வது? எப்படி மூடுவது? என்ற வழிகள் தெரியவில்லை. ஆனால், நம் அக்கவுண்ட் இனி இதில் இருக்கக் கூடாது என முடிவெடுத்த பின்னர், எப்படி மூடுவது என்ற வழி எங்கும் கிடைக்கவில்லை. இதே போல் தான் சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn). அதிலும் நம் கணக்கினை மூடி, அதுவரை பழகி வந்த நண்பர்களிடம் இருந்து விலக விரும்புகிறீர்கள். அக்கவுண்ட்டைப் பார்க்காமல், எதுவும் எழுதாமல் இருக்கலாம்; ஆனால், மொத்தமாக நம் கணக்கே இருக்கக்கூடாது என விரும்பினால் என்ன செய்திட வேண்டும். இங்கு அதற்கான வழிகளைப் பார்க்கலாம்.


இதில் என்ன ஒரு நல்ல தகவல் எனில், ஏறத்தாழ அனைத்து மின் அஞ்சல் வசதி தரும் நிறுவனங்களும், உங்கள் மின் அஞ்சல் கணக்கினை நிரந்தரமாக மூடிக் கொள்ள வழி ஒன்றைத் தருகின்றன. ஆனால், அந்த வழிகளை நாம் நேரடியாக, எளிதாகப் பெற இயலவில்லை. அவற்றைப் பெற பல்வேறு சுற்று வழிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.


 

ஜிமெயில்


 
1. https://www.google.com/accounts/DeleteCaribou Service என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

2. இங்கு உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் அமைக்கவும்.

3. இங்கு கிடைக்கும் செக்பாக்ஸில் டிக் அடையாளம் அமைக்கவும். பின்னர், மற்ற கூகுள் சேவைகளைப் பயன்படுத்த என்ன அக்கவுண்ட் பயன்படுத்தப் போகிறீர்கள் என்ற வினாவிற்கு, மாற்றாக உள்ள கூகுள் அக்கவுண்ட் பெயரினை அமைக்கவும்.

4. பாஸ்வேர்டினைக் கொடுத்து, "Remove Gmail" என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இரண்டு நாட்களில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் நீக்கப்படும்.

5. உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் நீக்கப்பட்ட பின்னர், என்ன செய்தாலும், அந்த அக்கவுண்ட்டினை மீண்டும் பெற முடியாது. அதில் உள்ள மெசேஜ்கள் கிடைக்காது.

 


ஹாட்மெயில்/எம்.எஸ்.என்./விண்டோஸ் லைவ்:





1. கீழ்க்காணும் லிங்க் உள்ள தளம் செல்லவும். http://mail.live.com/mail/CloseAccount Confirmation.aspx இது கிடைக்கவிலை என்றால்https://account.live.com/CloseAccount.aspx என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


2. உங்களுடைய இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டினை இங்கு அமைக்கவும்.

3. தொடர்ந்து CloseAccount என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

4. உங்கள் அக்கவுண்ட் 270 நாட்களுக்கு ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அந்தக் காலத்தில் மீண்டும் உங்கள் அக்கவுண்ட்டினை உயிர்ப்பிக்க விரும்பினால், மீண்டும் அதனை இயக்கலாம். இல்லை என்றால், 270 நாட்களுக்குப் பின்னர், முழுமையாக நீக்கப்படும். உங்கள் நண்பர்கள் இதற்கு தொடர்பு கொண்டால், அப்படி ஒரு அக்கவுண்ட்டே இல்லை என்ற செய்தி அவர்களுக்குத் தரப்படும்.

 


யாஹூ தளம்:




1. இந்த தளத்தில் உள்ள மின் அஞ்சல் கணக்கினை நீக்க https://edit.yahoo.com/config/delete_user என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2. உங்களுக்கான தனி நபர் தகவல்களை அளித்து, நீக்க விரும்புவதனை confirm என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் உறுதிப்படுத்தவும்.
3. 90 நாட்களில் உங்கள் அக்கவுண்ட் முழுமையாக நீக்கப்படும். பின்னர், நீங்கள் விரும்பினாலும், அக்கவுண்ட் கிடைக்காது.

 


பேஸ்புக் சமூக இணைய தளம்:


பலரும் பயன்படுத்தும் இந்த தளத்திலிருந்து தங்கள் அக்கவுண்ட்டினை நீக்க அதிகம் பேர் விரும்புகின்றனர். இதற்குக் காரணம், ஒருவரே பல அக்கவுண்ட்களில், பெயர்களில் சிறிய வித்தியாசத்துடன் அக்கவுண்ட்களை அமைத்துவிடுவதே காரணம்.


1. முதலில் பேஸ்புக் இணைய தளத்தில் உங்களுடைய அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Account -> Account Settings என்பதில் செல்லவும்.

2. இது Settings பக்கத்தினைத் திறக்கும்.

3. இங்கு "Deactivate Account" என்ற பிரிவில் கிடைக்கும் deactivate என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

4. அல்லது நேரடியாக http://www.facebook.com/deactivate.php என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.

5. "Why are you deactivating:" என்ற பிரிவில், உங்களுக்கு விருப்பமான தேர்வினை ஏற்படுத்தி, அதில் பதில் அளிக்கலாம். இறுதியாக, Deactivate My Account" என்ற பட்டனை அழுத்தி, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.

6. http://www.facebook.com/help/contact.php?show_form=delete_account என்ற இணைய தளம் சென்று, நிரந்தரமாக பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
 



ட்விட்டர் சமூக இணைய தளம்:





1. ட்விட்டர் இணைய தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

2. இது Account Settings என்ற பக்கத்தினைத் திறக்கும். இந்தப் பக்கத்தின் இறுதியில் உள்ள "Deactivate my account" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

3. அல்லது நேரடியாக http://twitter.com/settings/accounts/confirm_delete என்ற முகவரியில் உள்ள தளம் சென்று, அங்கு உங்கள் அக்கவுண்ட்டினை நீக்கலாம். இங்கு உறுதிப்படுத்துவதற்காக உங்கள் முடிவினைக் கேட்கையில் "Okay, fine, deactivate my account" என்பதில் கிளிக் செய்து கணக்கினை முடிக்கவும்.



லிங்க்ட் இன் சமூக இணைய தளம்:





1. முதலில் லிங்க்ட் இன் சமூக இணைய தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டினைத் திறக்கவும்.

2. வலது மூலையில் தரப்பட்டுள்ள "Settings" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

3. இது Settings என்ற பக்கத்தினைத் திறக்கும். இங்கு "Personal Information" என்ற பிரிவில், "Close Your Account" என்பதில் கிளிக் செய்திடவும்.

4. அல்லது https://www.linkedin.com/secure/settings?closemyaccountstart என்ற லிங்க்கில் கிளிக் செய்து நேரடியாக உங்கள் அக்கவுண்ட்டினை முடிக்கலாம்.

5. "Close Account Reason" என்ற பிரிவில் நீங்கள் விரும்புவதில் கிளிக் செய்து, "Continue" அழுத்தி தொடரலாம்.

மேற்காணும் வழிகளில், எந்த மின் அஞ்சல் மற்றும் சமூக இணைய தளங்களில் உள்ள உங்கள் தேவைப்படாத, பயன்படுத்தாத அல்லது நீக்கப்பட வேண்டும் என எண்ணுகிற அக்கவுண்ட்டினை நீக்கலாம்.

Tuesday 29 September 2015

நீரில் மிதக்கும் ஸ்மார்ட்போன்!!

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலர் சந்திக்கும் பிரச்னை, செல்போன் தவறி நீரில் விழுந்துவிட்டால் அதோடு அதன் செயல்பாடு முடிந்துவிடும். அதனால் தற்போது வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தற்சமயம் பல்வேறு வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


பொதுவாக பிரபலமான வாட்டர் ப்ரூஃப் கருவிகளை வழங்குவதில் புகழ் பெற்ற சோனி நிறுவனம், தனது வாடிக்கையாளர்களிடம், சோனி வாட்டர் ப்ரூஃப் கருவிகளை நீரில் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது. இந்த தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிலையில், சோனி உள்ளிட்ட பல்வேறு வாட்டர் ப்ரூஃப் கருவிகளுக்கும் போட்டியாக இருக்கும் கருவி வெளியாக உள்ளது.

இதில் நீரில் மிதக்கும் ஐபிஎக்ஸ்7
சான்று பெற்றிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் கருவியை பற்றிதான் நாம் பார்க்க இருக்கின்றோம். நீரில் மிதக்கும் கோமெட் கோர் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இங்கே..

* கோமெட் கோர் ஸ்மார்ட்போன், தற்சமயம் இன்டிகோகோ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

* கோமெட் கோர் ஸ்மார்ட்போன் IPx7 சான்று பெற்றிருக்கின்றது. இதனால் இந்த கருவி நீரில் மிதக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயோயன்ட் ஸ்மார்ட்போன் ஆகும்.

* கோமெட் ஸ்மார்ட்போன் கருவியில் 16 எம்பி பின்பக்க கேமரா மற்றும் 16 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

* 4ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் கொண்டு 4.7 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி திரை கொண்டிருக்கின்றது.

* ஆண்ட்ராய்டு 5.1 ,2.0Ghz ஆக்டாகோர் ப்ராசஸர், ஸ்டாக் யூஸர் இன்டர்ஃபேஸ் மற்றும் க்யூ லாக் என்க்ரிப்ஷன் கருவியினை பாதுகாக்கும்.

*இந்த ஸ்மார்ட்போன் 32ஜிபியின் விலை 249 டாலர் மற்றும் 64ஜிபியின் விலை 289 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tuesday 15 September 2015

விண்டோஸூக்கு மாற்றாக இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டம்

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், சீனர்கள் அடிக்கடி இந்தியாவின் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஊடுருவி முடக்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவிற்கென பிரத்யேக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையும் மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக நவீன கணினி மேம்பாட்டு மையத்தால் "பாஸ்"(பாரத் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ்) Bharat Operating System Solutions என்ற அதிநவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம், கடந்த வாரம் நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய சிஸ்டம், 3 மாதங்களாக பல்வேறு ஊடுருவலுக்கு உட்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

ராணுவ உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இணையதளங்களையும் ஊடுருவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகளை பாஸ் முறியடித்து, வெற்றி கண்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு புதிய கோடிங்களும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்னோடன் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க உளவுத்துறையால் அதிகம் கண்காணிப்படும் நாடு இந்தியா என குறிப்பிட்டுள்ளார். இதனால் வெளிநாட்டினர் இந்திய அரசின் ரகசியங்களை உளவு பார்ப்பதை தடுப்பதற்காக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்திய தொழில்நுட்பத்தை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும்..

விண்டோசைப் போன்று இல்லாமல் எளிமையாக பயன்படுத்தும் வகையில் பாஸ் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அரசு இணையதளங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், தனிநபர்களின் ரகசியங்களையும் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
SITE LINK : http://www.bosslinux.in/

BOSS5.0 is now available for download

DOWNLOAD LINK : ftp://14.139.180.38/ISO Images/Desktop/anokha/i386/boss-5.0-i386-DVD-23-Dec-2013.iso

Thursday 10 September 2015

4ஜி பந்தயம் : ஐடியா தயார்..!

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஐடியா நிறுவனம் 4ஜி சேவையை வழங்குவதற்கான நல்ல இடத்தில் தான் இருக்கிறோம் என்றும், ஏனைய நிறுவனங்களோடு 4ஜி போட்டிக்கு தயாராகத்தான் இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளது..!

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஐடியா நிறுவனம் 4ஜி சேவையை வழங்குவதற்கான நல்ல இடத்தில் தான் இருக்கிறோம் என்றும், ஏனைய நிறுவனங்களோடு 4ஜி போட்டிக்கு தயாராகத்தான் இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளது..!

3ஜி சேவை மூலம் 275 மில்லியான பயனாளிகளை சென்றடையும் ஐடியா, 4ஜி சேவையை அறிமுகம் செய்து, விரிவுபடுத்தியப்பின் 750 மில்லியன் பயனாளிகள் வரை சென்றடையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாக ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இலவச வை-பை : கூகுள் முடிவு..!


கூகுள் நிறுவனத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படும் கூகுள் ஃபைபர் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் நீட்டிக்கப்படுகின்றது. ஹைத்ராபாத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த தெலுங்கானா அமைச்சர் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முழுவதும் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் இயங்கும் முக்கிய ரயில் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கூகுள் நிறுவனம் இந்திய ரியல்வேயுடன் இணைந்து ப்ராஜக்ட் நீலகிரி எனும் திட்டத்தின் முதல் கட்டமாக நான்கே மாதங்களில் இந்தியாவின் சுமார் 400 ரயில் நிலையங்களில் வை-பை ஹாட்ஸ்பாட்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெயர் கூற விரும்பாத அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் இலவச இண்டர்நெட் பயன்படுத்த தங்களது மொபைல் நம்பரினை வெரிஃபை செய்து, ஒரு முறை மட்டும் கடவு சொல் என்டர் செய்து இலவசமாக இண்டர்நெட் பயன்படுத்த முடியும். முதல் முப்பது நிமிடங்களுக்கு இண்டர்நெட் வேகம் அதிகமாக இருக்கும் பின் நேரம் அதிகரிக்க இண்டர்நெட் வேகம் குறைய ஆரம்பிக்கும் ஆனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்த இலவச இண்டர்நெட் பயன்படுத்தலாம்.

Monday 31 August 2015

7.5 கோடி சாதனங்களில் விண்டோஸ் 10

விண்டோஸ் 10 சிஸ்டம் வெளியாகி ஒரு மாத காலத்திற்குள், 7.5 கோடி சாதனங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 90 ஆயிரம் தனிப்பட்ட மாடல் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் அடங்கும். 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சில கம்ப்யூட்டர் மாடல்களும், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறியுள்ளன.
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் உள்ள பெர்சனல் அசிஸ்டண்ட் 'கார்டனா', இதுவரை “tell me a joke” என்ற கட்டளைக்கு 5 லட்சம் ஜோக்குகளைச் சொல்லியுள்ளது. விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பல லட்சம் அப்ளிகேஷன்கள் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன.
சென்ற ஜூலை 29 அன்று வெளியானது விண்டோஸ் 10. முதல் நாளிலேயே, இந்த சிஸ்டத்தினை 1.4 கோடி சாதனங்கள் ஏற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கின. இரண்டு வாரங்களில், 13 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், விண் 10ல் இயங்குவது தெரிய வந்தது. ஆகஸ்ட் 26, ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பின்னால், 7.5 கோடி சாதனங்களில் இயங்குவது தெரிய வந்துள்ளது.
விண்டோஸ் 10, Home, Pro, Enterprise and Education என நான்கு வகைகளில் கிடைக்கிறது. இலவசமாக இதனைத் தரவிற்க்கம் செய்திடும் உரிமை இல்லாதவர்கள், விலை கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில், விண்டோஸ் 10 ஹோம் ரூ.7,999 மற்றும் விண்டோஸ் 10 ப்ரோ ரூ. 14,999க்கும் கிடைக்கிறது. நீங்கள் வாங்க விரும்பினால் http://www.microsoftstore.com/store/msin/en_GB/cat/categoryID.70039000 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2018 ஆம் ஆண்டுக்குள் 100 கோடி சாதனங்களில், விண்டோஸ் 10 இயங்க வேண்டும் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலக்காகும். இதனை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மைக்ரோசாப்ட் எடுக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், புதிய பிரைவசி கொள்கையினைப் பயனாளர்கள் பலர் எதிர்த்து வந்தனர். இவர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், http://windows.microsoft.com/en-us/windows-10/windows-privacy-faq என்ற இணைய தளத்தில், விரிவாகத் தன் கொள்கை பற்றி மைக்ரோசாப்ட் விளக்கியுள்ளது.

ஆண்ட்ராய்ட் எம் - என்னும் 'மெதுமிட்டாய்' ஆப்பரேட்டிங் சிஸ்டம்

கூகுள் தன்னுடைய ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மீண்டும் ஒரு இனிப்பு மிட்டாய் பெயரை வைத்துள்ளது. ஆங்கில அகர வரிசையில் C யில் தொடங்கி L வரை பெயரிட்ட கூகுள், அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பெயர் வைக்காமல் Android M எனப் பொதுவாகக் குறிப்பிட்டு வந்தது. மக்களும், இது அது எனப் பல பெயர்களை ஊகமாகச் சொல்லி வந்தனர். கூகுள் நிறுவனமே, எந்த எந்தப் பெயர் எல்லாம் உங்கள் நினைவிற்கு வரும் என நம்மை கேலி செய்திடும் தொனியில் பல பெயர்களை http://www.androidcentral.com/we-may-soon-find-out-what-android-m-stands என்ற முகவரியில் உள்ள தளத்தில் வெளியிட்டது. மக்களும் Milkshake, Mars, Macadamia, Milky Way, Meringue, Milk Dud எனப் பல பெயர்களில் ஒன்றை எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தின் புதிய பதிப்பிற்கான பெயர் Android 6.0 Marshmallow எனக் கூகுள் அறிவித்துள்ளது. (காண்க: http://www.androidcentral.com/marshmallow). Marshmallow மேற்கத்திய மற்றும் அமெரிக்க நாடுகளில் மிகவும் பெயர் பெற்ற ஒரு தித்திப்பு மிட்டாய் எனலாம். அது நம் ஊரில் கிடைப்பது போல, சிறிய மிட்டாய் ஆகக் கெட்டியாக இல்லாமல், பஞ்சு போல மென்மையாக இருக்கும். ஆனால், நம் ஊர் பஞ்சு மிட்டாய் போல இருக்காது. எனவே இதனை நாம் 'மெதுமிட்டாய்' என அழைக்கலாம். எனவே, Android M என்பது நமக்கு 'ஆண்ட்ராய்ட் மெதுமிட்டாய்'.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் முந்தைய பெயர்களாக Cupcake (1.5), Donut (1.6), Eclair (2.0-2.1), Froyo (2.2-2.2.3), Gingerbread (2.3-2.3.7), Honeycomb (3.0-3.2.6), Ice Cream Sandwich (4.0-4.0.4), Jelly Bean (4.1-4.3.1), KitKat (4.4-4.4.4, 4.4W-4.4W.2), மற்றும் Lollipop (5.0-5.1.1). புதியதாக இப்போது வந்திருப்பது Android Marshmallow (Version 6.0). இதனைத் தமிழில் சிலர் 'சீமை துட்டி' என அழைப்பார்கள். இருப்பினும் 'மெதுமிட்டாய்' என்ற சொல்லும் அழகாகப் பொருந்துகிறது.
கூகுள் நிறுவனத்தின் வழக்கமான பழக்கப்படி, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் Nexus சாதனங்களில் பதிந்து வெளியிடப்படும். எனவே, வர இருக்கும் Nexus 5 மற்றும் Nexus 6 ஆகியவற்றில், இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிற்கு வரும். இந்த
இரு சாதனங்களையும், முறையே, எல்.ஜி. மற்றும் ஹுவே வெளியிட்டு உள்ளன. இன்னும் இந்த சிஸ்டத்திற்கான source code தரப்படவில்லை. சோதனைத் தொகுப்பாகவே கிடைக்கிறது. வழக்கம் போலவே, கூகுள் தன் அலுவலகத்தின் முன்புறத்தில், (Building 44 on the Google Campus, home of the Android team). புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான உருவப் பொம்மையை வைத்துள்ளது. இங்கு பழைய பதிப்புகளுக்கான பொம்மைகளும் காணக் கிடைக்கின்றன. இந்த உருவப் படத்தினை இப்போதே நீங்கள் உங்கள் போனில் பதிந்து வைக்கலாம். இது தொடர்பான, வால் பேப்பர்களைப் பெற விரும்புவர்கள் https://www.androidpit.com/android-marshmallow-wallpapers-download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தப் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சோதனை முறையில், சோதித்துப் பார்க்கும் புரோகிராம் எழுதுபவர்களுக்கென வழங்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இந்த சோதனைத் தொகுப்பினைத் (Android 6.0 SDK) தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பொதுமக்களின் பயன்பாட்டிற்கான முறையான, முழுமையான பதிப்பு, வரும் அக்டோபரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய 'மெதுமிட்டாய்' ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், வர இருக்கும் புதிய வசதிகள் குறித்து கூகுள் பல வலைப்பதிவுகளில் அறிவித்துள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. ஸ்மார்ட் போனில், மின்சக்தி பயன்பாட்டினைக் குறைக்கும் வகையில் Doze என்னும் வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை இயக்கிவிட்டால், நம் செயல் நகர்த்தலை இது தொடர்ந்து கண்காணித்து, பேட்டரி சக்தி செலவிடப்படுவதைக் குறைக்கிறது. லாலிபாப் மற்றும் ஆண்ட்ராய்ட் எம் இயங்கும் இரண்டு வெவ்வேறு மொபைல் போன்களில், இந்த வசதியைப் பயன்படுத்தியபோது, ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம் இயங்கும் போனில், மின் சக்தி இரு மடங்கு சேமிக்கப்படும் வகையில் செயல்பாடு இருந்தது.
2. அடுத்ததாக, விரல் ரேகை செயலாக்கம். 'மெதுமிட்டாய்' பதிப்பில் விரல்ரேகை அறிதலை, ஆண்ட்ராய்ட் சாதனங்களைத் திறப்பதற்கு மட்டுமின்றி, பயனாளர் போனில் தரப்படும் Android Pay வசதியைச் செயல்படுத்தும் போதும் பயன்படுத்த உதவுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் புரோகிராம், கேம் மற்றும் பிறவற்றை வாங்குகையில், பணம் செலுத்த, பயனாளர் அடையாளத்தினை அறிவிக்க, இந்த விரல் ரேகை வசதியைச் செயல்படுத்தலாம்.
3. இந்த சிஸ்டத்தில், Google Now வசதியை இயக்கி, மொபைல் போனின் திரையில் வைக்கப்படும் எந்த ஒரு ஆப்ஜெக்ட்டையும் ஸ்கேன் செய்திடப் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட், பாடல், விடியோ படம் மற்றும் ஒரு கட்டுரை குறித்த, முக்கிய தகவல்களை இதன் மூலம் அறியலாம். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் ஒரு முக்கிய செயலாக்கமான, "Now on Tap" என்பதை, போனின் ஹோம் பட்டனை அழுத்தி, அல்லது "OK Google," என மைக்கில் சொல்லி, செயல்படுத்தலாம். இந்த செயல்பாடு, Now on Tap செயல்பாட்டினை ஸ்கேன் செய்து உதவும்படி சிக்னல் அனுப்பும். ஒரு பாடல் ஒலிக்கையில், "Who sings this?" எனக் கேள்வி கேட்டு அதற்கான பதிலைப் பெறலாம்.
4. Samsung Pay மற்றும் Apple Pay ஆகியவற்றிற்கு இணையாக, கூகுள் நிறுவனத்தின் Android Pay செம்மைப்படுத்தப்பட்டு, புதிய சிஸ்டத்துடன் தரப்படுகிறது. இது கூகுள் வாலட் (Google Wallet) எனப்படும் கூகுள் மணி பர்ஸ் செயல்பாட்டுக்குப் பதில் இணையாகத் தரப்படுகிறது. 2011ல் அறிமுகப்படுத்தப்பட்ட Google Wallet தொடர்ந்து இருவருக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படும். ஆப்பிள் சிஸ்டத்தில் உள்ளது போல, Android Pay வசதியைப் பயன்படுத்தி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் குறித்த தகவல்களை, ஸ்மார்ட் போனில் பதிவு செய்து வைக்கலாம். அதன் மூலம், நாம் பொருள் வாங்கும் கடைகளில் உள்ள பணம் பெறும் சாதனங்கள் வழியாக பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். 'ஆண்ட்ராய்ட் பே' வசதி மூலம், கூகுள் மொபைல் வழி பணம் செலுத்துவதில், எளிமை, பாதுகாப்பு மற்றும் விருப்பம் போல் செயல்படும் வழிகள் ("simplicity, security, and choice") ஆகியவற்றைத் தருவதில் முழுமையாகச் செயல்படுகிறது என கூகுள் நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார். தற்போது, இந்த வகை மொபைல் சாதனங்கள் வழி நிதி பரிமாற்றம், அமெரிக்காவில் ஏறத்தாழ 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள்ளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. American Express, Visa, Mastercard, and Discover ஆகிய வர்த்தக நிதி நிறுவனங்கள், இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளன. என்.எப்.சி. எனப்படும், அண்மைக் கள தகவல் தொடர்பு தொழில் நுட்பம் (NFC -~Near Field Communication) வசதி உள்ள (ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் மற்றும் அதற்கும் பிந்தைய சிஸ்டம் உள்ள போன்களில்) சாதனங்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
5. இந்த புதிய 'மெதுமிட்டாய்' சிஸ்டத்தில், பயனாளர்கள், போனில் அப்ளிகேஷன்களை பதிவு செய்வதற்கான அனுமதி தருவதைச் சீரமைக்கிறது. அத்துடன், பயனாளர்களின் தனிநபர் தகவல்களை, போனில் பதிந்து இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் திருடுவதைத் தடுக்கும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது, ஆண்ட்ராய்ட் பயனாளர்களிடம் பொதுவாக, எந்த ஒரு அப்ளிகேஷனை இயக்கத்தொடங்கும் போதும், பயனாளர்களின் காண்டாக்ட் பட்டியலில் உள்ள தகவல்கள் மற்றும் சார்ந்தவற்றைப் பகிர்ந்து கொள்ள நம் அனுமதி கேட்கப்படும். இது புதிய சிஸ்டத்தில் நடைபெறாது.
6. Android Marshmallow இயக்கத்தில், கூகுள் USB Type- C வகை யு.எஸ்.பி. செயல்பாடு தரப்படுகிறது. இதனால், உங்கள் மொபைல் சாதனம், வழக்கத்திற்கு மாறாக, வேகமாக யு.எஸ்.பி. செயல்பாட்டினை மேற்கொள்ளும். இந்த சிஸ்டம் இயங்கும் மொபைல் போனில், Type -C port யு.எஸ்.பி.க்கென தரப்பட்டிருந்தால், யு.எஸ்.பி. கேபிளை எந்தப் பக்கமாகவும் இணைக்கலாம். இப்படித்தான் செருக வேண்டும் என்றில்லாமல், எந்தப் பக்கமாகவும் செருகும் வகையை யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டிருக்கும். அது மட்டுமின்றி, இந்த வகை போர்ட் கொண்ட சாதனைத்தைப் பயன்படுத்தி, 'மெதுமிட்டாய்' சிஸ்டம், போனில் உள்ள மின் சக்தியை, மற்ற
சாதனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும்.
7. Direct Share என்று ஒரு வசதி, ஆண்ட்ராய்ட் மார்ஸ் மெல்லோ சிஸ்டத்தில் தரப்படுகிறது. இதனைக் கொண்டு, நம் காண்டாக்ட் போன்ற தகவல்களை, போனில் உள்ள மற்ற அப்ளிகேஷன்கள் பயன்படுத்தலாம். மொபைல் போன் பயனாளர், வேறு ஒரு சமூக வலைத்தளத்தில் உள்ள அப்ளிகேஷனப் பயன்படுத்தி, அதில் உள்ள ஒரு நபருக்குத் தன்னிடம் உள்ள தகவலைத் தர முடியும்.
8. https://code.google.com/p/android-developer-preview/issues/detail?id=2403#makechanges என்னும் தளத்தில் தரப்பட்டுள்ள குறிப்புகளின்படி, Visual Voicemail என்னும் வசதியை, டயலரிலிருந்து பெற்றுப் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. முதன் முதலில், அமெரிக்காவில் இயங்கும் T Mobile மற்றும் பிரான்ஸில் இயங்கும் Orange France ஆகியவை தரும் போன்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என அறியப்படுகிறது. பின் நாளில், மற்ற நாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களுக்கும் இது கிடைக்கும். அது என்ன “விசுவல் வாய்ஸ்மெயில்” என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உங்களுடைய வாய்ஸ் மெயில் கட்டளையை, காணக்கூடிய இடைமுகத் தோற்றமாக இந்த விசுவல் வாய்ஸ்மெயில் தரும். தற்போது இயங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில், இது ஆடியோ அடிப்படையிலான பதிவாக மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. இனி இது தோற்றமாகவே இருக்கும். இதற்கு, நமக்கு மொபைல் சேவையினை வழங்கும் நிறுவனத்தின் உதவியும் தேவைப்படும்.
9. அடுத்ததாக, ஹோம் ஸ்கிரீன் தோற்றத்தில், திரை சுழற்சி (Screen Rotation) வழங்கப்பட்டுள்ளது. இனி ஹோம் ஸ்கிரீன் தோற்றத்தினை, லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ரெயிட் வகையில் பயன்படுத்தலாம்.
10.பொதுவாக, ஸ்மார்ட் போன்களில், போன்களிலேயே கொடுக்கப்பட்டுள்ள தேக்க நிலை நினைவகம் (Storage Memory) சிக்கல்களைத் தருவதாக அமைக்கப் பட்டிருக்கும். மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், இதன் திறனை அதிகப்படுத்தும் வசதி இருந்தாலும், நாம் இணையத்திலிருந்து நமக்குத் தேவையான, விருப்பப்பட்டவற்றைத் தரவிறக்கம் செய்திடுகையில், தேக்கக நினைவகத்திலும் ஒரு கண் வைத்திருப்போம். இடம் உள்ளதா, இல்லையா? என்ற கவலை பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த புதிய 'மெதுமிட்டாய்' சிஸ்டத்தில், ஒரு சிறிய பார் கோடு தரப்படுகிறது. இதன் மூலம், போனில் உள்ள நினைவகத்தில் இன்னும் எவ்வளவு இடம் தேக்கிவைக்கக் கிடைக்கிறது என அறிந்து கொள்ளலாம்.
11.இணைய அனுபவத்தில் புதிய ஒரு வசதி, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படுகிறது. பொதுவாகவே, கூகுள் இணையத்திலிருந்து நாம் விரும்பி இறக்கிக் கொள்ளும் விஷயங்களை, நமக்கு மனதிற்கு இதமாக வழங்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும். புதிய சிஸ்டத்தில் உள்ள Chrome Custom Tabs இதனைச் சற்றுப் புதிய வகையில் தருகிறது. இதன் மூலம் குரோம் பிரவுசரின் திறன் அனைத்தையும், ஒருங்கிணைக்கும் வசதியை டெவலப்பர்கள் பெற்று தங்கள் அப்ளிகேஷன்களில் பயன்படுத்தலாம். இந்த வசதி, அப்ளிகேஷன்கள் இயங்கும்போது, அந்த இயங்கும் அப்ளிகேஷன் மேலாகவே, ஒரு சிறிய குரோம் விண்டோவினைக் காட்டும். இணையத்தில் இயங்குகையில், இந்த வசதி, பயனாளர்களுக்கு ஓர் எளிய வழியைத் தரும். அத்துடன், தானாகவே தளம் ஒன்றில் லாக் இன் செய்வது, பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்திருத்தல், தானாகவே படிவங்களில் தகவல்களை நிரப்புதல் மற்றும் பல முனை பாதுகாப்பினை இந்த வசதி கொண்டுள்ளது.
12.அப்ளிகேஷன் சார்ந்த தொடர்பு: ஏதேனும் ஓர் அப்ளிகேஷனில் இயங்கக் கூடிய ஒரு லிங்க், இணைய தளப் பக்கத்தில் தரப்பட்டிருந்தால், நாம் அதனைக் கிளிக் செய்திடும்போது, முன்பு ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், ஒரு மெனு பட்டியல் கொடுக்கப்பட்டு, எந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள என்று கேட்கப்படும். (Open With என்பதைப் போல). புதியதாக வரும் ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம், தானாகவே, அந்த செயலியை உணர்ந்துகொண்டு, அந்த லிங்க்கில் தரப்படும் பயன்பாட்டினை, அந்தச் செயலியின் வழியாகத் தருகிறது. எடுத்துக் காட்டாக, ட்விட்டர் தளம் சார்ந்த ஒரு லிங்க் இருப்பின், ஆண்ட்ராய்ட் எம், தானாக, ட்விட்டர் அப்ளிகேஷனைத் திறந்து செயல்படுத்திகிறது.
13.முற்றிலும் புதிய, பயனுள்ள வசதி என எடுத்துக் கொண்டால், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள Android Auto Backup மற்றும் Restore for Apps என்ற இரண்டு வசதிகளைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். கூகுளின் ஆண்ட்ராய்ட் மேடைக்கான டெவலப்பர் கருத்தரங்கில் வெளியான உரைகளில், இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சோதனைப் பதிப்பில் இவை அட்டகாசமாகச் செயல்படுகின்றன. கூகுள் ட்ரைவ் எப்படி, அப்ளிகேஷன் டேட்டா மற்றும் செட்டிங்ஸ் அமைப்பு நிலைகளைத் தானாக, 25 எம்.பி. அளவிலான பைல் ஒன்றில் பதிந்து வைக்கிறதோ, அதே போல வசதி இது. நாள் ஒன்றில், பேக் அப் செயல்பாடு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது. வை பி யுடன் இணைய இணைப்பில் இருக்கையில், போன் வேறு ஒரு செயல்பாட்டினையும் மேற்கொள்ளாத நிலையில், இந்த பேக் அப் வசதி செயல்படுத்தப்படுகிறது. இதன் வழியாக அனுப்பப்படும் டேட்டா, நம் கூகுள் ட்ரைவ் சேவ் செய்திடும் இட வசதியுடன் இணைக்கப்பட்டு கணக்கிடப்படுவதில்லை. நாம் நம் சாதனத்தை தொலைத்துப் பின்னர் புதிய சாதனம் ஒன்றை இயக்கும்போதும், அல்லது ஏதேனும் அப்ளிகேஷன் ஒன்றை அழித்துவிட்டு, புதியதாக அப்ளிகேஷனை நிறுவுகையில், நீங்கள் அந்த அப்ளிகேஷனில் செயல்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த டேட்டா உடனே மீடேற்றம் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும்.
14.அப்ளிகேஷன் ட்ராயர்: புதிய சிஸ்டத்தில் தரப்படும் புதிய வசதிகளில், நம்மைக் கவரும் வகையில் தரப்பட்டிருப்பது, புதிய அப்ளிகேஷன் ட்ராயர் எனப்படும் வசதி ஆகும். இது படுக்கை வசத்தில் இயங்காமல், நெட்டு வாக்கில் செயல்படுகிறது. ஹோம் பேஜ் வால் பேப்பர் பின்னணியில், தெரியாத வகையில் தரப்படாமல், தனியே வெள்ளை நிறப் பின்னணியில் தரப்படுகிறது. இதற்கான மெனுவில் மேலாக, நீங்கள் அண்மையில் பயன்படுத்திய நான்கு அப்ளிகேஷன்கள் எவை என்று காட்டப்படுகின்றன.
15.புதிய எம் ராம் மேனேஜர் (Android M RAM manager): ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில், முற்றிலும் புதிய வகையில் இயங்கும் ராம் நினைவக நிர்வாகம் தரப்பட்டுள்ளது. அப்ளிகேஷன்கள், ராம் நினைவகத்தில் பயன்படுத்தும் நினைவு அளவு துல்லியமாகக் காட்டப்படுகிறது. இதற்கான மெனுவினை Settings > Apps > Options (three dots button) > Advanced > Memory எனச் சென்று காணலாம். இதனைப் பார்த்து, எந்த அப்ளிகேஷன்கள் தேவையில்லாமல், இயங்கா நிலையிலும், அதிக இடத்தை எடுத்துக் கொண்டுள்ளன என்பதைப் பயனாளர்கள் காணலாம். தேவையற்றவற்றின் இயக்கத்தினை நிறுத்தலாம்.
16.கூகுள் எப்போதும், மைக்ரோ எஸ்.டி. கார்ட்கள் மூலம், நினைவகத்திறன் அதிகப்படுத்தப்படுவதனை விரும்புவதில்லை. அதனால் தான், தன்னுடைய நெக்சஸ் சாதனங்களில், மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் தருவதில்லை. ஆனால், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில், இந்த வகையில் சற்று இறங்கி வந்துள்ளது. கூடுதல் தேக்கக நினைவகத்திற்குப் (Addirional Storage Space) பதிலாக, மாற்றிக் கொள்ளக் கூடிய, வளைந்து கொடுக்கக் கூடிய நினைவகத்தினை (Adoptable Storage Space) ஏற்படுத்திக் கொள்கிறது. எஸ்.டி.கார்ட் மற்றும் யு.எஸ்.பி. ட்ரைவ்களை அந்த வகையில் நடத்துகிறது. அவற்றை, சிஸ்டத்தில் உள்ள, உள்ளார்ந்த ஸ்டோரேஜ் இடமாக பார்மட் செய்கிறது. இதன் மூலம், போனில் உள்ள ஸ்டோரேஜ் இடத்திற்கும், இந்த கூடுதல் வளைந்து கொடுக்கும் நினைவகத்திற்கும் இடையே, தகவல்களை மிக எளிதாகப் பரிமாற்றிக் கொள்ள இயலும். நீங்கள், உங்கள் நெக்சஸ் ஸ்மர்ட் போனில், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்கிப் பார்க்க விரும்பினால், உடனே https://www.androidpit.com/how-to-get-android-m-preview என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அங்கு தேவையான அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முதன் முதலில், 2008ல் வெளியானது. ஒவ்வொரு முறை, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகும்போது, பல வசதிகள் புதியனவாகவும், பழைய வசதிகள் மேம்படுத்தப்பட்டும் கிடைத்து வந்தன. இருப்பினும், ஒவ்வொரு புதிய சிஸ்டமும், சிலவற்றை அப்படியே, அடுத்த முறை மேம்படுத்தலாம் என விடப்படும். புதியதாக வந்திருக்கும் ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும், பேட்டரியை நீண்ட நாள் உழைக்க வைத்திடும் வசதி, மிகச் சிறந்த செயல்பாடு மற்றும் பல முன்னேற்றமடைந்துள்ள வசதிகள் ஆகியவற்றைப் பார்க்கையில், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம் நாம் மாற்றிக் கொள்ள உகந்ததாகவே உள்ளது.
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமானது, உலக அளவில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், 80% போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பழைய பதிப்புகளை, அவற்றிற்கான அப்கிரேட் வசதி இல்லாத போதும் பயன்படுத்தி வருகின்றன. அண்மையில் டேப்ளட் பி.சி. பயன்பாடு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வுமுடிவில், பெரும்பாலான சாதனங்களில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே இயங்குகிறது எனக் கண்டறியப் பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் சில புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப்  புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு சில புதிய அம்சங்களை வழங்கி இருக்கின்றது. அதில் உள்ள சில முக்கிய அம்சங்களாவன, புதிய அப்டேட் மூலம் நீங்கள் படித்த மெசேஜ்களை படிக்கவில்லை என மாற்ற முடியும். இந்த அம்சம் மூலம் குறுந்தகவல் அனுப்பியவருக்கு நீங்கள் செய்த மாற்றம் தெரியாது.

அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளிகளுக்கும் புதிய அப்டேட் மூலம் கஸ்டம் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம் குறிப்பிட்ட சில காண்டாக்ட்களுக்கு மட்டும் தனித்தனி ரிங்டோன்களை செட் செய்து கொள்ள முடியும். தற்சமயம் வரை க்ரூப் கான்வர்சேஷன்களை மட்டுமே ம்யூட் செய்ய முடிந்தது, இனி காண்டாக்ட்களுக்கும் இந்த ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எத்தனை நேரம் ம்யூட் செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட முடியும்.

அதிக வாட்ஸ்ஆப் கால் செய்ய வேண்டும் ஆனால் டேட்டா குறைய கூடாதா, அதற்கும் வாட்ஸ்ஆப் புதிய வழி செய்திருக்கின்றது. வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் மெனுவில் சாட் அன்டு கால் பகுதியின் கீழ் இருக்கும் புதிய அம்சமான லோ டேட்டா யூசேஜ் (Low Data Usage) ஆப்ஷனை க்ளிக் செய்து மாற்றி கொள்ளலாம். மேலும் புதிய எமோஜிக்கள் வெவ்வேறு நிறம் கொண்டிருக்கின்றது. முகங்களில் பல ரியாக்ஷன் மற்றும் பல புதிய செய்கைகளையும் புதிய வாட்ஸ்ஆப் அப்டேட் வழங்கி உள்ளது

Friday 28 August 2015

விண்டோஸ் பேட்ச் பைல்

4qLs8Vu.jpg


சென்ற வாரம், மைக்ரோசாப்ட் திடீரென பேட்ச் பைல் ஒன்றை வெளியிட்டது. வழக்கத்திற்கு மாறான வெளியீடு இது. அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அப்டேட் செய்திடும் வகையில் இது வெளியானது. இதற்குக் காரணம் வழக்கம் போல, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான். அதில் உள்ள தவறான குறியீட்டு வரி ஒன்றின் மூலம் ஹேக்கர்கள் நுழையலாம் என அறியப்பட்டது. இதனைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள், கம்ப்யூட்டர்கள் எவற்றையேனும் கைப்பற்றி உள்ளனரா என்று தெரியாத நிலையில், அதற்கான தீர்வு தரும் பேட்ச் பைல் ஒன்றை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. 

இது குறித்த https://technet.micr...curity/MS15-093 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் மைக்ரோசாப்ட் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பயனாளர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக, அவர்களைக் கவிழ்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இணைய தளம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டால், உடன் ஹேக்கர்கள் அவர்கள் கம்ப்யூட்டர்களைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்வது எளிதாகிவிடும். 

இதற்குக் காரணம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் உள்ள ஒரு குறைபாடு தான். இந்த குறைபாட்டினை, மைக்ரோசாப்ட் CVE-2015-2502 எனக் குறிப்பிடுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மெமரியில் உள்ள ஆப்ஜெக்ட்களைக் கையாளுகையில், இந்த குறை வெளியே அறியப்படுகிறது.  அந்த குறையை, ஹேக்கர்கள் பயன்படுத்தி கம்ப்யூட்டர் உள்ளே நுழைந்திட முடியும். அப்போது கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பயனாளருக்குரிய உரிமையினை ஹேக்கர் பெற முடியும். எனவே, அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையுடன் யாரேனும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், இந்த குறைபாடு இயங்கினால், கம்ப்யூட்டர் பின் அவருக்குக் கட்டுப்படாமல் போய்விடும். 

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படும் எட்ஜ் பிரவுசரில் இந்த குறைபாடு இல்லை எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் வழங்கும் இந்த பேட்ச் பைல் https://support.micr...n-us/kb/3087985 என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் தரப்படுகிறது. தானாக, இது அப்டேட் செய்யப்படவில்லை எனில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் இதனைத் தரவிறக்கம் செய்து இயக்கி வைத்துக் கொள்வது நல்லது.  இந்தக் குறையைக் கண்டறிந்தவர் கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆய்வாளர் Clement Lecigne என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான வெளியீட்டு நாள் இல்லாமல், அதிரடியாக இது போல பேட்ச் பைல் வெளியிடுவது, இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தான், தொடர்ந்து பயனாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து உடனுடக்குடன் தீர்த்து வைக்கும் வாடிக்கையாளர் சேவையைனை மேற்கொள்கிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும், இது போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டு, எட்ஜ் பிரவுசர் தொகுப்பைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்