Sunday 21 May 2017

ஆண்ட்ராய்டை விரட்டியடிக்க வருது புது ஓ.எஸ்

 கூகுள் புது தொழில்நுட்பம்
உலகளவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் போன் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு உள்ளது. இது பயன்படுத்துவோருக்கு எளிதாக இருப்பதாலும், இலவசமாகவும், குறைந்த விலை போன்களில் பயன்படுத்தும் வகையில் இருப்பதால் அதிக நபர்கள் விரும்பும் ஒன்றாக உள்ளது.
அதோடு பல்வேறு புதிய வசதிகளை கொடுப்பதோடு, புதுப்புது அப்டேட் கொடுத்துக் கொண்டிருப்பதால் அனைவராலும் விரும்பப் படுகிறது.
தற்போது கூகுள் நிறுவனம் மொபைல் போனில் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கு (Operating System-OS)பதிலாக புதிய ஓ.எஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுள் நிறுவனம் மிக ரகசியமாக புதிய OS உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கூகுளின் இந்த புதிய OS, புஜ்சியாவை அடிப்படையாக கொண்ட Ars Technica என்ற நிறுவனத்தின் யோசனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றது இதன் யூசர் இண்டர்பேஸ்க்கு ஆர்மடில்லோ என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் OS க்கு பெயரிடப்படவில்லை.
இந்த OS புதிய மொபைல் போன்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமையும் என கூறப்பட்டுள்ளது. சிறிய கம்ப்யூட்டர் போல செயல்படும் என்பதோடு, அதன் வேகம் அசாதரணமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த OSன் முதல் பக்கத்தில் நாம் எப்போதும் பயன்படுத்திவரும் ஆண்ட்ராய்டு போன் போல நம் புகைப்படம் வைத்தல், தேதி, நேரம், ஆகியவற்றோடு, நாம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ளும் வசதி, பேட்டரி நிலை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் புதுவித டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இதில் கணிணியைப் போல இரு வேறு அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் இயக்க முடியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment