Wednesday 3 June 2015

விண்டோஸ் 10 - ல் நிறுவனங்கள் தாமாகச் APPS களைப் பதிக்க முடியாது

DwiR7q4.jpg


கம்ப்யூட்டரை வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான உரிமத்தைப் பணம் கொடுத்து வாங்கி, கம்ப்யூட்டர்களில் பதிந்து தருகின்றன. அப்போது, தங்களுடைய நிறுவனங்களின் செயலிகளையும், பிற நிறுவனங்களின் செயலிகளையும் பதிந்து தருகின்றன. இவை உங்களுக்குத் தேவையானவையா என்று அறிந்து கொள்ளாமல், தேவையற்ற பலவற்றைப் பதிந்து தருகின்றன. இவற்றை Bloatware எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இவை சில வேளைகளில், கம்ப்யூட்டரின் செயல்பாட்டு வேகத்தினை மிகவும் மந்தப்படுத்துகின்றன.

இனி வரும் காலங்களில், விண்டோஸ் 10 சிஸ்டம் பதியப்படும் கம்ப்யூட்டர்களில், மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொள்ளாத செயலிகள் எதுவும் பதிந்து தர, மைக்ரோசாப்ட் அனுமதிக்காது என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, டேப்ளட் பி.சி.க்கள், விண்டோஸ் போன்களிலும் இந்த தடை இருக்கும். போன் சேவை வழங்கும் நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் அனுமதி பெற்ற பின்னரே, செயலிகளைப் பதிந்து தர இயங்க முடியும். இதன் மூலம் மையமாகச் செயல்படும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிந்த நிலையில் இயங்குவதை விண்டோஸ் தடுக்கிறது. ஏற்கனவே, ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இது போன்ற கட்டுப்பாடு இல்லாததால், அனைத்து போன்களிலும், பிரிந்த நிலையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின், ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இது போல அதிக அளவில் பிரிக்கப்படாமலே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இனி, விண்டோஸ் இயக்கமும் அதே போல இயங்கும். 

ஆனால், இந்தக் கட்டுப்பாடு, விற்கப்படும்போதே, மொபைல் தயாரிப்பு நிறுவனங்களால், விண்டோஸ் 10 பதிக்கப்பட்டு வரும் போன்களுக்கே பொருந்தும். தற்போது விண்டோஸ் 8.1 இயங்கும் போன்கள், தொடர்ந்து அதனை வழங்கிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்

No comments:

Post a Comment