Sunday 21 May 2017

ரான்சம்வேர் (WANNA CRY)

கணிணி உலகையே அதிர வைத்த ரான்சம்வேர் வைரஸ் மிக விரைவில் தமிழக கணிணிகளில் ஊடுருவும் என்று அஞ்சப்படுகிறது.
ரான்சம்வேர் வைரஸ் இணைய உலகை அதிரவைத்த கணிணி வைரஸ். கடந்த மூன்று தினங்களாக உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய இந்த வைரஸ் மிகவும் வேகமாக இந்தியா முழுமைக்கும் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ரான்சம்வேர் வைரஸ் இருவரது கணிணியை முதலில் தாக்கும் . பின்னர் கணிணியில் உள்ள கோப்புகளை முடக்கும் இந்த வைரஸ் , 300 டாலர்களை மூன்று நாட்களுக்கு செலுத்த வேண்டும் இல்லையேன்றால் ஒரு வாரத்திற்குள் இரண்டு மடங்கு தொகையை செலுத்த வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும். இந்த மிரட்டலுக்கு நாம் அடிபணியாவிட்டால் ஒரு வாரத்திற்குக்கு பிறகு நம்முடைய கோப்புகளை இந்த வைரஸ் அழித்து விடும்.
இந்த வைரஸ் இதுவரை 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கணிணிகளை முடக்கியுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் அரசின் சேவைகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக ஆந்திரா, கேரளா, மேற்கு வங்காளம் , குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள அரசு அலுவலக கணிணிகளை இந்த வைரஸ் பதம் பார்த்துள்ளது.
இந்தநிலையில் இந்த் வைரஸ் தமிழக அரசு அலுவலக கணிணியை தாக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே கணிணியை பயன்படுத்துவோர் மிகவும் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கணிணி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.


|நன்றி : விகடன் டிவி|
VIDEO :
https://www.facebook.com/alexpcs.blogspot.in/videos/630096707197787/

No comments:

Post a Comment