Wednesday 30 December 2015

வாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!

torrborder.gif

ன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்படுகிறது. இந்த 'வாட்ஸ் அப்'பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன.

இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வலைத்தளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளித்துள்ளனர்.

 
1.) வாட்ஸ்அப் லாக்


வாட்ஸ் அப்-ஐ லாக் செய்வதில் முக்கியமான விஷயம் முதலில் ஒரு பாஸ்வேர்டு அல்லது 'பின்' பயன்படுத்துதலே சிறந்தது. வாட்ஸ் அப்பிற்கென பிரத்யேகமாக எந்த ஒரு லாக்கும் இல்லை. இதற்கென ஆப் லாக்கை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனால், மூன்றாவது மனிதர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். ஆனாலும், செல்போன் தொலைந்துபோகும் பட்சத்தில் அதை தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 'சாட் லாக்', 'வாட்ஸ் அப் லாக்', 'செக்யூர்சாட்' இவை மூன்றையும் ஆண்ட்ராய்டு போன்களில் எளிதாக பயன்படுத்தலாம். எனவே இவற்றை பயன்படுத்தி யாரும் உங்களது தகவல்களை திருடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
 


2.) வாட்ஸ் அப் புகைப்படங்கள், போட்டோ ரோலில் சேர்வதை தடுக்க...



புகைப்படங்களை பரிமாறும்பொழுது, அவை பொதுவாக உங்கள் போட்டோ ரோலில் சேகரிக்கப்படுகிறது. அதனால் அவை திருடப்பட வாய்ப்புகள் அதிகம். இவற்றை ஐபோனில் எளிதில் தடுக்கலாம். போன் செட்டிங்கில் உள்ள மெனுவில் சென்று, பிரைவசியில் உள்ள புகைப்படத்தை 'டீசெலக்ட்' செய்ய வேண்டும். இதனால் அவை போட்டோ ரோலில் சேர்வது எளிதில் தடுக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பயனாளர்கள், இதனை 'பைல் எக்ஸ்ப்லோரர் ஆப்' மூலம் தடுக்கலாம். இதில், நோ மீடியா எனும் பைலை உருவாக்குவதின் மூலம் தடுக்கப்படுகிறது. வாட்ஸ் அப் இமேஜை லாக் செய்வது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கலாம். ஆனால், போன்கள் திருடப்படும்போது 100% பாதுகாப்பைத் தரும் என கூற முடியாது.

 


3.) லாஸ்ட் சீனை மறைப்பது



நீங்கள் கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தீர்கள் என மற்றவர்களுக்கு தெரியும். இது மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வழிவகை செய்யலாம். இந்த லாஸ்ட் சீன்  மற்றவர்கள் அறியாதவாறு தடுக்க 'ஹைடு லாஸ்ட் சீனை' பயன்படுத்தலாம். ஆனால் இதை செய்தால் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களின் லாஸ்ட் சீனையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது.
 


4.) ப்ரொஃபைல் பிக்சரை தவறாக பயன்படுத்துவதை தடுக்க...



உங்கள் ப்ரொஃபைல் பிக்சரை நீங்கள் பயன்படுத்தும்போது அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். அதோடு இந்த ப்ரொஃபைல் புகைப்படத்தை பயன்படுத்தி கூகுள் சர்ச்சில் உங்களது விவரங்களை பெற முடியும். அதனால், பிரைவசியில் உங்கள் புகைப்படத்தை தொடர்புகளில் மட்டும் பொருத்த வேண்டும்.
 

5.) போலி தகவல்களிடம் விழிப்போடு இருங்கள் 
 

வாட்ஸ் அப் எப்பொழுதும் நேரடியாக உங்களோடு தொடர்பு கொள்வதில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் நேரடியாக உரையாடல்கள், ஆடியோ தகவல்கள், புகைப்படங்கள், மாற்றங்கள், வீடியோக்களை எப்பொழுதும் மின்னஞ்சல் உதவியில்லாமல் உங்களுக்கு அனுப்பாது. குறிப்பிட்ட இலவச நன்கொடைகள் பற்றிய தகவல்கள் வந்தால் நிச்சயம் அது போலியாகத்தான் இருக்கும். இவை நம்பத்தகுந்தது அல்ல.
 


6.) தொலைபேசி தொலைந்தால் வாட்ஸ் அப்பை செயலிழக்கச் செய்யுங்கள்



செல்போன் தொலைந்தால், வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு எளிய மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. சிம் கார்டை லாக் செய்வது பற்றிய வசதிகளை அளிக்கறது. தொலைபேசி தொலைந்து போனால் உடனே அதே எண்ணில் மற்றொரு தொலைபேசியில் வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை திறந்தால் தானாகவே தொலைந்த வாட்ஸ் அப் அக்கவுண்ட் செயலிழக்கப்படும். இதன் மூலம் வாட்ஸ் அப் அக்கவுண்ட் தானாகவே செயலிழக்கப்படும்.
 

7.) எதைப்பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள் 

இது கடைசி, இதுவே முடிவல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள். சுய தகவல்களை எப்பொழுதும் பகிர்வதை தவிர்த்திடுங்கள். முகவரி, தொலைபேசி எண், வங்கி விவரம், கிரெடிட் கார்டு விவரம், பாஸ்வேர்டுகளை வாட்ஸ் அப்பில் பகிராதீர்கள்.
 

8.) வாட்ஸ் அப்பை 'லாக் அவுட்' செய்ய மறக்காதீர்கள்:
 

வாட்ஸ் அப் தற்போது நிறைய சேவையை வழங்கி வருகிறது. பல பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் லாக் அவுட் செய்வது பற்றிய விவரம் தெரிவதில்லை. இதை தொலைபேசி மூலமோ பிரவுசர் மூலமோ செய்யலாம்.

Sunday 20 December 2015

ஸ்மார்ட் போன் முடக்கிய சாதனங்கள்!

security_guard_smartphone_app.jpg


இன்றைய தொழில் நுட்பம் வழங்கிய சாதனங்களில், ஸ்மார்ட் போன் மட்டுமே நாம் ஏற்கனவே மேற்கொண்ட வாழ்க்கையின் சில பரிமாணங்களை மாற்றிப் போட்டுள்ளது. நாம் மிக ஆர்வத்துடனும், பெருமையுடனும் பயன்படுத்திய சாதனங்களை மூலைக்கு அனுப்பிவிட்டது. இதுவரை வேறு எந்த சாதனமும் இந்த அளவிற்கு மாற்றங்களைத் தந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு, ஸ்மார்ட் போன் நம் வாழ்வில் இடம் பிடித்துவிட்டது. பெரும்பாலானவர்களுக்கு, அவர்களின் அன்றாட வாழ்வின் இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது.

சமூக ஊடகங்களுடன் இதனை இணைத்துப் பார்த்தால், இதுவரை சென்ற சந்ததியினர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கையாண்ட வழிகளை அடியோடு புரட்டிப் போட்டது இந்த ஸ்மார்ட் போன் எனலாம். இதனை 'போன்' என அழைத்தாலும், நாம் போனாக இதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவுதான் எனலாம். ஸ்மார்ட் போன் பயன்பாட்டுப் பட்டியலில், அழைப்புகள் ஏற்படுத்த இதனைப் பயன்படுத்துவது இறுதியாகத்தான் உள்ளது. மற்ற செயல்பாடுகளே அதிகம் உள்ளன. எனவே, ஒரு சிலர், இதனை 'போன்' என்று சொல்வதைக் காட்டிலும், 'டேப்ளட்' அல்லது 'பேப்ளட்' என அழைக்கலாமே என்று கருத்து தெரிவிக்கின்றனர். 


இன்றைய பயனாளர்கள், குறிப்பாக இளைஞர்கள், இதனைப் போனாகப் பயன்படுத்தாமல், அப்ளிகேஷன்களைப் பதிந்து, அவற்றின் மூலம், குறுஞ்செய்திகளைத் தொடர்ந்து பரிமாறிக் கொண்டு, தங்கள் தகவல்கள் பரிமாற்றத்தை முடித்துக் கொள்கின்றனர். மேலும், இளவயதினர் ஆசைப்படுவது போல, ஒரே நேரத்தில், பலருடன் எளிதாக தகவல் தொடர்பு கொள்ள முடிகிறது. போனில் பேசும் போது, நம் முழு கவனத்தையும் அதில் செலுத்த வேண்டும். ஆனால், டெக்ஸ்ட் டைப் செய்து தகவல்களைப் பரிமாறும் போது, அந்த அளவிற்குக் கவனம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் தான், பல வீடுகள், தங்கள் தரைவழி தொடர்பில் உள்ள தொலைபேசி தொடர்புகளை ரத்து செய்து வருகின்றனர்.  ஸ்மார்ட் போன்கள் எந்த சாதனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்று இங்கு பார்க்கலாம்.



பொருள் பார்த்து போட்டோ எடுக்கும் கேமரா:


image.jpg


ஸ்மார்ட் போன்கள் முதலில் ஒழித்துவிட்ட சாதனம், நாம் ஏதேனும் ஒரு பொருளை அல்லது நபரை இலக்காகக் கொண்டு, பார்த்து போட்டோ எடுக்கும் Point and Shoot Camera தான். கடந்த பத்து ஆண்டுகளாகவே, இந்த கேமரா சிறிது சிறிதாக மறைந்து வந்தது. தற்போது ஸ்மார்ட் போன் வைத்துள்ள யாரும், இந்த வகை கேமராவில் எடுக்கும் போட்டோக்களைக் காட்டிலும் மிகவும் துல்லியமாக போட்டோ எடுக்க முடிகிறது. எனவே, தனியாக கேமரா ஒன்றை யாரும் வாங்கிப் பயன்படுத்துவதில்லை. இதனை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவதாலேயே, இதனைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் புதிய சில வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த வகை கேமராக்களில், இணையத் தொடர்பு கொள்ளும் வை பி இணைப்பினை இயக்க முடியும். நம் ஸ்மார்ட் போனையும், இந்த வகை Point and Shoot கேமராவினையும், வை பி வழியாக இணைத்து, கேமராவில் எடுத்துள்ள போட்டோக்களைப் பார்க்க முடியும். கேமராவினை தொலைவில் வைத்துவிட்டு, ஸ்மார்ட் போனில் உள்ள திரையை அழுத்துவதன் மூலம், போட்டோ எடுக்க முடியும். எடுத்த போட்டோவை, கேமராவிலிருந்து நேரடியாக, வை பி மூலம் சமூக இணைய தளங்களுக்கு அனுப்ப முடியும். இந்த வசதிகள் இருந்தால் தான், இந்த வகை கேமராக்கள் தற்போது விற்பனையாகும். இருப்பினும், இந்த வசதிகள் இருந்தாலும், சில ஆண்டுகளில் இவையும் மறைந்துதான் போகும் என கேமரா தயாரிப்பவர்கள் எண்ணுகிறார்கள்.

ஸ்மார்ட் போன்களில் போட்டோ எடுப்பது மட்டுமின்றி, அவற்றை எடிட் செய்திடும் வசதிகளும் இப்போது கிடைக்கின்றன. உடனடியாக, எடுத்த மற்றும் எடிட் செய்த போட்டோக்களை உடனே, நண்பர்களுக்கு அனுப்ப முடியும். அல்லது, க்ளவ்ட் சர்வர்களுக்கு அனுப்பி, அதன் வழியாக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம். போட்டோ மட்டுமின்றி, வீடியோ பதிவினையும் ஸ்மார்ட் போன்கள் திறனுடன் மேற்கொள்வதால், ஸ்மார்ட் போன்கள் கேமராவினை ஓரங்கட்டியதில் வியப்பில்லை.



மியூசிக் பிளேயர்கள்:

walkman_girl4.jpg



 வாக்மேன், ஐ பாட், எம்பி3 பிளேயர்கள் என ஒரு காலத்தில் நம் இளைஞர்கள் தங்கள் இடுப்பில் கட்டிக் கொண்டு, பாடல்களைக் கேட்டுக் கொண்ட காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இசை கேட்க விரும்புபவர்கள், அதற்கான பைல்களை, ஸ்மார்ட் போனில் பதிந்து, அல்லது மைக்ரோ எஸ்.டி. கார்ட்களில் பதிந்து, கேட்டு ரசிக்கின்றனர். விரும்பும் பாடல்களைக் கட்டணம் செலுத்தி, ஸ்மார்ட் போனில் டவுண்லோட் செய்து, ரசிப்பதும் இப்போது பழக்கமாகிவிட்டது. எனவே, மியூசிக் பிளேயர்கள் என தனியே ஒரு சாதனத்தைக் கொண்டு செல்வது என்பது இனி நடைமுறையில் இருக்காது.



பெர்சனல் கம்ப்யூட்டர்:


தங்கள் ஸ்மார்ட் போனையே, பெர்சனல் கம்ப்யூட்டராகப் பயன்படுத்தும் பழக்கம் தற்போது மெல்ல மெல்ல பரவி வருகின்றது. இமெயில், இணைய தேடல் மற்றும் கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன்கள் பயன் படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரில் பணம் முதலீடு செய்திட முடியாதவர்கள், கூடுமானவரை, தங்கள் ஸ்மார்ட் போனையே, கம்ப்யூட்டருக்குப் பதிலாகப் பயன்படுத்துகின்றனர். வீடுகளில் வைத்து பயன்படுத்தும், ஹோம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இயக்கும் செயலிகள் அனைத்தையும் ஈடு செய்திடும் வகையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த அப்ளிகேஷன்கள் தற்போது கிடைக்கின்றன. அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் அதிக திறன் கொண்டு பார்க்கும் வேலைகள் அனைத்தையும், ஸ்மார்ட் போனில் பார்க்க முடியாது என்றாலும், அன்றாட கம்ப்யூட்டிங் பணிகளை, நம்மால், ஸ்மார்ட் போனில் மேற்கொள்ள முடியும். எனவே, ஸ்மார்ட் போன்கள், ஓரளவிற்கு, பெர்சனல் ஹோம் கம்ப்யூட்டரை ஓரங்கட்டி விட்டன என்ற கூற்றும் உண்மையே.



டேப்ளட் பி.சி:


பல ஆண்டுகளாக உயர்ந்து வந்த டேப்ளட் பி.சி.க்கள் விற்பனை, தற்போது, அதிகத் திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களால் குறைந்து வருகிறது. அதாவது, மக்கள் டேப்ளட் பி.சி.க்களை வாங்கிப் பயன்படுத்தாமல் இல்லை. அவர்கள், சிறிய அளவிலான டேப்ளட் சாதனங்களை வாங்கி, ஸ்மார்ட் போன் போலப் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போனின் பரிமாணம், மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்து, தற்போது 5 அல்லது 6 அங்குல அளவிலான திரை, ஸ்மார்ட் போன்களின் ஒரு நிச்சயிக்கப்பட்ட அம்சமாக அமைந்துவிட்டது. இந்த அளவிலான திரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் போலவே செயல்படுகின்றன. இவற்றைச் சட்டைப் பைகளில் வைத்து எடுத்துச் செல்லவும் முடியவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், கம்ப்யூட்டரில் வைத்து முன்பு விளையாடப்பட்ட விளையாட்டுகள் எல்லாம், ஸ்மார்ட் போன்களுக்கென வடிவமைக்கப்பட்டு, அதற்கான ஸ்டோர்களில் கிடைக்கின்றன

அறிவியல் & தொழில்நுட்ப தகவல்கள்

ஆண்ட்ராய்டு பெயர் : அம்மாவை கேட்டு சொல்றேன், சுந்தர் பிச்சை.!!
torrborder.gif

sundarpichai-18-1450432697.jpg

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொருப்பேற்று முதல் முறையாக இந்தியா வந்திருக்கும் சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சையை இந்த கேள்வி சிரிப்பை தூண்டியது என்றே கூற வேண்டும். அதாவது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தற்கு இந்திய இனிப்பு வகையின் பெயர் சூட்டப்படுமா என்பதே அந்த கேள்வியாகும்.

androidversioner.jpg

 ஸ்ரீராம் கல்லூரியின் கலந்துரையாடும் போது இந்த கேள்வி எழுப்பப்பட்டதோடு சுந்தர் பிச்சைக்கு பரிந்துரை செய்யும் விதமாக பேடா, நெய்யப்பம் உள்ளிட்ட சில இனிப்பு வகைகள் கூறப்பட்டன. இதுவரை ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் டோநட், எக்ளேர், ஜின்ஜர் ப்ரெட், ஐஸ் க்ரீம் சான்ட்விட்ச், ஜெல்லி பீன், கிட்காட், லாலிபாப் மற்றும் மார்ஷ்மல்லோ வரை முற்றிலும் வெளிநாட்டு இனிப்பு வகைகளின் பெயர்களே சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



 ஏன் இந்திய இனிப்பு வகை பெயர் சூட்டக்கூடாது என கேட்க்கப்பட்டதற்கு, எனது அம்மாவை நான் சந்திக்கும் போது அவரிடம் பரிந்துரைகளை கேட்கிறேன், மேலும் ஆன்லைன் மூலம் கருத்து கேட்டு பின் ஆண்ட்ராய்டு என் இயங்குதளத்திற்கு பெயர் சூட்டுவதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்
 

சீனாவை விட்டு இந்தியா வரும் இந்திய நிறுவனம்.!!
torrborder.gif

micromax-logo.jpg

இந்தியவை சேர்ந்த நுகர்வோர் மின்னணு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அனைத்து மொபைல் போன் கருவிகளையும் இந்தியாவிலேயே தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்சமயம் சீனாவில் தயாரிக்கப்பட்டு வரும் மைக்ரோமேக்ஸ் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் போது மைக்ரோமேக்ஸ் கருவிகளின் விலை இன்னும் குறையும் என்றே கூற வேண்டும்.

 18-1450428209-01.jpg

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மூன்றில் இரண்டு கருவிகள் மட்டுமே தற்சமயம் இந்தியாவில் பொருத்தப்படுவதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ராஹுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.

மைக்ரோமேக்ஸ் கருவிகளின் 100 சதவீத தயாரிப்பு பணிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவை விட இந்தியாவில் தயாரிப்பு பணிகள் குறைந்த செலவில் முடிந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 2008 ஆம் ஆண்டு முதல் குறைந்த விலை கருவிகளை விற்பனை செய்து வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் 300 கோடி முதலீடு செய்து சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை துவங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மின்னணு தயாரிப்பு சந்தையை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சித்து வரும் நிலையில் ஃபாஸ்கான் நிறுவனமும் 500 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்த படியாக இந்தியாவில் தற்சமயம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தில் இருப்பதோடு உலக ஸ்மார்ட்போன் சந்தையில் மூன்றாவது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது

18-1450428219-06.jpg

  உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனான யு யுடோப்பியா எனும் புதிய கருவியை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

​உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் !!
torrborder.gif

 உணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் மற்றும் வன் பொருள்களின் உதவியுடன் விவசாயம் செய்யும் ரோபோக்களை தயாரித்துள்ளனர் ஃபார்ம் போட் நிருவனத்தினர் . இதன் மூலம் விவசாயத்தை நவீன முறையில் கையாள தயாராக்கி வருகின்றனர். ஃபார்ம் போட்டை உபயோகிப்பதன் மூலம் உங்கள் வீட்டின் முன்னோ அல்லது தோட்டத்திலோ விருப்பமான பயிர்களை வளர்க்கலாம்.



 ஃபார்ம் போட் ரோபோட்டுகள் :

திடமான மற்றும் மெல்லிய உருவம் கொண்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ள சாதனத்தில் 5மிமீ தடித்த தகடுகளுடன் இணைத்து கட்டப்பட்டுள்ளது. மற்றும் சக்தி வாய்ந்த NEMA -17 ஸ்டெப்பர் மோட்டார்களுடன் இணைந்து, மில்லி மீட்டர் துல்லியம் கொண்ட XYZ திசையில் கட்டப்பட்டு உள்ளது. கூடவே இதர பாகங்களான சென்சார்கள் , விதை செலுத்திகள், துளைக்கும் கருவிகள் மற்றும் சில பாகங்களும் அடங்கும். இந்த கருவிகள் அனைத்தும் மின் இணைப்பினை நாடாமல் காந்தத் தன்மையுடன் ஒன்றையொன்று இணைத்துள்ளது.அதனால் செய்யபோகும் வேலைக்கேற்ற தேவையான கருவிகளை தானாகவே தேர்ந்தேடுத்து பயனபடுத்தக் கூடியது. சரியான அளவு மற்று காலநிலை போன்றவற்றில் பயிர்களை வளர்க்ககூடியது.

 இந்த மாதிரியான நவீன நுட்பங்களை விவசாயத்தில் செலுத்தியது உண்மையில் பாராட்டிற்குறியதே! இதனால் விவசாயத் துறையில் ஒரு மேம்பட்ட வளர்ச்சியினைக் காணும் வாய்ப்புகள் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற கருவிகள் அதிக அளவிலாளான பயிர்களை வளர்க்கும் நுட்பங்களையோ அல்லது விவசாயப் பண்ணைகள் போன்ற அமைப்பில் பயிர்களை வளர்க்கவோ வழிவகுக்கும். மேலும் தேனீ, மண்புழு போன்ற வளர்ப்புகளையும் அழிந்து வரும் உயிரனங்களையும் வளர்க்கவோ வழி வகுக்கும்.

ஃபார்ம் போட்டின் இந்த முயற்சி விவசாயத்தினை பொருத்தவரையில் முதலாவது தயாரிப்பே, என்றாலும் இவை ஒரு டிராக்டர்கள் செய்யும் வேலையினை செய்து விடும் அளவிற்கு திறன் வாய்ந்தது. மேலும் இந்த ரோபோக்கள் கூடிய விரைவில் கிக்சஸ்டாட்டருக்குள் நுழைந்தவுடன் அதன் முன்பதிவுகளை பெறலாம்.


தானாகவே காற்று நிரப்பிக் கொள்ளும் பம்ப் டையர் !!
torrborder.gif

32113.jpg

 மிதிவண்டிகளை பயன்படுத்துபவர்களிடம் உங்களது வாகனத்திற்கு எந்த தேவைக்காக அதிகம் செலவிடுகுறீர்கள் என்று கேட்டால் அவர்களை பொறுத்தவரையில் காற்று நிரப்புவதைதான் கூறுவார்கள் . அந்த காற்றினையும் தானாகவே ஏற்றிக் கொள்ளும் நுட்பத்தை ஒரு வருடத்திற்கு முன்னரே பம்ப் டையர்நிருவனத்தினர் தொடங்கியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே! தற்போது அதே யுக்தியை பைக்குகளிலும் அறிமுகபடுத்த உள்ளனர் . இதனால் அடிக்கடி காற்றினை நிரப்பிக் கொள்ளும் அவசியமில்லை.

எப்படி தானாகவே நிரப்பிக் கொள்ளும்?

டயர்களின் வால்வுகளில் காற்றினை நிரப்ப வெளிப்புறம் உள்ள வால்வுகளில் காற்றானது நிரப்பப்படும் போதுமான அளவு காற்று நிரம்பியவுடன் காற்று நிரப்படுவதை நிறுத்திக் கொள்ளும். இதனால் வாகனங்களில் காற்றை நிரப்ப உங்கள் கைகளை அழுக்காக்கி கொள்ளும் அவசியம் இருக்காது. மேலும் தேவையான அளவிற்கு காற்றினை உயர்த்தியும் குறைத்தும் கொள்ளலாம்.அப்படியானால் அடிக்கடி காற்றினை நிரப்பிக் கொள்வது என்பது அவசியமில்லை. பெஞ்சமின் பிராங்கிளின் இதனை அடுத்த வருடத்தில் கிக்ஸ்டாட்டரில் செலுத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஒரு சாதனத்தின் விலையினை $30 முதல் $55 வரை இருக்கலாம் என நிர்ணயித்துள்ளனர். தானாகவே காற்றினை நிரப்பிக் கொள்ளும் யுக்தி என்பது இதற்கு முன்னரே மிதிவண்டிகளில் பயன்படுத்தப்பட்டது. தற்போது அதே நுட்பத்தை பைக்குகளில் 700cமற்றும் 26-அங்குலம் கொண்ட டயர்களுக்கு பொருந்தும்படி அமைக்க உள்ளனர்.


பிரேசிலில் மீண்டும் வாட்ஸ் அப்!!
torrborder.gif

logo-whatsapp.png

பிரேசிலில் மீண்டும் வாட்ஸ் அப் சேவை தொடங்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மார்ட் கைபேசிகளில் குறுஞ்செய்தி சேவையின் ஜாம்பவனான வாட்ஸ் அப், 48 மணி நேரம் பிரேசிலில் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

பிரேசிலில் நடைபெற்று வந்த வழக்கு ஒன்றில், நீதிமன்ற உத்தரவுக்கு வாட்ஸ் அப் ஒத்துழைக்க மறுத்தது.

எனவே அதன் சேவையை 48 மணிநேரம் நிறுத்தி வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து முடங்கிய சேவை, மீண்டும் தொடங்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதன் போட்டி நிறுவனம் ஒன்று, 10 லட்சத்துக்கும் அதிகமான புதிய பயனாளர்களை கையாள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது


அகதிகள் நிலையும், ஸ்டீவ் ஜாப்ஸும்
torrborder.gif

jobs_2662175f.jpg

ஸ்டீவ் ஜாப்ஸ் தவிர சிரிய அகதிகளின் நிலையை உணர்த்தும் வேறு இரண்டு சுவரோவியங்களையும் அவர் வரைந்திருக்கிறார். இந்த ஓவியங்கள் அகதிகள் சார்பாக மனிதநேய வாதத்தை வலுவாக முன்வைக்கின்றன.

இதைத்தான் பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் நினைவுபடுத்தி, அகதிகள் பிரச்சனையில் அவர்கள் சார்பாகக் குரல் கொடுத்திருக்கிறார். சிரியாவில் இருந்து குடிபெயர்ந்த அகதியின் மகன் எனும் குறிப்பை மட்டும் இந்த ஓவியத்துடன் பேங்க்ஸி எழுதி வைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் லட்சக்கணக்கில் குவிந்துள்ள சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பாக மிகப்பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் அகதிகளை ஒரு பிரச்சனையாக அல்லாமல், ஒரு வளமாகக் கருத வேண்டும் எனும் கருத்தை பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.

பொதுவாக பேங்க்ஸி ஓவியங்கள் மூலம் மட்டுமே பேசுவார். விதிவிலக்காக இந்த முறை தான் வரைந்த ஓவியம் தொடர்பாக ஒரு விளக்கத்தையும் அவர் பிரிட்டன் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதில், "புலம்பெயர்தலை (அகதிகள்) நாட்டின் வளத்திற்கான இழப்பாகப் பார்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது, ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சிரிய அகதியின் மகன்தான். அவர் உலகின் மதிப்பு மிக்க ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கினார். சிரியாவின் ஹாம்ஸில் இருந்து வந்த ஒரு இளைஞரை நாம் அனுமதித்ததால்தான் இது சாத்தியமாயிற்று” என்று குறிப்பிட்டுள்ளார்.அகதிகளாக வருபவர்களில் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கலாம் எனும் கருத்தை முன்வைத்து அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

இந்த ஓவியங்களை அவரது இணையதளத்திலும் (http://www.banksy.co.uk/index1.asp) காணலாம்.


2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள்
torrborder.gif

 சாதரணமாக கேமராக்களில் எடுக்கும்  அனைத்து  புகைப்படங்களும்  தத்ரூபமாக இருப்பதில்லை. அவையனைத்தும்  எடுக்கப்படும் இடம் நேரம் மற்றும் சில கால அளவுகளைப் பொறுத்தே சிறப்பாக அமையும். அதுவும் அதிக இடங்களையும் மக்களையும் ஒட்டு மொத்தமாக ஒரே புகைப்படத்தில் கொண்டு வரும் ட்ரோன் புகைப்படங்களை எடுப்பது என்பது கடினமே.ட்ரோன் புகைப்படங்கள் என்பது பறக்கும் விமானங்களின் உதவியுடன்  பல தொலைவிற்கு அப்பால் இருந்து ஒரு பகுதியையோ  அல்லது  நகரத்தையோ முழுவதுமாக ஒரு புகைபடத்திற்குள் கொண்டு வருவதாகும். மேலும் இவற்றிற்கென  வரையறுக்கப்பட்ட எல்லைகள் என எதுவும் இல்லை என்பதால் ஒரு புகைப்படமே பல அர்த்தங்களை உணர்த்தி விடும்.அத்தகைய அனைத்து அளவீடுகளும் சரியாக அமைந்த சிறந்த  ட்ரோன்   புகைப்படங்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்காக  கீழே 

click in the image to view full size

 NlY6PfF.jpg quggXiV.jpg Df5EODT.jpg
iiwB71c.jpg ydTTdv7.jpg I4W42jm.jpg
axP8P9n.jpg iqW16Ia.jpg Wjcpo7U.jpg
VuNRrbY.jpg3BEbJ0D.jpg

 

வந்துவிட்டது தொலையியக்கியுடன் கூடிய குளிர்சாதனப்பெட்டிகள்
torrborder.gif

 இதுவரை தொலைக்காட்சி  கணிணி  விளையாட்டு சாதனங்கள்  போன்ற இன்னும் சில மின்னணு சாதனங்களை  மட்டும் தான்  தொலையியக்கியுடன்  உட்கார்ந்த இடத்திலேயே இயக்கிக் கொண்டிருந்தோம் . தற்போது அந்தப் பட்டியலில் குளிர்சாதனப் பெட்டியும் வந்துள்ளது .

 நீண்ட காலமாகவே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி தற்போது அறிமுகமாகியுள்ளது.தற்போது இதை பற்றிய முன்னோட்டக் காட்சியினை ஜப்பானியர்கள் அறிமுகபடுத்தியிருந்தனர். இந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி ஒரு வேலைக்காரனைப் போல உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் குளிர்பானங்களை வழங்கும் ஒரு இயந்திர மனிதனாக செயல்படுகிறது. இதனால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் குளிர்சாதனப் பெட்டி இருக்கும் இடத்தை தேடி நாம் போக வேண்டிய அவசியமில்லை.இந்த சிறிய குளிர்சாதனப் பெட்டியே நம்மைத் தேடி வந்து நமக்குத் தேவையானவற்றை அளிக்க வல்லது .


நகரும் தலையும் அதிநவீன பிளாஸ் லைட்டுகளையும் கொண்ட இந்த சிறு குளிர் சாதனப் பெட்டியில் நீங்கள் உங்களுக்கு பிடித்த தின்பண்டங்களையும் குளிர்பதனங்களையும் நிரப்பிக் கொள்ளலாம்.இதனால் உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது வயதானவர்களுக்கு ஒரு உதவியாக இருக்க கூடும்.இதில் சிறிய அளவுடன் கூடிய பொருள்கள் மட்டுமே வைக்க முடியும் என்பது ஒரு குறையாக இருந்தாலும் சாதாரண குளிர்சாதனப் பெட்டியி இல்லாத ஒரு உதவியாளனை இதில் காணலாம் என்ற நம்பிக்கையில் இதனை வாங்கலாம். இது உங்கள் வீட்டை அழகுபடுத்தும் ஒன்றாக அமையும்.

குளிர்சாதனப் பெட்டியின் ஒவ்வொறு பகுதியிலும் ஆறு கேன்களையும் தொலையியக்கியுடன் கூடிய வசதிகளையும் செய்து தருகிறது. மேலும் 2 மணி நேர மின்கலன் சேமிப்பில் ஒரு முழு அறையையும் தொடர்ந்து வலம் வரும் திறன் கொண்டது.இதனை ஹேர் ஏசியா நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர்.இந்த R2-D2 வின் நகரும் குளிர்சாதனப் பெட்டியை வாங்குவதற்கு ஜப்பானுக்கு சென்றால் மட்டுமே முடியும் . இதன் முன் உத்தரவுகளை¥ 998000 செலுத்தி அதாவது $8274 டாலர்களை செலுத்தி பெறலாம் .


சார்ஜராக மாறிய பணப்பை
torrborder.gif

Wallet-perspective-open_2048x2048-185x30

 நாம் அவசரமாக எங்காவது செல்லும்போது போனில் சார்ஜர் இல்லாவிடில் உடனே ஒரு சார்ஜரை எடுத்து பையில்- போட்டுக் கொண்டு போகும் இடத்தில் சார்ஜ் நிரப்பி கொள்ளலாம் என நினைத்து கொள்வோம்.அனால் திருதிஷ்டவசமாக நமக்கு தென்பட்ட  இடங்களில் எல்லாம்  சார்ஜ் ஏற்றும் வசதிகள் இருப்பதில்லை.இதற்காகவே நோமட் நிறுவனத்தினர் பணப்பையை சார்ஜராக உபயோகிக்கும் நுட்பத்தினை அறிமுகபடுத்தியுள்ளனர்.

இதில் பணப்பையிலேயே சார்ஜ் செய்யும் திறனும் இருக்கிறது . இந்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பணப்பைகள் உங்களுக்கு உங்களுக்கு ஒரு இலாபகரமான சார்ஜராகவும் மாறுகின்றன .இந்த பணப்பையை உங்கள் போனிற்கு தேவையான சார்ஜினை கொண்ட ஒரு தொகுப்பினைக் கொண்டுள்ளது . இது சாதாரண சார்ஜர்களைப் போல் இடத்தை அடைத்து கொண்டிருக்காமல் உங்கள் பணப்பையே சார்ஜராக மாற்றுவதால் கையாளச் சிறந்ததே.!
95mm உயரமும் 125mm அகலமும் 25mm தடிமனும் மட்டுமே கொண்டிருப்பதால் மிகவும் எளிதான எடையைஉடைய ஒரு மெல்லிய சிறிதான பணப்பையில் சார்ஜினை சேமிக்கும் திறனை பெற்றுள்ளது . இதுவே ஒரு முழு ஐபோன் 6s ஐ முழுவதுமாக சார்ஜ் ஏற்றும் திறன் கொண்டதாக உள்ளது.

wallet-582x615-284x300-284x300.jpg

பணப்பையில் உள்ள சார்ஜ் தீர்ந்து விட்டால் அதனை எந்த usb சார்ஜரினைக் கொண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதிலுள்ள பிளாஷிங் இண்டிகேட்டர் லைட்டுகள் பணப்பையில் எவ்வளவு சார்ஜுகள் இருக்கிறது என்பதை தெரியபடுத்திக் கொண்டே இருக்கும் . இந்த பணப்பை ஒரு பணத்தை சேமிக்கும் பையாக மட்டுமே செயல்படாமல் சார்ஜினை சேமிக்கும் நிலையமாகவும் செயல்படுவது சிறப்பே ! ஒரே நேரத்தில் அனைத்து சாதனங்களுக்கும்  சார்ஜ் ஏற்றும் வசதிகள் கொண்ட  நவீன சாதனங்கள்  இருப்பினும் இந்த  பணப்பை போன்ற சார்ஜர்   பயனர்களின் அவசர காலங்களில் கண்டிப்பாக கை கொடுக்கக் கூடியதாக அமையும் . ஐபோன்களுக்கு சார்ஜ் ஏற்றும் இந்த பணப்பையின் முன் உத்தரவுகளை $80க்கு பெறலாம். இது நவம்பர் 15ல் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

சிறுவர்களுக்கான ஸ்மார்ட் போன்

ஸ்வைப் (Swipe) நிறுவனம், சிறுவர்கள் பயன்படுத்துவதற்கான ஸ்மார்ட் போன் ஒன்றை, 'ஸ்வைப் ஜூனியர்' (Swipe Junior) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் இதனைப் பயன்படுத்தலாம். சிறுவர்களின் சிந்திக்கும் திறனைச் செயல்படுத்திப் பார்க்கும் வகையிலான செயல்பாட்டினைத் தருவதோடு, வேடிக்கை விளையாட்டுகள் மூலம் கற்றுக் கொள்வதனையும் இந்த ஸ்மார்ட் போனில் மேற்கொள்ளலாம். அதே நேரத்தில், சிறுவர்களின் செயல்பாட்டிற்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் வகையில், சிறுவர்களுக்கான கட்டுப்பாடுகளை செட் செய்து, அவர்களின் பயன்பாட்டினைக் கண்காணிக்கலாம். போனில் ஏற்படுத்தப்படும் தொடர்பு எண்கள், செட்டிங்ஸ் ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். சிறுவர்கள், இந்த ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் இணையத் தேடல், கேம்ஸ் மற்றும் பிற அப்ளிகேஷன்களில் செலவழிக்கும் நேரத்தையும் வரையறை செய்திடலாம். ஜி.பி.எஸ். மூலம், போன் எந்த இடத்தில் வைத்துப் பயன்படுத்தப்படுகிறது என்பதனையும் பெற்றோர்கள் அறிந்து கொள்ளலாம். 

சிறுவர்களுக்கான பல அப்ளிகேஷன்கள் இதில் பதியப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது இந்த ஸ்மார்ட் போன். இதன் யூசர் இன்டர்பேஸ் அமைப்பினைச் சிறுவர்கள் விரும்பும்
வால் பேப்பர் மற்றும் ரிங் டோன்களுடன் மாற்றி அமைக்கலாம். சிறுவர்களுக்கானது என்பதால், கீழே போடுவதால் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் உடைதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இதன் மற்ற தொழில் நுட்ப சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

திரை 4.5 அங்குல அளவில், ஐ.பி.எஸ். டிஸ்பிளே தருகிறது. ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசராகும். இதன் ராம் மெமரி 512 எம்.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4. இதில் 3ஜி இயக்கத்தில் செயல்படும் சிம் ஒன்றினை மட்டும் பயன்படுத்தலாம். பின்புறக் கேமரா 2 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 0.2 எம்.பி. திறனுடனுன் அமைக்கப்பட்டுள்ளது. வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. 

இதன் பேட்டரி 1,900 mAh திறனுடன் உள்ளது. இதன் மூலம் 8 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 120 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,999. ஊதா மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது

புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும் Android 6.1 இயங்குதளம்


கூகுள் நிறுவனம் அண்மையில் Android Masmelos எனும் தனது இயங்குதளத்தின் ஆறாவது பிரதான பதிப்பினை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இதன் மற்றுமொரு பதிப்பாக Android 6.1 இனை அடுத்த வருடம் ஜுன் மாதமளவில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.
 
இப்பதிப்பில் ஸ்கிரீன் மல்டி டாஸ்க்கிங் (Screen Multitasking) எனும் புதிய அம்சத்தினை உள்ளடக்கவுள்ளனர்.
 
இதன் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட திரையில் வெவ்வேறு அப்பிளிக்கேஷன்களில் பணியாற்றக்கூடியதாக இருக்கும்.
 
இது தவிர மேலும் சில அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை தொடர்பான தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குரோம் இயங்குதளத்திற்கான VLC Media Player அறிமுகம்


அனைத்து வகையான வீடியோ கோப்புக்களையும் இயக்குவதற்கு சிறந்த மென்பொருளாக VLC Media Player காணப்படுகின்றது.
இந்த மென்பொருள் ஆனது Windows, OS X, Linux, BSD, Solaris, OS/2, Haiku/BeOS, மற்றும் ReactOS ஆகிய இயங்குதளங்களில் செயல்படக்கூடியதாக ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
 
எனினும் முதன்முறையாக கூகுளின் Chrome OS இயங்குதளத்தில் செயல்படக்கூடிய பதிப்பு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
வீடியோ கோப்புக்கள் தவிர்ந்த ஆடியோ கோப்புக்களையும் இயக்குவதற்கு பயனுள்ளதாக காணப்படும் இந்த மென்பொருள் C மற்றும் C++ ஆகிய கணினி மொழிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.